வெள்ளி, 12 டிசம்பர், 2014

கீர்த்தி


மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது என்பர்.   கீர்த்தி என்னும் சொல் அமைந்தது எவ்விதமோ?  இதுபோது காண்போம்.

சீர் > சீர்த்தி.  (தி - விகுதி)
இது பின்பு கீர்த்தி என்று மாறியது.

சகர வருக்க எழுத்துக்கள் (ச, சா, சி ....எனும் தொடக்கத்தன )
ககர வருக்கமாகத்  திரிபும்.

எ-டு :  சேரலம்  >  கேரளம் .
            ( சீர்வாணி ) >  கீர்வாணி.
            தக்கிணை >  தச்சிணை > தட்சிணை.  (சேவைக்குத் தக்க  இணை  என்று பொருள் )

பல மொழிகளில் இத்தகு திரிபுகள் உண்டு.

கருத்துகள் இல்லை: