வெள்ளி, 25 செப்டம்பர், 2015

thirukkuRaL some verses


அரும் பிழைகள்


போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின்,
தேற்றுதல் யார்க்கும் அரிது.
693.

போற்றின் = காத்துக்கொள்ள வேண்டுமென்றால்;

அரியவை = அரும் பிழைகள் (நேராவண்ணம்);

போற்றல்= காத்துக்கொள்ள வேண்டும்;

கடுத்தபின் = அத்தகைய பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்துவிடுமானாலும்;

தேற்றுதல் = அப்புறம் போய் அதைத் தெளிய வைப்பது;

யார்க்கும் = எவருக்கும்;

அரிது= கடினமாகப் போய்விடும்

என்றவாறு.


அரிது என்று ஒருமையில் முடிந்ததனால், "பிழைகளில் ஏதேனும் ஒன்று நேர்ந்தாலும்" என்று உரைக்கப்பட்டது.


நீர் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கிறீர். உமக்குக் கீழிருப்பவர் சில பரிந்துரைகளைச் செய்கிறார். அதை நன்கு ஆராய்ந்து, " இதனால் தொல்லைகள் ஏதும் விளையுமா?" என்று நன்கு சிந்தித்து, பிறகு அப்பரிந்துரையை ஏற்றுச் செயல் படுவதா, அல்லது தள்ளுபடி செய்துவிடுவதா என்று முடிவு செய்ய வேண்டும்.

அப்படி ஆய்ந்து ஓய்ந்து பாராமல், பிழைபடும் ஒரு காரியத்தைச் சிந்திக்காமல் செய்துவிட்டு, பிறகு அதைச் சரிப்படுத்தி விடலாம் என்றால், அது எளிதன்று. அது முயற்கொம்பாகிவிடும்.

ஸ்பெக்றம் விவகாரம் இதற்கோர் எடுத்துக்காட்டு.

Here Naayanaar is not concerned with common or routine faults. Ariyavai = those faults which may lead to dire consequences....
Even one such fault will be enough to destroy you!!


ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல;
நாணுடைமை மாந்தர் சிறப்பு.1011



ஊண் = உணவு; உடை = ஆடை; எச்சம் =( உயிர்களுக்கு) உரிய பிற; உயிர்க்கெல்லாம் = உயிர்களுக்கெல்லாம்; வேறு அல்ல = ஒன்றேதான்;

நாணுடைமை = தகாதவை மனம், மொழி, மெய்களில் தொடர்பு படுதலை எண்ணி வெட்கி விலகுவது;

மாந்தர் = மக்கள் ஆவார்தம் ;

சிறப்பு = வேறுபடுத்திக் காட்டும் உயர்வு ஆகும்.

சில ஓலைச்சுவடிகளில் எச்சம் என்பது அச்சம் என்று உள்ளதாகக் கூறுவர் ஆய்வாளர்



20th January 2011, 02:23 PM

#463

which is its permanent residence?

ஒரு நாளைக்கு ஒன்று என்று குறளை ஓதலாம் என்றாலும், வாழ்வின் அன்றாட செயல்பாட்டு நெருக்கடிகளால், அதுகூட முடியவில்லை. ஆகவே நல்ல நூல்களை மிக முயன்று படிக்கவேண்டியுள்ளது.

இப்போது ஒரு குறளை ஓதியறிவோம். உடம்பில் உயிர் எங்கே இருக்கின்றது என்று அறிய முடிவதில்லை. நெஞ்சிலா? தலைப் பகுதியிலா? வேறு எவ்விடம்...என்று தேடிப் பார்க்கிறோம்.

உடலில் இருந்துவிட்டு, என்றாவது ஒருநாள் ஓடிவிடுகிறது...எங்கே போய் விடுகிறது?

இதையும் அறிய முடிவதில்லை.

நிலையான வீடு அமையவில்லை, உயிருக்கு!

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. 340.
B.I. Sivamaalaa (Ms)


28th January 2011, 03:46 PM

#464





bis_mala



Senior MemberSeasoned Hubber

Join Date Oct 2005 Location My Posts 1,790 Post Thanks / Like




How to avoid affliction, sorrow, distress, trouble, etc.....

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் - 628

இன்பம் எனும் ஒன்றை விரும்ப மாட்டான்; துன்பம் என்பது என்றும் எங்கும் எவர்க்கும் வருவதுதான் என்பான்; அத்தகையவன் என்றும் துன்புறுவதில்லை.

துன்பம் என்பது வாழ்வில் இயல்பானது என்பதறிந்தால், பிறகு துன்புறுதல் இல்லையே!.

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும்பேரின்பம்" என்கிறார் மணிமேகலையில், சாத்தனார். அது வேறு கருத்து அன்றோ? (just from memory....). Check the book for accuracy.

Will edit
























கருத்துகள் இல்லை: