வியாழன், 18 டிசம்பர், 2014

நினைத்ததும் இறைவனை மறந்ததும் அவனைநீ

பிஞ்சுக் கனிகள்தமைக் கொன்று குவித்தனை தோழா!
பெருவெடி தனிலென்பு நொறுங்கிச் சிதறின தோழா
கடவுள் மதமிவை தம்மொடு தொடர்பென்ன தோழா
பிஞ்சுகள் செய்திட்ட வஞ்சம் உரைகொள்கைத் தோழா!

கொலைபல செய்தார்க்கு வலைவிரித் தாட்கொளும் தோழா
சொர்க்கமன்றே சிறைசூழ் கம்பிகள் நரகம் அறி தோழா 
மலைபல கடந்தே அடைந்தனை மடமையில் தோழா\
நினைத்ததும் இறைவனை மறந்ததும் அவனைநீ தோழா

பிஞ்சுக் கனிகள்  :  வயதில் பிஞ்சு ;  கனிகள்  (பிள்ளைக் கனி  அமுது)  என்று  போற்றப்படும்  குழந்தைகள்;     ஆகவே:   இது  முரண் தொடை.(இலக்கணம்).
கனி = இனிமை தரும் சிறு பிள்ளைகள்.

சொர்க்கம் அன்றே =  சொர்க்கம் அல்ல; நரகம்;  இதுவும் முரண்.  
பின்  வரும் நரகம் என்பது  அதை உறுதிப்படுத்த.
நினைத்ததும் மறந்ததும் :  இதுவும் முரண் தொடை ஆகும். 
வயது ஒன்றே கருத்தாயின்  கிழவிகள் மட்டுமே கனிகள் என்று தகுதி பெறுவர்.  அது தவறு - அறிக.



கருத்துகள் இல்லை: