வெள்ளி, 19 ஜூலை, 2013

Baby names


அவிர்மதி (குறள் 1117)
தூவிதா ( குறள் 1120)
பணிமொழி (குறள் 1121)
நுதல்யா (> திருநுதல் குறள் 1123)
அமர்க்கண்ணி (குறள் 1125)
ஏமிதா ( ஏமம் - குறள் 1131)
மலரன்னா (மலர்+அன்னை, மலர், குறள் 1142) Also like a malar
ஒப்பிடுக: தம் +அன்னை, தமன்னை, தமன்னா)
மலர்மதி
அரிதாமணி (குறள் 1153) அரிதாகும் மணி என்பதன் சுருக்கம்.
உய்வினி (>உய்வு) குறள்1174
பசந்தி ( குறள்1188) பச்சை நிறம் தோற்றம்
தந்தவள்
இது வசந்தி என்பதனோடு மயங்கி நிற்கும் பெயர்.

நனவிதா ( குறள்1219)

மாலிகா (மாலை, குறள்1221) 
இது பழைய பெயர் போலாகிவிட்டது.

போதிதா (போது = அரும்பு) குறள்1227

குழலினி. குழலிகா. குறள் 1228

மாயா குறள் 1230 இது பழைய பெயர்

Also pl see:   http://bishyamala.wordpress.com/2013/07/19/baby-girl-names-coined-newly/

நல்லினி:  http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_29.html பார்க்க.



TAMIL RAMAYANAS BEFORE KAMBAN continued

old ramayana interpretation

continued.....from the last post

திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம்



எத்திசைக்குத் திரும்பினாலும் அத்திசையில் ஆங்கிருக்கும் செல்வங்களையும் காப்பதற்குரிய பிறவற்றையும் காத்து நிற்போரைத் திசைகாப்பாளர் என்று பாடலாசிரியர் குறிக்கின்றார். அவ்விடங்களை வெற்றிகொள்ள நினைப்போன் யாராயினும் இத் திசை காப்பாளரை அழிக்கவேண்டும். இல்லையேல் அவண் உள்ள செல்வங்களை எப்படி எடுத்துக்கொள்வது?

இதைப் புலவர் "திசைகாப்பாளர் குறும்பும் தேய" என்ற சொற்களால் தெரிவிக்கின்றார். திசைகாப்பாளர் தேய, அவர்களின் குறும்பும் (வல்லமையும்) தேய என்று விரித்துக்கொள்ளவும்.

கொள்ளை சாற்றி - போர் முரசறைந்து. கொள்ளை என்பதால் இது வெற்றிபெற்ற போர் என்பதாம். வெற்றி பெற்றாலே பகையரசர் நிதியைக் கொண்டுவர முடியுமென்பதால்.

"அப்படிக் கொண்டுவந்த செல்வங்களையெல்லாம்" என்பார், "கவர்ந்து முன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம்" என்றார்.

விழு நிதி = செல்வம். இருப்பில் உள்ள செல்வமே நிதி எனப்படுவது.


திசைகாப்பாளர் யார்?


எண்டிசைகளையும் காத்து நிற்போர் மானிடர்களா? ஆசிரியர் வேறு குறிப்புகள் ஏதும் தந்துள்ளாரா? என்று வினவலாம். அரக்கர்கோ முரசறைந்து அவர்கள் வல்லமை அழியுமாறு படை நடத்தினான் என்பதால், மானிடர்களாய் இருக்கலாம். ஆங்காங்கு ஆட்சி செலுத்தும் நாட்டுக்குரியோரைக் குறித்ததாகலாம். ஆனால் திசைக்கொரு காவல் தெய்வம் இருப்பதாகப் பரவலாகப் பண்டைய மக்கள் நம்பினர். சீனர், கம்போடியர், சாவகத்தார், வியட் நாமியர், இந்தியர் என அனைவரிடத்தும் இத்தகைய நம்பிக்கை இருந்திருக்கிறது. எனவே, திசைகாப்பாளர் என்பது இத்தேவதைகளைக் குறித்ததாகவும் கொள்ளற்கு இடமுண்டு.

தேவதைகளாயின், அவர்களை முற்றாக அழித்துவிடுதல் இயலுமோ? ஆகவே, ஆசிரியர் கவனமாக : "குறும்பும் தேய" என்கிறார். அவர்களின் வல்லமையைக் குறைத்து இடர் ஏதும் செய்யாமல் செய்துவிடின் அதுவே இயல்வதாகும் என்று தோன்றுகிறது. "தேய" என்பதற்கு அழிக்க என்று உரைப்பதில் தவறில்லை யாயினும், "குறைய" என்பதே மிகுபொருத்தம் என்று தோன்றுகிறது.


திசை காப்பாளர் பற்றிக்கண்டோம். திசைகள் நான்கு. இவற்றினுட்பட்ட திசைகளையும் சேர்த்து எண்திசை எனவும் படும். எண்டிசை என்று புணர்ச்சிபெறும் சொல் இதுவாகும். இனி, மேல் - கீழ் அதாவது வானம் பூமி (பாதாளம்) இவற்றின் திசைகளையும் சேர்த்து, திசைக்கொரு காப்பாளர் இருக்கின்றார் என்று கூறப்படுதலும் உண்டு. இவற்றின் விவரத்தை தொன்ம நூல்களில் காணலாம்.

திசைத்தேவர்களின் வல்லமை தேய்வுறவே. ஆங்காங்கு ஆட்சிசெய்துகொண்டிருப்போரின் வல்லமையும் அதற்கொப்பத் தேய்ந்து, இராவணன் போறிட்டவிடத்தெல்லாம் வெற்றியை ஈட்டி, விழு நிதியங்களைக் கொணர்ந்தான்.

"வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்தனன்"

வலிமைவாய்ந்த தம் வீரர்களுக்கு இராவணன் இந்த நிதியையெல்லாம் வகுத்து, விரைந்து அளித்தான் என்பது இதன் பொருள். வீசி என்பது விரைவையும் மேலும் அவனுக்கு இனி அவை வேண்டாதவை என்பதையும் தெளிவாக உணர்த்துகின்ற சொல்லாகும். வகுத்தான் என்ற சொல் அவர்களில் யாவருக்கும் பங்கு கிடைக்குமாறு அந்நிகழ்வு நடந்தேறியது என்பதைத் தெரிவிக்கின்றது

(சிவ பக்தன்)

continued.

இராவணன் சிவப்பற்றாளன் (சிவ பக்தன்) என்பது இராமயணம் சிறிதறிந்தோரும் அறிந்து வைத்துள்ள செய்தியாகும். இப்பாடலும் இதையே தெரிவிக்கின்றது.

கண்நுதல் வானவன் காதலின் இருந்த

என்ற வரி அவன்றன் சிவப்பற்றினை எடுத்தியம்புகின்றது. கண்ணுதல் வானவன் என்பது நெற்றிக்கண் தேவன் என்று பொருள்தரும், மூன்றாவது கண்ணை நெற்றியில் உடையோன் சிவன்.

இப்பற்றும் திண்ணிய பற்றாதலின் "காதல்" என்கின்றார். சிவனைக் காதலித்துக் கிடந்த இராவணன் சீதைபால் ஏன் விருப்பம் கொள்ளவேண்டும்? சீதையைக் கடத்திக் கொண்டு வைத்திருந்தது ஓர் அரசியல் நடவடிக்கைபோன்றது. சீதாப்பிராட்டியை அவன் தொட்டானில்லை.


இருந்த என்ற சொல்லும் மிக்க ஆழமான கருத்துடையதாகும். சிவனைத் தேடி இராவணன் அலையவில்லை. சிவக்காதலினால் ஒரே இடத்தில் சீரிய கூரிய எண்ணங்களின் நிலைநிறுத்தத்தினால் அசைவற்று ஆழ்ந்தமர்ந்ததையே இச்சொல்லாட்சி நம்முன் கொணர்கிறது.


மாலை வெண்குடை அரக்கர் கோவே என்பது:

இராவணன் அரசவையில் (தர்பாரில் ) மாலை அணிந்து வெண்குடையின் கீழ் அமர்ந்து தனது அலுவல்களை கவனிக்கும் பழக்கமுடையவன் என்பது தெரிகிறது. இது மன்னர் பிறரும் பின்பற்றிய முறைதான். இராவணன் அரக்கர்கோ என்ப்பட்டாலும் அவன் பிராமண மன்னன் தான்.

அவனை அரக்க பிராமணன் (அல்லது பிரம்ம ராட்சஸன்) என்றாலும், ராட்சஸனானது அவன் செயல்களாலா அல்லது பிறப்பினாலா என்று தீர்மானிப்பது கடினம். செயல்களால் என்று கூறின் பிறப்பினால் என்று வாதிடுவர்.


"குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுற"
இஃது இராவணன் கைவலிமையைக் குறிப்பிடுகிறது. அவனுடைய வலிமை வாய்ந்த கைகள் ஒரு குன்றினையும் ஏந்தும் வலிமை வாய்ந்தன என்கிறார் இவ்வாசிரியர். தடக்கை - வலிமை வாய்ந்த கைகள். இராவணன் பல கரங்களை உடையவன்.

விழு நிதியத்தைப் பங்கிட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கையில், அவனது அத்தனை கைகளும் அவ்வேலையில் முற்றும் ஆழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தன.

தொழிலுற = செயல்பட, வேலைசெய்ய.

இவ்வழகிய பழம்பாடல் இப்போது நன்கு புரிவதுடன். இத்தகு பாடல்களை படித்தின்புறுவதற்கு நம் நேயர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும் என்று நம்புவோம். 


கம்பனுக்கு முந்திய பழைய  இராமாயணம்  அல்லது இராம காதைப் பாடலிலிருந்து ஒன்றை விளக்கி உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். சுவையாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன் .

நன்றி.  முற்றும்.

-------------------------------------------------------------------------------------------------------------

Also pl see:   http://bishyamala.wordpress.com/2013/07/19/baby-girl-names-coined-newly/



TAMIL RAMAYANAS BEFORE KAMBAN continued

old Ramayaana stanza - interpretation

continued  from previous post

இனி, வேறொரு விதமாகவும் சொல்வதற்கு இடமிருக்கிறது? அது என்ன? மேல் என்பது மேற்றிசை அல்லது மேற்குத் திசையையும் குறிக்கலாம். வானவர் என்று தமிழர்களால் கருதப்பட்ட சிற(வ)ந்த நிறமுடைய மக்களின் (அல்லது தேவர்களின்) நகரமும் பக்கம்தான் என்பதுதான் அது. எனினும் அது நகரம் மட்டுமே! பாடலாசிரியர் அதை நாடு என்று சொல்லவில்லை. நாடில்லாத நகரம். ம்! சிங்கப்பூர் மாதிரி. ஆசிரியர் சொல்லாததை யெல்லாம் இல்லாதது என்று எடுத்துக்கொள்வதிலும் இடர் ஏற்படலாம். சரி, நாகருடையது நாடு; நகரமன்று. சற்று விரிந்து பரந்தது, -- நகரத்துடன் ஒப்பிடும்போது.

அதேபோல், நாகர் கீழை நாட்டவர் என்பதும் பெறப்படும்.யார் அவர்கள்? நாகர் என்ற பெயர்தான் பின் நாயர் என்று திரிந்துவிட்டது என்பது ஓர் ஆராய்ச்சிக் கருத்து. நாகங்களை வணங்கியதனால் அப்பெயர் எய்தினர் என்றனர். அதுவன்று! நயத்தல் என்பதன் அடியாகப் பிறந்த சொல்லே நாயரென்பது, நாகர் என்பது வேறு என்கிறது இன்னோர் ஆய்வு. நய+அர் = நாயர். முதனிலை நீண்டதென்பர். நாயக் என்ற சங்கத வடிவமும் வந்து குழம்புகிறது ! நாகரென்பார் மஞ்சள் நிறத்தவர், மங்கோலிய வழியினர் என்பதும் கூறுவதுண்டு. இராவணாதிகளைத்தாம் கேட்டறியவேண்டும். இப்போதுதான் நாகாலாந்து இருக்கின்றதே.... அங்குபோய்ப் பார்த்தால்..! அந்த நாகர்தாம் இந்த நாகரோ? ஆய்வு செய்யுங்கள்.

ஆக நாம் பாடலில் அறியவேண்டியது, நாக நாடு இராவண தேயத்திற்குப் பக்கத்தில் என்பதுதான். எனவே மேலது கீழது என்பன மேற்றிசை கீழ்த்திசை (West and East ) குறித்தனவாகவுமிருக்கலாம்.

continued in the next post
Also pl see:   http://bishyamala.wordpress.com/2013/07/19/ for other highlights



TAMIL RAMAYANAS BEFORE KAMBAN continued

continued from previous post

"கீழது நாகர் நாடும் புடையன" என்ற வரியைப் படித்தறிவோம்.

கீழது என்றது, இங்கு மேலது என்பதற்கு முரணாக வந்து அழகு தருகிறது. சரி, மேலது வானமென்றால், கீழது யாது? பாதாளமோ? இல்லை! இராவணன் ஆண்ட இடத்துக்குப் பக்கத்தில் நாக நாடு இருந்தது என்பது கருத்து. கீழது = வானத்தின் கீழ் அருகில் என்று பொருள் படும். புடை = பக்கம் என்று கூறுக. இங்கு "புடையன" என்று தொளிவுறப் பன்மையில் கூறியதால், வானத்து மூவா நகரும் கீழிலங்கிய நாகர் நாடும் பக்கமிருந்தன என்று பொருள். 

தொடரும்.

Also pl  visit :   http://bishyamala.wordpress.com/2013/07/19/baby-girl-names-coined-newly/ and other highlights



TAMIL RAMAYANAS BEFORE KAMBAN continued

continued from previous post

மேலது வானத்து மூவா நகரும்
கீழது நாகர் நாடும் புடையன


என்ற வரிகளை வாசித்துணர்வோம். மேலது வானத்து என்பதை வானத்து மேலது என்று மாற்றிக்கொள்ளவேண்டும். மூவா என்றால் மூப்பு அல்லது பழமை அக்டையாத, என்றும் பொருள் கூறலாம். புதுப்பிக்கப் படாத எந்த நகரும் பழமை அடைதல் இயற்கை. இங்கு தெய்வ நகர்பற்றிக் கூறுவதால், "இது காலத்தால் மாற்றமே அடையாத" என்று கொள்ளலாம். 

மூ என்பது மூன்று என்ற எண்னையும் குறிக்கலாம். எனவே, மூவாம் = மூன்றாகும் என்று கொள்வதிலும் தவறில்லை. மூ ஆகும் = மூவாகும் = மூவாம் = மூவா என்று வரக்காணலாம். மூன்று நகர்களில், ஒன்று பூமியிலும், மற்றொன்று வானிலும் இன்னொன்று இறைவனுடைய இருப்பிடத்திலும் இருப்பதாகக் கூறுவர். இம்மூன்றும் வானத்து நகரங்களே ( aerial cities) என்று புலவர் கருதியிருக்கலாம்.
தொடரும்.

Notes


மூன்று நகரங்கள் பற்றிய தொன்மக் கதை எக்காலத்தது, இப்பாடல் எக்காலத்தது என்று தெரிந்தாலன்றி, இவ்வரியின் பொருளை இடரின்றி உரைத்தலியலாது.

மூவா - மூப்படைதல் இல்லாத என்று முடித்தல் எளிது.

மூ ஆ நகர் என்று பிரித்து, "ஆ நகர்" வினைத்தொகை என்று கொள்ளலும் ஒன்று


Also pl see:   http://bishyamala.wordpress.com for lit. discussion generally.



TAMIL RAMAYANAS BEFORE KAMBAN

கம்ப நாடனின் இராமாயணம் பாடப்பெறு முன்னரே தமிழர் இராம சரிதையை நன்கறிந்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.தமிழில் இராமாயணங்களும் இருந்தன என்று தெரிகிறது. அந்த முழு நூல்களும் கிடைக்காவிடினும், சில செய்யுள்கள் உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் கிடைத்துள்ளன. அப்படிக் கிட்டியவற்றுள் ஒரு செய்யுளை இப்போது காண்போம்.


“மேலது வானத்து மூவா நகரும்
கீழது நாகர் நாடும் புடையன
திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக்
கண்நுதல் வானவன் காதலின் இருந்த
குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்
தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை
வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்தனன்
மாலை வெண்குடை அரக்கர் கோவே.


இங்கு அரக்கர் கோ என்றது இராவணனை. தோல்வியறியாத போர்த் திறனுடைய அவனது அடி நிழலில் தங்கள் வாழ்க்கையை அமைத்துகொண்ட போர்மறவரோ பலராவர். தான் வென்ற விழு நிதியம் பலவற்றையும் அவன்
அவர்கட்குப் பகிர்ந்து அளித்தான். அரக்கர் கோவாயினும் இரக்க குணம் படைத்தவனே அவன். 

கம்பரில்போல் விருத்தச் செய்யுளாய் இல்லாமல் இஃது ஆசிரியத்தால் பாடப்பட்டுள்ளது. கம்பர்காலத்தில் ஆசிரியம் அருகிவிட்டதென்பர்.

Also pl see:   http://bishyamala.wordpress.com/ for more posts on oher aspects of lit,



Devotion to Mother.


அன்னையும் தந்தையும்

பல சுவைக் கவிதைகளில் இப்போது ஓர் அழகிய இனிய பாடலைப் பதிவுசெய்வோம். இப்பாடலை எழுதிய கவிஞர் , இசைமேதை பாப நாசம் சிவன் என்று அறிகிறோம்.

அன்னையும் தந்தையும் தானே --- பாரில்
அண்டசரா சரம் கண்கண்ட தெய்வம்;

தாயினும் கோயிலிங் கேது -- ஈன்ற
தந்தைசொல் மிக்கதோர் மந்திரமேது;
சேயின் கடன் அன்னை தொண்டு -- புண்ணிய
தீர்த்தமும் மூர்த்தி ஸ்தலமும் இதிலுண்டு!

தாயுடன் தந்தையின் பாதம் --- என்றும்
தலை வணங் காதவன் நாள்தவறாமல்
கோயிலில் சென்றென்ன காண்பான் --- நந்த
கோபாலன் வேண்டும் வரம்தருவானோ?

பொன்னுடன் ஒண்பொருள் பூமி ---- பெண்டிர்
புத்திரரும் புகழ் இத்தரை வாழ்வு,
அன்னை பிதாவின்றி ஏது -- மரம்
ஆயின் விதையின்றிக் காய்கனி ஏது

This song was rendered by M K Thyagaraja Bhagavathar in the film "Haridass" 

சனி, 6 ஜூலை, 2013

அத்துப்படி

அத்துப்படி என்ற சொல்


அத்துப்படி என்ற சொல் இதுபோது வழக்கில் உள்ளது. இது ஒரு பேச்சு வழக்குச் சொல்.

இது எங்ஙனம் அமைந்தது என்று ஆராயவோமா?

ஐயப்பாடு (சந்தேகம்) யாதுமில்லாமல் மனத்தில் பதிந்து தெளிவாய் இருப்பதான ஒரு நிலையைக் குறிப்பதே இந்தச் சொல்.

அற்று  என்பது அத்து என்று பேச்சுவழக்கில் மாறியுள்ளது.

அற்று = ஐயம் திரிபுகள் அற்று.

படி என்பது மனத்தில் பதிந்திருக்கும்  (படிந்திருக்கும் ) நிலை.



அறு >( அற்று) என்ற  ஒரு பகுதியுடன் "இயை" ந்து "ஆய" து   "அற்று இயை ஆய(ம்)" = அற்றியாயம் => அத்தியாயம் என்று வந்ததுபோன்ற ஒரு சொல்தான் அத்துப்படி என்பதும்  ".

இயை + ஆய(ம்) என்பதில்  "ஐ"  கெட்டது.



ஓப்பீடு :-

சமத்கிருதத்திலும்  " passing , lapse , passage ; passing away , perishing , death"  என்பனவே   பொருளாம்  . இந்நிலை  அறு  என்னும்  வினைச்சொல்லுக்குப் பொருந்துவதே ஆகும்.   

திங்கள், 25 பிப்ரவரி, 2013

மாதமொன்று வெண்பா

மாதமொன்று வெண்பா மதிபெறப் பாடினும்
சாதனை யாகிடும் சின்னாளில் -- யாதொன்றும்
தீதில்லை தென்மொழியின் தேனைப் பருகிடத்
தோதில்லை என்பதோ பொய்.

கவிதையில் மட்டும் மாதமோர் வெண்பா என்று வருவதில் இழுக்கில்லை என்றாலும் இங்கு மாதமொன்று என்று பாடப்பெற்றுள்ளது. அந்த விதிவிலக்கு தேவையற்றதாகிவிடுககிறது.




ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

தத்தித் தொடரும்,,,,,,

  இது  ஒரு கவிக்கு உற்சாகமூட்ட எழுதியது. 28.11.11.


தத்தித் தொடரும் தமிழ்க்கதைப் பாடலில்
குத்திய கூலத்துக் கோதகற்றி --- வைத்தாற்போல்
கொஞ்சமாய்க் கொஞ்சமாய்க் கூர்ந்தெண்ணி நன்கெழுதி
விஞ்சுதன் ஆர்வம் வெளிப்படவே -- அஞ்சா
திடுகின்ற உங்கள் இடரணையாச் செய்கை
எழுகின்ற வெண்ணிலவு போல வளர்க
ஒழுகுசீ ரோடே உடன்.

கண்ணுக்குள் காதலி


கண்ணுக்குள் காதலி சென்றமர்தல் கற்பனையே 
பெண்ணுக்குப் பேதலிப்பு ஏற்படுத்த -- மண்ணுலகில்
ஆடவர்செய் தந்திரம் அஃதென்றே நான்சொல்வேன்
ஓடுவளோ பெண்ணவர்கள் பின்.

போராட்டம்

கூடத்தில் தங்கிக் குளத்தில் குளித்துவிட்டு
மாடத்தில் நின்று மகிழாமல்----வீடகன்று
போராட்டம் ஏனோ? புகைவீச்சு துன்புறுத்தத்
தாலாட்டும் ஆழிபுக் கார்.

புக்கார்  -  புகுந்தார் ;  ஆழி  - கடல் ,

போராட்டத்தில் ஈடுபடுவது துன்பம்  தருவது என்பது  கருத்து 
 புகை  என்றது கண்ணீர்ப்புகையை ,

புதன், 20 பிப்ரவரி, 2013

thumb drive fault

விரலகை வென்பது வேலைசெய் யாமல்
வரவிய லாதுபோ யிற்றே == பரல்களாய்
நீங்கள் வரைந்தவை நின்றன நேர்த்தியாய்!
தேங்குதல் உற்ற பிற,

அண்மையில் எனது தம்ப் டிரைவ்  (or flash drive) என்னும் விரலகைவு கெட்டுவிட்டதால் நானெழுதியவை பல தொலைந்துவிட்டன, இதன்காரணமாக  ஒரு கவிதை அரங்குக்குச் செல்லமுடியாமல் போய்விட்டது. அதைப் பற்றிய பாடல் இது.

வரவிய லாதுபோ யிற்றே என்பதை  வர இயலாது  போயிற்றே என்று வாசிக்கவும்  வெண்பாவின் அசை சீர் காட்டுவதற்காக  இப்படி எழுத
நேரிடுகிறது. ( வகையுளி)

 விரல் அகைவு என்பதில் அகைவு என்பது    :   அகைத்தல்  drive.

இதில்  "நீங்கள் " - வேறொரு  கவிஞரைக் குறிப்பது,

பரல்  என்பது சிறு கல், விதை முதலியவை குறிக்கும் . விலையுயர்ந்த  கற்களையும் குறிக்கும். மணிப்பரல் என்றும் பொருள்படும்.



A praise

மடை திறந்  தன்ன கவியருவி !  நைகரா  !
கிடைதிறம்  கண்டு கிளர்வுற்றார்  பல்லோர் 
நடையில் அலங்காரம் நன்மொழிகள் இன்னும் 
உடையதாம் இஃதிங்  குரை 

This was written to praise someone who was writing poems well. But was not communicated to him thereafter.

நைகரா -   நயாகரா நீர்வீழ்ச்சி, கிடைதிறம்  -  கிடைக்கப்பெறும் தன்மை . பல்லோர் -  பலர் 



  

யாவருக்கும் இடமுண்டு

கற்பனை பாவின்  கலையே   அதன் நிழலில்
 நிற்பன பாவலர்தம்  நெஞ்சங்கள் ---- வெற்பென
ஓங்கும் உயர்நிலையில் நின்றோரை, மற்றோரைத்
தாங்கும்  நிலத்தாய் மடி .




பாவின் கலையே =  கவிதைக்குரிய கலையாம் ;   வெற்பென -  மலைபோல  ;

நிலமானது  கற்பனையில்   வாழ்வோரையும்  பிறரையும்   தாங்கிக்கொள்கிறது  யாவருக்கும்  இடமுண்டு  என்பது என்பது  கருத்து
  

சின்னஞ்சிறு கிளிகள்

சின்னஞ்  சிறுகிளிகள்   சீரும்  அழகேதான்
 பன்னிவரும்  சொல்லசைகள்  தாமும்  பயிலமுதே
தின்னவொரு வண்பழமாம் தேனாம் மயங்காமல்
உண்ணப்பே ரூற்றாம் உரை

இது சிறுபிள்ளைகள் பற்றியது

அசை   சீர்    தளை  முதலியவற்றைக்  பாவலர்கள்  பாட்டெழுதும்போது  கவனித்துச்  சுவைத்து  எழுதுவர் .  ஆனால்   சின்னப் பிள்ளைகளின்  பேச்சிலே இவையெல்லாம்  உள்ளன,  அவர்களின் பேச்சில் வரும்   சீர்களும் அழகுதான். அவர்கள்  பன்னிப் பன்னிப்  பேசுகையில் வரும் அசைகளும் பயிலும் அமுதமே, பழம், தேன் . நீரூற்று  என்பவையெல்லாம் அவர்களிடம் பேசுகையில்  காணலாம் .  எத்துணை  இனிமை !!    




Moon trapped by gravity of earth

 நிலமகள்  நீள்கவர்ச்சி நேர்ப்பட்ட  நிலவும்
உலவும் சுழல்சுற்றின் உண்மை ---சொலவும்
அறிவியலார் முன் நிற்க ஆங்குப்பா வல்லோர்
 நெறிவியக்க நீங்கிற்றே காண்


இதன் பொருள் :நிலமகள்  -  பூமியின்,  நீள் கவர்ச்சி -நீண்ட இழுப்புச் சக்தி ;
நேர்ப்பட்ட  -  வழிப்பட்ட ;  நிலவும் - சந்திரனும் ;  சுழல் சுற்றின் = சுழன்றுகொண்டும்  சுற்றிக்கொண்டும்;   உலவும் உண்மை -  நடைபெறுகின்ற தென்ற சரியான நிலையை ;  சொலவும்  = சொல்லவும் ;  அறிவியலார் = விஞ்ஞானிகள்  ; பா வல்லோர் -  கவிவாணர்கள் ;  நெறி  = பாடும்  முறைகள் ; வியக்க -  நாம் வியக்கும்படியாக ; நீங்கிற்றே காண்  -  அவறிவியலார் வழியினின்றும்  நீங்கிச் செல்கின்றதே , காண் = கண்டுகொள்ளுங்கள் 

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

.the nature of moon

தண் பாலாய் வானில் தகதகக்கும் தட்டனைய
மண்கோளும் ஆகுமே மந்த நிலா ---பண்பாடும்
வண்கவிகள்  வாய்ப்பட்டு நின்றோம்   வரைபாவின்
நுண்ணெறிகள் நூற்றின்  மிகும்

தண்பாலாய்  =  பால் நிறத்தில் ' தட்டனைய - ஒரு தட்டுப்போல் தோன்றும்;
மண்கோள்  - மண்ணாலான உருண்டை; மந்த - குறைந்த ( ஒளி ')
பண்பாடும் = பாடல்கள் இயற்றும்; வண்கவிகள் = சிறந்தகவிகள்;
வாய்ப்பட்டு - இடத்தில் அகப்பட்டு; நுண்ணெறிகள்  - நுட்பமான வழிகள்;
நூற்றின் = நுற்றின் பலவாய்.

 கவிகள்  நிலவினைப்  புகழ்ந்து பாடுகிறவர்கள் .  நாம்  அவர்களின் வாய்ப்பட்டு நிற்கின்றோம்  வாய் = இடம் . அதாவது  அவர்களின் கற்பனை வலைக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்  அவர்களின் பாக்களில்  பற்பல சொற்பயன்பாட்டுத் தந்திரங்களை அவர்கள் கையாளுகின்றார்கள் ஆகவே வரைபாவின் நுண்ணெறிகள் நூற்றின் மிகும் எனப்பட்டது 


பூமி உதயம் The rising earth



நிலவில்போய் நின்றிமை பூக்கவிப் பூமி
புலர்வதும் என்னே பொலிவாம்  --- சிலவாகும்
இத்தகு ஓவிய   இன்காட்சி  ஒத்தவொன்று
மெத்தக் கவின்விளைப்ப தின்று.


இமைபூக்க  = பார்க்க;  பொலிவு = அழகு; புலர்வது = உதயமாவது
இன்று = இல்லை. கவின் - அழகு.

நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பூமியின் உதயத்தின் அழகை காட்டுகின்றன. இதை இப்பாடல் எடுத்துச் சொல்கின்றது.

பூமி உதயம்  

moon and sky,



வானம் இலாநிலவு வண்ணம் இலாஓவம்
நீலம்  தரித்தே நிலைக்குமவள் --- காலமெலாம்
எத்துணை நல்லழகி என்றாலும் வானுடனே
ஒத்தணைய நின்றால் உயர்வு.

ஓவம் =  ஓவியம் ; நீலம் -= வானத்தின் நீலநிறம் ;  ஒத்தணய  - ஒன்றுபட்டு; இது  வானத்தை 1நிலவின் காதற் கணவனாய்க் கற்பனை செய்தது .

cauliflower


காலிபிளவர் என்பது நாம் சமைத்துண்ணும் ஒருவகைக் காய்கறியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்.
இது ஸ்காட்லாந்துச்சொல் " கோலே", ஜெர்மானிய "கோல் ஸ்லா" இலத்தீன் காலிஸ் முதலியவற்றுடன் தொடர்பு உள்ளதென்பர். இதன் அடிப்படைச் சொற்பொருள் கால்- கோல் (stem, stalk. stick) , பூ ஆகியவை என்பர்.

தமிழில் கால் - கோல் என்பவை நீட்சி குறிக்கும் சொற்கள். கால் > காலி எனின் " காலை உடையது" என்று பொருளுரைக்கலாம்.

இந்தக் கால்கள், காலிபிளவரில் ஒன்றுக்கு ஒன்று பிளவு பட்டு நிற்பவை. பிளவு >பிளவர். இது ப்லோரா (flora) என்ற இலத்தீன் சொல் எனப்படுகிறது. பிளவுறு என்பதும் பிளவுர்> பிளவர் என்று திரியலாம். அல்லது அர் என்பது சொல்லீறு என்று விடுத்துவிடலாம்.

பூக்களும் மொட்டு பிளந்து வருபவையே ஆகும். பிளவர் என்பதும் நன்கு ஆராயத்தக்கதாம்.

தமிழ் ஒரு மூலமொழி என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பல இலக்கம் சொற்களை ஆய்ந்து ஆய்ந்து இதனை விளக்கலாம்,

காலிபிளவர் என்பது தமிழென்று நிறுவுதல் நோக்கமன்று. We just want to refer to the Tamil roots of the Latin language.

விநாயகர்


vinAyakan

விநாயகர் பிற்காலத்தில் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுள் என்று ஆய்வாளர்கள் கூறுவர். விநாயகன் என்ற சொல்லும் வி+ நாயகன் என்று பிரிக்கப்பட்டு, சமஸ்கிருதச் சொல் என்று சொல்லப்படும்.
இனித் தமிழிலும் இதற்குப் பொருள் கூறுவதுண்டு,

வினை + ஆயகன், அதாவது வினைகளை ஆய்ந்து அவற்றை ஒதுக்குபவன் என்பதாம். வினை என்பதில் உள்ள "ஐ" கெட்டுப் புணர்ந்ததென்பர். ஆய் = ஆய்தல். அகம் - அகன்.

ஆயகன் - ஆய்  அகன் :  இது வினைத்தொகை.

இனி வி நாயகன் என்று பிரித்துப் பொருள்  கண்டாலும்  வி  என்பது விழுமிய என்பதன் குறுக்கமே. நாயக என்பது நயத்தல் (விரும்புதல் ) என்பதனடியாகப் பிறந்த சொல்லே என்பதுண்டு . இதற்கு  விளக்கம் தேவைப்பட்டால் எழுதுவோம்.  

ஆபாசம்


ஆபாசம் "green speech or conduct "

பச்சையாக நடத்தல், பச்சையாகப் பேசுதல்.


பச்சை, பாசி, பாசம் (பாசம் பிடித்திருப்பது). பாசிலை, பச்சூன், பச்சிலை, பச்சோலை, பச்சைப்பெருமாள், பச்செனல், பாசிமணி, பாசிப்பயறு, பசுத்தல், பைங்கிளி, பசுங்கிளி, பசும்பால் (பச்சைப் பால்), பசலை -- என்று பச்சை குறிக்கும் அல்லது நிறத்தோடு தொடர்புகொண்ட சொற்கள் பல

பகரத் தொடக்கத்துச் சொல், பா என்று நீண்டும், பசு-, பை- என்று திரிந்தும் நிற்பதை மேலே கண்டுகொள்ளலாம்.

இடக்கரானவற்றைப் பேசுங்கால், அவற்றை அடக்கிப் பேசாதவன், "பச்சையாகப் பேசுகிறான்" என்பது வழக்கு.

பாசம் என்பது பச்சை குறித்தது.

இனி, பாசம் என்பது ஆபாசம் என்று ஆகாரம் பெற்று பச்சையாகப் பேசுதலை, அல்லது நடந்துகொள்ளுதலைக் குறிக்கும்.

தொல்காப்பியர் காலத்தில் வானைக் குறிக்கும் காயம் என்பது, ஆகாயம் என்றும் ஆகாசம் என்றும் திரிந்தாற்போல.

ஆகாயம் - காயம் ஆவது.

ஆபாசம் - இடக்கரடக்கல் இல்லாதது. பச்சை ஆவது.

ஆபாசம் குறிக்கும் சமஸ்கிருதச் சொற்கள், அனார்ய, அசப்த என்பன.

how the moon helped lovers


காட்டில் காணமற் போன காதலளைக் கண்டுபிடிக்க உதவிய மதியை இப்பாடல்  புகழ்கிறது.


இருங்கானுட் சென்றோன்  இருளில் மறைந்தான்
உறங்காது உறைந்தாள் தலைவி---சுணங்கா(து)
ஒளியால் வழிகாட்டி ஒன்றுபட நேர்வித்(து)
அளியால் அணிசெய் மதி.

அளி -  அருள் , அணி - அழகு 

திங்கள், 18 பிப்ரவரி, 2013

சென்றவிடம் எங்கோ-?

தீபாவளிக்கு நண்பர் சின்னக்கண்ணன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அவருக்கு இந்த வெண்பா"

பெரியகண்ணன் பேர்புகழ்தீ பாவளி நாளில்
சிறியகண்ணன் சென்றவிடம் எங்கோ-- நறியதேன்
ஒத்த தமிழ்ப்பாடல் ஒன்றிவண் தந்தவரும்
மெத்தப் புகழ்ச்சிபெறல் விட்டு.

இருபொருள்:

தந்தவரும் -- தந்து+அவரும், தந்தவர் +உம்.

கணினிக் கோளாறு சமாளிக்கும் முறை


கணிணியில் கோளாறினால் சில வேளைகளில் நாமேழுதுவது தொலைந்துவிடுகிறது! இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.  இந்த வெண்பாக்கள் தோன்றின.



தாளில் எழுதிப்பின் தன்மடி மீதுவைத்துத்
தோளின் சுமைஇறக்கு மாபோலே---மீளவுமே
தட்டச்சு செய்தாலே தான் தொலையா நிற்றலுறும்
விட்டச்சம் வீற்றிருக்க லாம்.

(பொருள்:  தான்தொலையா நிற்றலுறும்  -  தான் தொலையாமல் நிற்கும். விட்டச்சம்  - அச்சம் விட்டு என்று முறைமாற்றிப் பொருள்கொள்க.  )

திருத்தம் திறப்படுத்தும் காலை அழிந்தே
உறுத்தி உளைச்சல் உளத்தே -- கருத்திழந்தேன்
தூங்கி அதன்பின் தொடங்கவிலை இன்னுமே
ஆங்கிருப்பின் ஈங்களித்தல் அன்பு.

(இது இணையதளத்தில் அதைப்படித்தவர்கள் வைத்திருந்தால் தந்துதவும்படி  வேண்டுகிறது.
 ஆங்கு = அங்கு ;  ஈங்கு = இங்கு 
உறுத்தி உளைச்சல் உளத்தே -   உளத்தே  உளைச்சல் உறுத்தி  என்று முறைமாற்றுக, )