திங்கள், 5 மார்ச், 2018

நிறங்களின் பெயர்கள்



ஆதி மனிதன் இன்று நாமறிந்துள்ள பலவேறு நிறங்களையும் அறிந்துவைத்திருக்கவில்லை.  அவனிடம் வெண்மையும் செம்மையும் குழம்பிவிட்டது.  கொஞ்சம் வெளுத்த தோலனை “நல்ல சிவப்பாக இருக்கிறான்” என்று சொல்லுவது இன்றும் அவ்வப்போது செவிகளை எட்டுகின்றது. மஞ்சளும்  வெள்ளையும்கூட குழப்பத்துக்கு உட்பட்டுவிட்டன. சீனப்பெண்  போல வெள்ளையாக இருக்கிறாள் என் கிறார்கள். இத்தகைய வரணனைகளால் பொருள்நட்டம் ஏதும் ஏற்படாமையின்,  நாம் கவலை மிகக் கொள்வதில்லை.

கருமையை நீலமென்றும் நீலத்தைக் கருமை என்றும் நம் நூல்கள் குழப்புவன.  நீலத்துக்கு வேறு பெயர்கள் ஏதும் தமிழிலும் இல்லை. பிறமொழிகளிலும் கண்டறிய இயலவில்லை. நீலக்குயில், நீல நட்சத்திரம் என்பன நம்மிடை மகிழ்வை உண்டாக்கும் தொடர்களாகின்றன. குயில் கருமையா ?  நீலமா? நீலக்குயில் என்ற திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கானக் கருங்குயிலே என்று பாடுங்கள்.

“நீலவானும் நிலவும் போலே”

“வட்டக் கரிய விழி ~ வானக் கருமை கொல்லோ?”

நீலமென்ற சொல் அமைந்த விதம் முன் விளக்கப்பட்டுள்ளது.  எம் பழைய இடுகைகளைக் காண்க.  நீலமென்பது தமிழரைப் பொறுத்தவரை நிற்கும் நிறம்.  அத்துணை எளிதாக ஓடிவிடாது. அதனால் நில்+ அம் = நீலம்  என்ற அழகிய சொல்லமைந்தது.  நீல நிறம் வானத்தை விட்டுப் போவதுமில்லை. கடலைவிட்டுப் போவதுமில்லை.  வெள்ளை வேட்டியில் பட்டுவிட்டால் எளிதில் போகாமல் நிற்பதாகிறது.   
நீலமென்பது அழகாய் அமைந்த தமிழ்ச்சொல் ஆகும். நில் என்பது நீல் என்று வந்தது  முதனிலை திரிதல்.  அது அம் விகுதிபெற்று நீலம் ஆயிற்று,  முதனிலை திரிந்து (  நீண்டு ) விகுதிபெற்ற தொழிற்பெயர்.  அதாவது வினைச்சொல்லிலிருந்து தோன்றிய ஒரு பெயர்ச்சொல்.

கருப்பு, கறுப்பு என்ற சொற்களின் ஆதிப்பொருள் மறைத்தல் என்பது. கரு> கரவு என்ற சொல்லிலிருந்து இதனை உணர்க.  “கரவுள்ள உள்ளம் உருகும்” என்ற குறளை முன் கொணர்க.   கரு+ வு = கரவு.  பிறமொழிகளிலும் கருப்பு என்பது மறைப்புப் பொருளில் வரும்.  “பிளாக் மார்க்கட்” என்ற தொடரை நினைத்துக்கொள்க. மறைவான சந்தை என்பது பொருள்.   தீமை அனைத்தையும் மறைத்து நன்மையையே வெளிக்கொணர்வோன் இறைவனாதலின்  கரு> கிரு> கிருட்டினன் > கிருஷ்ணன் என்பது பொருத்தமான் பெயர்.    

இருட்டு> இருட்டினன் > கிருட்டினன் எனினுமாம். நிலவின் ஒளியற்ற பகுதி : இருட்டினபக்கம்  அதுவே கிருட்டினபக்கம் பின் அது கிருஷ்ணபக்கம். இரண்டெழுத்து மாற்றம் உங்களைத் தடுமாறவைக்கும்.

நிறம் என்பதே நிற்பதுதான்.  நில்> நிறு என்று திரியும்.  அம் விகுதி பெற்று நிறம் ஆயிற்று. இப்படிச் சொற்களை அமைத்த நம் முன்னோர் நல்லறிஞரும் சொல்லறிஞரும் ஆவர்.

அவர்களை வாழ்த்துவோம்.

மெய்யெழுத்தல்லாத விடத்துத் தோன்றிய
சில புள்ளிகள் திருத்தப்பட்டன: 21.11.2018




வழியைக்காட்டி மோடிசெய்த மோடி.



வடகிழக்கு இந்தியாவிலும் வாகை!


சிறந்த தலைவருள் சீரால் உயர்ந்தார்
விரைந்தவர் பால்செல வேண்டி விழைந்தவர்
நாட்டில் பலரே நயம்பயில் பெண்டிர்க்கு
வீட்டின் நலங்களைக் கூட்டியே தந்தவர்.
தேயம் கெடுக்கிற தீயது பொய்ப்பணம்
மாய ஒழித்த மதிசேர் மகுடம்
தலையலங்  காரம் நிலைபெய ராத
சிலையெனச் சீர்த்த வலம்பெறு மேன்மையர்.
இந்து நிலங்களில் இன் கொடி நாட்டினர்
பிந்திப் பிறமா நிலங்களில்  நீட்டி
அனைத்துத் தரப்பும் அரியராய் ஏற்க
நினைத்த படியே நெட்டொளி வீசினர்.
நேர்மைக் குணங்கள் நிலைபடு சிந்தனை;
கூர்மை அரசியல் பண்புகள் கொண்டார்
பெரும்பழ இந்தியா சிங்கையைப் போலும்
உரியன செய்ய உயர்வழி காட்டும்
தலைமை அமைச்சுந ரேந்த்ரக்
கலைசார் மோடியில் மக்கள் மயக்கமே.

ஞாயிறு, 4 மார்ச், 2018

History: partition of india who responsible


This article may be of  interest to those doing history:

http://www.firstpost.com/india/jawaharlal-nehru-led-congress-not-muhammad-ali-jinnah-was-responsible-for-partition-farooq-abdullah-

Farooq Abdullah's statement of history is correct as far
as we are informed by other writers of history and those
who were politicians involved in the project. It was not that
Nehru was solely responsible. He was not. But he held the
key to the entire outcome and he could have averted it. He
could have put in suitable measures and provided appropriate
remedies;  the agitation for partition would then have
evaporated. His reasons for not acting:  Jinnah was from
a different political party;  Jinnah did not participate with
him  and was an opponent in the erstwhile elections.

கண்டுபிடியுங்கள்,

சிந்திக்கவும் எழுதவும் படிக்கவும் நாம் கல்விச்சாலைகட்குப்
போகிறோம்.  நம் அகவைக்கு முந்தியவர்கள் எழுதிவைத்துள்ள
பலவற்றைப் படித்துத் தெரிந்துகொள்கிறோம். நாம்
தெரிந்துகொண்டவற்றுள் பலவும் புண்ணியமற்றவை.  எங்கள் பூகோள
( நிலநூல் )  ஆசிரியர் மிகவும் உழைப்பெடுத்து  பிரமபுத்திரா
நதி ஓடும் வங்காளதேச நிலப்பகுதியில் என்னென்ன விளைகிறது
என்று சொல்லிக்கொடுத்தார்.  இதைப் படித்து மனப்பாடம்
செய்து பரீட்சை எழுதினோம்.  வெற்றியும் அடைந்தோம்.
சான்றிதழ் பெற்றதால் பல்கலைக்கழகம் போனோம்,  அப்புறம்
இன்னொரு தேர்வு.

இந்தக் கட்டுரைப்பகுதியில் வந்துள்ள சொற்கள் சிலவற்றுக்கு
எப்படி அமைந்தன என்பதைக் கண்டுபிடித்துக் கூறுங்கள்:

சிந்தித்தல்:

சாலை:

அகவை:

பூக்கோளம் மற்றும் பூகோளம்.

பரீட்சை.

ஆசிரியர்.

வெற்றி

 

சனி, 3 மார்ச், 2018

பாட்டும் ஓசையும்



பாடலென்றால் அதற்கு ஓசை முன்மையான அமைப்பு ஆகும்.  இலக்கணம் பார்த்துக்கொண்டு ஓசையைக் குலைத்துவிடலாகாது.  இதை மிகப் பழங்காலத்தில் தொல்காப்பியரே உணர்ந்திருந்தார். ஆகையால் சீர்களை ( அதாவது பாட்டுச்சொல்வடிவங்களை) நீட்டவும் குறுக்கவுங்கூட ஒப்புக்கொண்டார்.  அவர்மட்டுமல்லர்; ஏனை இலக்கணியரும் அவ்வாறே செய்தனர்.  பிறமொழிகளிலும் இருந்த பெரும்புலவர்களும் அவ்வாறே இசைந்தனர்.

தொல்காப்பியர் வாழ்ந்த பழங்காலத்தில் கட்டளையடி இருந்தது.  ஓர் அடிக்கு இத்தனை எழுத்துக்கள் தாம் இருக்கவேண்டுமென்று விதி இருந்தது.  அது என்ன பாட்டு என்பதற்கேற்ப அமைந்திருந்தது.  இப்போது நாம் பெரும்பாலும் இத்தகைய எழுத்துக் கட்டமைப்புக்குள் பாடல் அடிகளை உட்படுத்துவதில்லை. பழங்காலத்தில் பாடல்களைப் பாடிக்கொண்டுதான் அமைத்தனர்.  இப்போது பெரும்பாலான கவிதைகள் பாடும்பொருட்டு எழுதப்படுவதில்லை.  ஆங்காங்கு இசைமுறிவு ஏற்பட்டாலும்  கவலைப் படுவதில்லை.

ஓசையே இல்லாத பாடல்கள் பெரிதும் எழுதப்பெறுகின்றன.  இது ஒரு புதுமையாகும். யாப்பு இலக்கணப்படி அமைந்த பாடலைப் பல்போன கிழவிக்கு ஒப்பிட்டவர்களும் இருந்தனர்.

இசைமுறிவு ஏற்படாமல் காப்பதற்குப் பேச்சுத் தமிழிலிருந்து சொற்களை எடுத்துப் போட்டுக்கொள்வதும் சில வேளைகளில் கையாளப்படுகிறது.  ஆயிற்று, போயிற்று என்பனபோலும் சீர்கள் பாட்டில் பொருந்தாத போது உடனே ஆச்சு, போச்சு என்ற பேச்சுவழக்கு வடிவங்களைப் பயன்படுத்திப் பாடலை நிறைவு செய்துவிடுகின்றனர் கவிஞர்.  இதை அந்தக்காலத்தில் நம் ஔவைப்பாட்டியும் செய்திருக்கிறாள்.  கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும் என்று தொடங்கும் வெண்பாவில்  “மூழாக் காழாக்கு” என்று போட்டு எதுகைநயம் காட்டினாள் பாட்டி.  இந்தப் பேச்சுமொழித் தொடர் “முவுழக் காழாக்கு” என்பதைச் செதுக்கிப் பாடலுக்குள் பொருந்தப்புகுத்தி அது ஆரழகு விளைத்தது.  அது உங்களுக்குப் புரியாமல் உரை தேவைப்பட்டது. ஆனால் அதை அவள் சோழனிடம் பாடியபோது அவனுக்கு அது நன்`கு புரிந்தது.
அப்பாடல் எழுதப்பட்ட காலத்தையும் கடந்து நம்மிடம் வந்துவிட்டபடியால் நமக்கு உரை தேவைபடலாம். ஆனால் பாட்டி அதை நமக்காகப் பாடவில்லை. நெல்லுக்குப் பாடியது புல்லுக்கும் கிட்டுகிறது.
இத்தகைய புதுமைகள் ஒரோவழி நுழைவுபெற்றுப்  பாடலை முழுமைசெய்தன. ஆனால் இவை பெரிதும் விலக்கப்பட்டன. இவற்றை உபாயங்கள் என்றனர்.
உவ > உப ஆனாது.  பகர வகரப் போலி.  ஆயம் என்பது ஆதலைக் குறிப்பது. முன்னின்று  நிலைமையைச் சீர்செய்வது என்று பொருள்.  உப+ஆயம். இதில் உப என்பது முன் நிற்றல். உ = முன் என்று பொருள்படும் சுட்டு.


ஆண்டாள் அடிவீழ்வாய்




ஆண்டாள் அடிவீழ்வாய்  அம்மாவே மன்னிஎன்
றீண்டுநீ வேண்டிடில் தாண்டுவை ----மாண்டாலும்
உன்றன் வினைக்கடல்; ஒண்ஞாலம் பின்வருமே
கன்றுநிலை காண்மாறும் மாடு.




நன்கொடை பல்கலையின் நற்றமிழ்  நாற்காலிக்

கென்கோ தமிழ்மக்காள் இன்னிசையே ---- முன்காலே

சேற்றில்  அதைமீட்டுச் சேர்ந்திடுக கோதையடி;

மாற்றிப் பிறத்தலது மாண்பு.
 

உரை:

பாடல் 1:

ஆண்டாள் அடிவீழ்வாய் -  ஆண்டாள் அம்மையை
விழுந்து வணங்கு;
அம்மாவே மன்னி என்று -  என் தாயே என்னை
மன்னித்துவிடு என;
உன்றன் வினைக்கடல் -  கடல் போன்ற விரிந்த உன்
தீவினைகளை;
ஈண்டு நீ வேண்டிடில் - இங்கே நீ இவ்வாறு வேண்டிக்
கொண்டாய் என்றால்;
மாண்டாலும் - பின் நீ மாண்டுவிட்டாலும்;
தாண்டுவை - நீ மாற்றிக்கொள்ளுதல் ஆகும்.
ஒண்ஞாலம் - ஒளிபொருந்திய இவ்வுலகமானது;
பின் வருமே -  உன்னைப் புகழ்ந்து உன் பின்னால்
வரும் நிலை அடைவாய்;
கன்று நிலை மாறும் மாடு -  ஒரு மாடு கன்றாய்
இருந்து வளர்வது போல.
இறுதியடி முழு விளக்கம் இங்கு, காணச்
சொடுக்குக:
http://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_53.html


பாடல் 2:


நன்கொடை பல்கலையின் நற்றமிழ்  நாற்காலிக்
கென்கோ - (இவர்) பல்கலைக்கழகத்துக்குத்
தமிழ் வளர்க்க நன்`கொடை  அளித்திருப்பது;

தமிழ்மக்காள் இன்னிசையே -  செவிகட்கு இனிய
இசையே ஆகிறது,  தமிழ் மக்களே!

முன்காலே  சேற்றில் -  ஆனால் (இவர்) முன் கால் சேற்றில்
மாட்டிக்கொண்டுள்ளது;

அதைமீட்டுச் சேர்ந்திடுக கோதையடி - (இவர்க்குச்
 சொல்வது)
 அக்காலைத் திருப்பி எடுத்துக் கோதை நாய்ச்சியாரின்
திருவடிகளில் (வீழ்ந்து )  முதலில் சேவித்துணர்வாய்.
என்றபடி.

This commentary is suspended.
(Third party suspected of causing 
computer to hang.)
Used retrieval procedures to save.
First publ: 31.1.18 2.27 am.
edited:  9.16 am on 3.3.18