புதன், 18 ஏப்ரல், 2018

அபி என்னும் முன்னொட்டு: அமைப்பு, பொருள், பயன்.



இந்தியத் துணைக் கண்டத்தில் சொற்களைப் புனைந்து மொழிகளைப் பண்படுத்திய பல்வேறு தரப்பினரும் பல்வேறு தந்திரங்களைக் கையாண்டுள்ளனர் என்பது இதுகாறும் நம் இடுகைகளை நன்`கு படித்துவருகிறவர்கள்  அறியக் கிடக்கின்ற ஓருண்மையாகும்.

அந்தத் தந்திரங்கள் யாவை என்பதைப் பட்டியலின்றியே நீங்கள் கண்டின்புறலாம்.

இப்போது ஒரு தந்திரத்தை அறிந்துகொள்வோம்.

அபி என்பது இப்போது ஒரு சொல்லின் முன் வைத்து ஒட்டப்படும் ஒரு துண்டுச்சொல்லாகப் பயன்படுகிறது.   இப்படித் துண்டுச் சொற்களை முன்பக்கம் ஒட்டி ஒரு சொல் சற்று வேறுபட்ட பொருளைக் குறிக்கும்படி செய்துவிடலாம்.

அபி என்பதன் பல்வேறு பொருள்களில்,  அதன் பின் என்பதுமொன்று.

எடுத்துக்காட்டு:   விருத்தி -  அபிவிருத்தி.

விருத்தி என்பதை முதலில் அறிவோம்.

ஒன்று முன் இருந்த நிலைமையைவிட நன்றாகத் தோன்றும்படி செய்து காட்டுவது விருத்தி ஆகும்.

விர் > விரி;
விர் > விரு.

மூலக்கருத்து ஒன்றினை விரிப்பதுவே ஆகும்.  அந்த விரிப்பு,  இடத்தின்  விரிப்பு, வசதியின் விரிப்பு,  இடுபொருள்களின் விரிப்பு.  அழகின் விரிப்பு என்று பலவகைப்படும். விருத்தம் என்பதும் விரிப்பே.  விருந்து என்பதுவும் விரிப்பே.

நம் வீட்டில் எப்போதும்  அம்மா. அப்பா பிள்ளைகள் மட்டும் உண்கிறோம். ஒரு நாள் பக்கத்து வீட்டு நண்பர்களையும் அழைத்து உணவு தந்து மகிழ்த்துவதானால்  ஆக்கும் உணவிலும் உண்ணும் ஆட்களிலும் விரிவு உண்டாகிவிடுதலை நீங்கள் உணரலாம்.  இந்த விரிப்பின் அழைப்புக்கு வந்தவர்களைவிருந்து” “விருந்தினர்என் கிறோம்.

ஒன்றை விருத்தி என்றாலே அது விரிப்பே ஆகும்.   முன்னில்லாத எதுவும் இப்போது புதியதுதான்.

விருத்தியை அறிந்தோம்.   

விரி > விரித்தி >  விருத்தி எனினுமாம்.

ஒரு விருத்தி செய்தபின் அதற்குப் பின்னும் அதிற்பல கொண்டுசேர்த்தலே
அபிவிருத்தி.

அ = அதன்;  பி = பின்.   இவ்விரண்டும் சேர்ந்து அபி என்ற முன்னொட்டாகிச் சொற்கள் அமைந்துள்ளனவென்பதும் காண்க.

அபிவிருத்தி என்பதாவது  :  விருத்திக்குப்பின் வரும் விருத்தி.

பின் வருவது முன் உள்ளதினும் மிகுதியாம் ஆதலால் அபி என்பதற்கு மிகுதிப் பொருளும் வந்தது.

மானம் என்பது அளவு, பெருமை, மதிப்பு .

அபிமானம் என்பது மானத்தின்பின் ஒன்றன்மேல் வரும் பற்றுதல்..

ஒன்றைச் செகுத்தல் என்பது கொல்லுதல். கொன்றபின் செகுத்த பொருட்குச் செய்விக்கப்பெறும் சடங்குகள் பூசனைகள் முதலானவை  “அபி சேகம்”.  இங்கு சேகம் என்பது செகு+அம் = சேகம்.  முதனிலை திரிந்த தொழிற்பெயர். இது பின் ஷேகம் என்றானது. 1

அவி (அவித்தல்)  என்பதும் அபி என்று திரியும்.  இன்னும் பிற பொருளும் தரவுகளும் உள. அவற்றைப் பின்னர் ஒருக்கால் நோக்கிமகிழ்வோம்.

இங்கு சொல்ல வந்தது அபி என்ற முன்னொட்டின் பல பரிமாணங்களில் ஒன்றையே.

-------------------


அடிக்குறிப்பு:

1   அபிசேகம்:  இப்போது இதன் பொருள் மாறிவிட்டது.   உயிர்க்கொலை இல்லாத அபி-சேகத்தில் மலரும் நீரும்  தீயும் மந்திரங்களும் இன்ன பிறவும் பயன்படுத்தப்பெற்று நிகழ்வுகள் நடைபெறுகின்றன.  ஆகையால் இற்றை நிகழ்வுகள் கொண்டு இதன் ஆதிப்பொருளை அறிதல் ஆகாது. நடைமுறைக்கேற்ப வேறு சொற்பொருள் காணுதல் புதிய உத்தியாகும்.



செவ்வாய், 17 ஏப்ரல், 2018

அம்மாவாசை பேச்சுச்சொல்.



அமாவாசை என்பது முன் விளக்கப்பட்டுள்ளது.
அமாவாசையும் ஓர் அழகிய இரவே ஆகும்.  அன்று நிலவில்லை ஆகையால் வானம் முழுக்கருமை கொள்கிறது.  ஒளியும் ஒளியின்மையும் இயற்கையின் நிலைகள் ஆகும்.  ஒளி சிவமும் இருள் விண்ணும் ஆகும்.  விண்ணு என்பது விட்ணு > விஷ்ணு எனவும் திரியும் என்பதறிக.

அம் =  அழகு. 
அம்மை அழகு.

மா =  கருமை;  அதுவே பெரிது எனவும்  பொருள்தரும்.
வானில் நிலவில்லா இரவில் இருள் பெரிது.   ஆதலின்  காரிருள் ஆகும்.  மா என்பது  சிறந்த பொருளுடன் இங்கு திகழ்கிறது,

வாய் -  இடம்.

ஐ -  விகுதி.


வாயை என்பது வாசை என்று திரியும்

நிலவில்லையேல் வானம் இரவில் ஒரு பெரிய கரிய இடமாகிவிடுகிறது
என்பது பொருள்.

அம்மாவாயை என்பது அம்மாவாசை என்றே சிற்றூர்களில் சொல்லப்படும்.  அது பின் அமாவாசை என்று குறுக்கப்பெற்றுப் பிறமொழிகளிலும்  ஏற்கப்பட்டது.

இன்னும் அம்மா-வாசெ என்றுதான் பேசும்போது சொல்வர்.

அம்மாவாயை >  அம்மாவாசை >  .அமாவாசை > அமாவாஸ்யா 

அன்று வானம் ஓர் அழகிய பெரும் இருளிடம். வேறொன்றும் இல்லை.

ஒளியிலும் அழகு;
இருளிலும் அழகு.

அம்மாவாசையில் நோன்பிருப்பது பண்டைத் தமிழர்
வழக்கம் தான். பிள்ளைப்பேறு கிட்டும் என்று நம்புவர்.




திங்கள், 16 ஏப்ரல், 2018

அடங்கிய அங்கம்.

இவற்றைக் கவனமாகக் கருதி அறியுங்கள்:

அங்கம் என்பது

உறுப்பு   என்றால் அது உடம்பில் அடங்கும்;
முண்டம் ( கழுத்திலிருந்து தொடையின் தொடக்கம்
வரை) என்றால் அது  முழு உடம்பில் அடங்கும்;
எலும்பு என்றால் அது உடம்பில் அடங்கும்;
வேதங்களின் இணைப்பாகிய அறிவியல் என்றால்
அது வேதத்தில் அடங்கும்;
ஆகமம் என்றால் சமய நூல்களுள் அடங்கும்;
சார்புப் பகுதி என்றால் அது அதன் முழுப்பகுதியில்
அடங்கும்;
ஆன்மா என்றால் பரமான்மாவினுள் அடங்கும்.

இப்படியே அங்கம் என்பது அதனை உள்ளடக்கிய
ஒன்றில் அடங்கிவிடும்.

இப்படியான ஒரு பொதுப்பொருளுக்கு எப்படிப்
பெயர் வைப்பது?

அது மற்றொன்றில் அடங்குவதால்,  அதற்கு
அடங்கு+ அம் = அடங்கம்
என்றுதான் பெயர் வைக்கவேண்டும்.
அடங்கம் என்பது ஒரு நல்லிசைச் சொல்லாக
ஒலிக்கவில்லை.  டகரம்
வல்லெழுத்தாக இருந்து பல்லை உடைப்பது
போல் தெறிப்பை ஏற்படுத்துகிறது.
Please note that at this particular point we are (and anyone of this
conclusion is ) arriving at a subjective conclusion. To another
"adangam" is a completely normal formation worthy of being
retained as it sounds.  It is all about what you are used to.

இதை எளிதாக்க வழி: டகரத்தை எடுத்து
வீசுவதுதான்.

அடங்கம் >  அங்கம்.

ஒருவகையாக வழிக்கு வந்துள்ளது.

Note that Tamil grammar had authorised such formation
of words as இடைக்குறை .

தருமம் > தம்ம(ம்)   (பாலித்திரிபு)
பெருமான் >  பெம்மான்

அகங்கை > அங்கை
பீடுமன் > பீமன்.  பீஷ்மன்;
இராவண்ணன் > இராவணன்;
விழுபீடணன் (விழு, பீடு , அணவு)  > விபீஷணன்;
மாந்தன் அண்மிய >  அனு மன்.

இப்படிப் பல உண்டு.  எழுத்தை எடுத்துவிடுவது
நன்மை பயக்கும்.

யாவும் அடங்கியது அங்கம்.
அங்கத்துள் அங்கமும் அங்கமே.

மறுபார்வை செய்யப்படும்.

இணைய - தொலைபேசி இடர்கள்.

இணைய வலை,  தொலைபேசி இடர்கள்.

நம் சிவமாலா வலைப்பூவினை  www. மூலம் பெறமுடிய
வில்லை என்று தெரிகிறது.  உங்களுக்கு இடர் ஏதும்
இருந்தால்  "கூகிள்" வலைக்குச் சென்று அங்கிருந்து
நம் வலைப்பூவிற்கு வரவும்.

அடுத்து,  மலேசியாவின் 2ஜி தொலைபேசிகளெல்லாம்
சிங்கப்பூரில் இப்போது ஓடவில்லை என்பதை  அறியவும்.
அதிகாரத்துவ வெட்டு நாள்: 18.4.2018. அதற்கு முன்னாகவே
எங்கள் சிம் ஒன்று தொடர்பறுந்து கிடக்கிறது.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

குற்றங்களை முற்றும் தடுக்க......





வெண்பா

குற்றம் இழைப்போர் துணிந்தே  இணைந்தொன்றாய்

அற்றமே பார்த்துத்தாம் ஆற்றும் செயலுக்கு

முற்றும் முயன்றாலும் மூவுலகில் ஆகாதே

முற்றத் தடுக்கும் முனைப்பு.

கருத்து:

எந்தக் குற்றத்தையும் முற்றாகத் தடுத்துவிட
இயலாது. சிலவற்றைக் காவல்துறை தடுக்கலாம்.
எல்லாவற்றையும் தடுப்பது முயற்கொம்பு.  முடியாதது.
காவல்துறை சரியாகச் செயல்படுகிறதா என்று
மந்திரிகள் கவனிக்கலாம்.  கண்டனங்களை வெளியிடலாம்.
அதற்குமேல் அவர்களாலும் இயலாது.

திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது என்று பட்டுக்கோட்டை
சொன்னது ஓர் அப்பட்டமான உண்மை.

மூவுலகு:  யாம் இதை  மூத்த உலகு (வயதாகிவிட்ட
இவ்வுலகு)  என்ற பொருளில் பயன்படுத்தியிருக்கிறோம்.
மூதேவி :  மூத்த தேவி என்பதுபோல. இச்சொல் பின்னாளில்
தீயகுணங்கள் படைத்தவள் என்ற பொருளுக்கு வந்துவிட்டது.
மூவுலகு என்பதோ  மூத்த உலகு என்ற  பொருளில் பெரிதும்
கண்டுகொள்ளப்படவில்லை. அதற்குப் பதிலாகத்
:தொல்லுலகு என்றுதான் நம் முன்னையப் புலவர்கள்
கையாண்டிருக்கின்றனர்.

இது பூச்சிகளின் உலகம்.



பூச்சிகள் ஆளிடம்  பூவுலகம் மாந்தற்குப்
பேச்சென்ன பேரரசு யானென்று  ---  கூச்சல்
குறைக்கசின் கோலிகள் கூத்தடிக்கும் கூடி
நிறைப்பன நீணிலம் காண்.


பொருள்
இவ்வுலகம் முழுமையும் பூச்சிகளே ஆட்சி செய்கின்றன.
மனிதன் தானே பேரரசு என்று பேசிக்கொண்டிருக்கிறான்;
பாக்டீரியாக்கள் எங்கும் கூத்தடிக்கின்றன;  இந்த
உலகத்தை நிறைப்பவையும் அவையே.  நீ அறிந்துகொள்,

சின்கோலிகள் =  பாக்டீரியாக்கள்.

பலவிதச் சின்கோலிகளாலும் பாதிக்கப்பட்டு
மருந்து உட்கொண்டிருப்போரும் இங்கு நிறைந்துள்ளனர்.
மனிதன் பெருமைகொள்ள எவையுமில்லை. 

இந்த வெண்பாவைப் பாடி மகிழ்க.


Please note an unknown virus is inserting dots in the text area freely
at will.  We have removed some dots. As they may return, we shall
review this and other posts whenever time permits. There are
also extra charges for us.








கள்ளக் கடிதம் வந்தது.....

2015 தேதி இட்ட கடிதமொன்று இப்போது தான்
மின்னஞ்சலில் வந்து கிடைத்துள்ளது.  எழுதியவர்
சொல்லாய்வு இலக்கியம் முதலியவற்றில்
எம்முடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத்
தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலெதுவும் எழுதவில்லை.இவர்
யாரென்று தெரியவில்லை. 

இவர் வேண்டுமானால் இங்கு ஓர் உறுப்பினர்
ஆகி இடுகைகளுக்குப் பின்னூட்டம் இட்டு
தாம் ஓர் இயந்திர மனிதரல்லர் என்று உறுதி
செய்ததன்பின் ,  மீண்டும் எமக்கு மடல்
வரையும்படி யாமே  அழைப்போம்.

இது கள்ளப் பரவுமென்பொருளால் அனுப்பப்
பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்.

பந்தியும் சிப்பந்தியும் ( பல்- பன் அடிச்சொல்)

பந்தி என்னும் சொல்
பந்தி என்னும் சொல் எப்படி அமைந்தது? 
 பணம் பந்தியிலோ குலம் குப்பையிலேஎன்பது ஒரு தமிழ்ப் பழமொழி.
பணம் பந்தியிலே குணம் குப்பையிலேஎன்று தொடங்கும்      ஒரு திரைப்பாடலை எழுதிய கவி, அமரர் கா.மு. ஷெரீப் என்று தெரிகிறது. குலத்தினும் பணமே ஆற்றல் மிக்கது என்கிறது பழமொழி. “ இந்தப் பழமொழியை அறியாதவன் மனிதன் இல்லேஎன்`கிறார் கவிஞர்.
ஆனால் பந்தி என்ற சொல்லின் தோற்றம் அறிந்துகொள்ள இந்தப் பழமொழியின் உதவி தேவை இல்லை.   பந்தி என்பது பலர் அமர்ந்து உண்ணும் வரிசை அல்லது பல வரிசைகள். அங்கனம் வரிசையாக அமர்ந்துண்ணும் உணவுக் கொடை அல்லது விருந்து. 1[
பல்: அடிச்சொல்.   பொருள்:  பொருந்தி அல்லது கூடி யிருத்தல்.

இதனடிப் பிறந்த சொற்கள் சிலவற்றையாவது  அறிந்துகொள்வோம்.
பல்   -.  மேவாய் கீழ்வாய் எலும்புகளுடன் பொருந்தி நிற்பது.
பல் > பல்+து >  பற்று.    (௳னம் பொருந்தியுள்ள நிலை).
பல் > பல்+ தி > பன்றி.   ( நீண்ட பற்களை யுடைய விலங்கு).
பல் >  பன் > பன்+து > பந்து.
.நோ:  சில் >  சின் > சிந்து .
( சிந்து என்பது சிறியது என்று பொருள்படும் சொல். அளவடிக்குக் குறைந்த நிலையினது யாப்பியலில் சிந்து எனப்படும்.  சிந்து  என்பது சிறு நூலையும் குறிக்கும் என்றார் பி.டி. சீனிவாச ஐயங்கார் எனும் வரலாற்றறிஞர்.  இது சிந்து நதி அளாவிய நிலப்பகுதிகளில் விற்கப்பட்டதனால், நதியும் அப்பெயர் பெற்றது. இச்சொல் பின் ஈரான் சென்று ஆங்கு இந்து ஆனது.  பின் இத்திரிபு மீண்டும் இந்தியாவிற்கு வந்தேறி இறுதியில் ஒரு மதத்திற்கும் பெயரானது என்பதை முன் எடுத்து எழுதியுள்ளோம்.)
எங்கெங்கு உலவினும் சில், சின் என்ற அடிகள் இன்னும் நம்மிடை நின்று நிலவுதல் நம்  பாக்கியமே ஆகும். இது நிற்க:
பந்து என்பது கயிற்றாலோ துணியாலோ சுருட்டிப் பிடிக்கப்பட்ட உருண்டை.  இப்போது செய்பொருள்கள் மாறிவிட்டன.
பல் > பன்  > பந்தி.  (பன்+தி).
.நோ:   முன்+தி > முந்தி.
பலர் பொருந்தி அல்லது சேர்ந்து உண்பதே பந்தியாகும்.  

திரட்சி என்பதன் முதலெழுத்தாகிய தி,  ஈண்டு விகுதியாய் நிற்றலும் பொருத்தமே ஆகும்.
பல் பல:  ஒன்றுக்கு மேற்பட்டவை..   (   இரண்டும் அதற்கு மேற்பட்டவையும் எனினுமது.)
==========================
இனிச் சிப்பந்தி என்ற சொல்லையும் அறிவோம்.  

சில் > சி.  இதன் பொருள் சிறிய என்பது.

பல்> பல்+தி = பந்தி. பற்றிக்கொண்டிருப்போர் என்று இங்கு பொருள்.
பற்றுதல் என்பதும் பல்+து என்றமைவது.

பல்>பன்>பன் தி > பந்தி.   லகரனகரப் பரிமாற்றத் திரிபு.

சிறிய வேலைகளுக்காக ஒரு முதலாளியைப் பற்றிக்கொண்டிருப்போர்,

சில் பந்தி > சிப்பந்தி.
பல் என்ற அடிச்சொல் பொருந்துதல் என்னும் கருத்துடைய
முன்மையான அடிச்சொல் ஆகும்.  சில்பந்தி நன்`கமைந்த தமிழ்ச்சொல்.

அடிக்குறிப்பு:

1  (விருந்து என்னும் சொற்குப் புதுமை என்னும் பொருளும் உண்டு.)
விருந்து + அம் = விருத்தம்: வலித்தல் விகாரம்.  பொருள்: புதுவகைப் பா. 
பின் திருத்தம் செய்யப்படும்.


சனி, 14 ஏப்ரல், 2018

வட என்னும் சொல்.

வடுகு என்பதோ   மொழிப்பெயர். இது வடக்கில் வழங்கும்
மொழி என்ற பொருளுடையதாகிறது. பெரிதும் தெலுங்கு
மொழியைக் குறிக்கிறது.  ஆனால் வடுகு என்ற சொற்குப்
பல பொருள் உள்ளது .  இரத்தினம் முதலிய கற்களில்
உள்ள குறையையும் குறிக்கும்.  இப்பொருளில் இது
வடு என்ற சொல்லின் தொடர்புகொண்டது.  நூலணிதலை
யும் குறிக்கும். இசையையும் குறிக்கும்.

இங்கு ஆய்வது திசைப்பெயர் மட்டுமே. இது வட என்ற
சொல்லினோடு பிறப்புத் தொடர்புடைய சொல்.

வடு  >வட > வடக்கு.  ( வடதிசை).
வடு > வடுகு   ( வடக்கில் வழங்கும் மொழி)
வடு > வடு+ஐ = வாடை.  ( வடக்குக் காற்று).
வடு> வட > வட+ ஐ = வாடை எனினுமாம்.

இங்கு சிறப்பாக வடக்கு என்று குறிக்கப்பட்டது:  தமிழ் நாட்டின்
வடக்கில் உள்ள நிலப்பகுதி.

வட திசை உயர்ந்தும் தென் திசை தாழ்ந்தும் இருப்பதால்
வடக்கிலிருந்து ஆறுகள் தெற்கு நோக்கி வடிகின்றன.
எனவே வடதிசை நீருடைய திசை ஆகும். நீருள்ள
திசையே வளமான திசையுமாகும். ( இந்தியா).

வள் > வடு > வடு+இ =  வடி.
வள் > வடு > வடக்கு.

இதன் காரணமாகவே தெற்கண மூர்த்தி ( தட்சிணா
மூர்த்தி ) வடக்கில் அமர்ந்துகொண்டு தெற்கைப்
பார்ப்பதாகத் தொன்மம் கூறும்.

தென்கண் உள்ளது தெற்கணம்.    தென் > தெற் (புணர்ச்சித்
திரிபு. கண் = இடம்; கணம் = இடம்.
தெற்கணம் > தெக்கணம் > தக்கணம்> தட்சிணம்.

பக்கி> பட்சி  ; தக்கிணை> தட்சினை.

தக்கு = நிலத்தாழ்வு எனலும் உண்டு.

இவற்றை மனத்தில் வைக்கவேண்டும்.


பதுமை

பதுமை என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

பொம்மை என்ற சொல்லைப்பற்றி முன்பு ஓர் இடுகையில்
விளக்கியுள்ளோம்.

பதுமை :  இச்சொல் பதுக்கு, பதுங்கு, பதுக்கம், பதுக்கை, பதுங்கல்,
என்னும் தமிழ்ச்சொற்களுடன் தொடர்புடையது.

இவற்றின் அடிச்சொல் "பது"  என்பது.

பத்ததி, பத்தி,  பத்தாயம்,  பத்தியம்,  பந்தல்.  என்பனவும்
தொடர்பு காட்டும் சொற்கள்.

பம்மல் என்ற தொழிற்பெயர், கவித்தல் மூடுதல் என்றும்
பொருள்தரும்.

இவற்றுள் எளிதான ஒரு சொல்லிலிருந்து புறப்படுவோம்.

பழங்காலத்தில் நெகிழிப் பொம்மைகள் கிடையா..  பஞ்சை
உள்ளிட்டுத் துணியால் தைத்து   மூடியே பதுமைகள்
செய்யப்பட்டன.  பஞ்சு துணிக்குள் பதுங்கி நின்றது.

பதுங்குதலாவது உள்ளமைதல். புலி பதுங்குதல்
பூனை பதுங்குதல் திருடன் பதுங்குதல் முதலியவற்றால்
ஏற்பட்ட  செயல்சார் பொருளழகினை விடுத்து அடிப்படை
உள்ளமைதலினை உன்னுதல் வேண்டும் .

பது என்ற அடிச்சொல்லே  பதி என்று திரிந்தது.
பெண்வழிக் குடும்ப நிலை ஓங்கியிருந்த காலத்தில்
பெண்ணை மணந்துகொண்டு பெண் வீட்டிலே
பதிந்து வாழ்ந்த மாப்பிள்ளை பதியெனப்பட்டான்.
தம்பதி என்ற சொல் தமக்குள் ஒருவருக்கொருவர்
பதிந்து வாழ்ந்த நிலையைக் குறித்தது. பதிதலாவது
அகத்திருந்து வாழ்தல். தளத்தில் பதிந்து படைகளைக்
கவனித்தவன் தளபதி.

பதுமை > பதுமல் (பது+ம்+அல்) > பம்மல்.

பம்முதல் என்பதும் வினைச்சொல்.

(பதுமை )< (பதுமு ) > பம்மு .> பம்மை > பொம்மை .

பொதியப்பட்டது  பொய்.

பொய்ம்மெய் > பொம்மை என்பதும் அது. பொய்
என்ற சொல்லின் அமைப்பை விளக்குங்கால் இது
தெளியும். 


ஏனைச்சொற்களைப் பின்பு  அறிவோம்.
அவற்றுள் விளக்குதலுக்குரியவை சில உள.

பம்ப்  pump  என்ற ஆங்கிலச் சொல்லைக் கவனிக்கவும்.
அங்கு காற்று அன்றோ பதுங்கி உள்ளிருக்கிறது.
பம்முதல் என்ற சொல்லைக் கருதவும்,

பதுமை என்பது மட்டும் அறிந்து பின்வரும் பிறவற்றுக்கு
எதிர்நோக்குக . 

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

தலைவர் சொல்லைத் தட்டலாம் - நன்மையானால்

ஒரு பெரிய சமயத் தலைவர் இருந்தார்.  இவரைப்
பின்பற்றிச் சென்றுசொண்டிருந்த சீடர்கள் அல்லது
அடியார்கள் பலர் கூடவே இருந்தனர்.  தமக்கு உடம்பு
அவ்வளவு சிறந்த நிலையில் இல்லை என்று
கவலையுடன் இருந்த இவர்,  தாம் இறந்தபின்
தம்மை எப்படி அனுப்பிவைப்பது என்பதைப் பற்றிச்
சீடர்களுக்குச் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இவர்தம் அடியார்கள் அவற்றை மிகக் கவனமுடன்
உள்வாங்கிக் கொண்டனர்.

இவருக்கு முன்னிருந்து மறைந்த தலைவர்களின்
சடலங்களெல்லாம் நன்`கு  பாடம் செய்யப்பட்டு,
கெட்டுப் போகாமல் வைக்கப்பட் டிருந்தன , ஆதலால்
இவர் அருகிலிருந்த அடியார்கள்: " கவலை வேண்டாம்,
உங்கள் உடலையும் அப்படியே பாடம் பண்ணி
வைத்துவிடுகிறோம்" என்றனர். இவருக்கோ
மனநிறைவு ஏற்படவில்லை. "அழிய வேண்டிய
உடலை எதற்குப் பாடம் செய்து வைத்துக்கொண்டு
இருக்கவேண்டும்,  மேலும்  பாடம் பண்ணுகிற
வர்கள் பல உள்ளுறுப்புகளையும் அகற்றிவிடு
வார்கள்;  அவர்கள் கைகளும் என் உடல்மீது
புரண்டு என் உடலை மாசுபடுத்திவிடும்" என்று
கூறிவிட்டு,  "வேண்டாம், வெறும் வாசனை
முதலியவற்றைத் தெளித்து நேரம் வந்ததும்
புதைத்துவிடுங்கள்"  என்று சொல்லிவிட்டார்.

சிறிது காலம் சென்றபின் இவர் மறைந்துவிட்டார்.
இவருடைய அடியார்கள் இவர் சொன்னதை
மீறமுடியாமல் உடலைப் பாதுகாக்கும் பாடம்
பண்ணுதலை விடுத்து  நல்ல மணப்பொருள்களைத்
தெளித்துப் புதைப்பதற்குத் தயார்ப்படுத்தினர்.

பலருக்கும் அருள் வழங்கிய வள்ளல் ஆதலால்
இவர் உடல் கெட்டுப்போகாது என்று எதிர்பார்த்தனர்
அடியார்கள்.  இவரைப் புதைப்பதற்கு ஒரு வாரம்
ஆகிவிட்டது. அந்த நாட்டு அரசர் மற்றும்
அதிகாரிகள் உட்படப் பலர் வந்து குழுமினர்.
இவர் கிடத்திவைக்கப்பட்டிருந்தார்.  அவர்கள்
நோக்கும்போது உடல் சிறிது அழுகிவருவது
போல் அவர்களுக்குத் தோன்றியது. இவர்தம்
உடலும் ஊதிப்பெருத்துவிட்டது. சீக்கிரம்
எடுக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அதன்படியே இவர் சடலம் புதைக்கப்பட்டு
இடம் தூய்மைப்படுத்தப்பட்டது.

தம் தலைவர் ஒரு விதத் தலைத்  தடுமாற்றத்தில்
சொல்லியதை அப்பால் வைத்துவிட்டு சரியானது
எது என்று எண்ணிச் செய்யாமையால் அங்கு
குழப்பம் நேர்ந்துவிட்டது.  யார் எதைச் சொல்லிச்
சென்றிருந்தாலும்  அது ஒத்துவராது என்று
தெரிந்துவிட்டால் அதைத் திருந்தச் செய்வதே
சரியாகும்.   பிணம் பதம் செய்வோர் கைகள்
பட்டால் தம் உடலுக்குக் கேடு என்று சொல்லி
விட்டார் என்பதற்காக அதை நாறவைத்துக்
கொண்டுசென்று புதைப்பது எப்படியும்
பொருத்தமற்றது அன்றோ?

பாடம் பண்ணுவோர் கைபட்டிருந்தால் பிணம்
கெட்டுப்போகாமல் நிகழ்ச்சி நன்றாகவே
நிறைவேறியிருக்கும். இந்த வேலைகளில்
ஈடுபடும் வல்லுநர்கள் உண்மையில் தங்கள்
தொழிலின்மூலம் ஒரு மாபெரும் சேவையைச்
செய்துவருகின்றனர்.

இது ஐரோப்பியக் கண்டத்தில் நடைபெற்ற      ஒரு
நிகழ்வு ஆகும்.

திருத்தம் பின்