செவ்வாய், 4 ஜூன், 2024

செய்வினை உலக வழக்கு.

இப்போது செய்வினை, செய்வித்தல், செபித்தல் முதலிய சொற்களை ஆய்வு செய்வோம்.

ஆக்கம்  என்பது  அவலம் எனனும் சொல்லுகு எதிர்ச்சொல் போல் பாவிக்கப்பட்டுள்ளது. நாம் செய்யும் எதுவும் பாதியில் நின்றுவிடாமல் முடிந்து பயன் தருவதாக இருக்கவேண்டும்.  செய்வினை முற்றாமல் ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு என்று கலித்தொகை கூறியுள்ளது. 

செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ, மற்று? - ஐய! -
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
பகல் முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்;
மகன் அல்லை மன்ற, இனி;

செல் இனிச் சென்று நீ செய்யும் வினை முற்ற,
அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ' என்று, வருவாரை

என் திறம் யாதும் வினவல்; வினவின், 
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு.  

இது கலித்தொகையில் 19 ம்  பாடல்.  நாம் செய்துகொண்டிருக்கும் எதுவும் பாதியில் நின்று தடைப்பட்டு விட்டால் அதுதான் அவலம் என்று இப்பாடல் கூறுகிறது.  செய்வதை முற்றாக முடிக்க ஒரு திறமை தேவைப்படுகிறது.  இது " என் திறம் ( திறமை ) என்ன என்று கேட்காதீர்!" என்கின்றது.  அவலமாவது வலிமை அற்ற தன்மை. முடிக்கவும் ஒரு திறமை வேண்டும்.  அவலம்:  வலம் அல்லாத நிலைமை.  அ - அல்லாதது;  வலம் - வல் அம் - வலிமை நிலை.  இது நாம் செய்யும் எதிலும் ஏற்படுதல் கூடும்.  செய்யும் வினை முற்ற(வேண்டும்) என்பதும் கூறப்படுகிறது.

தானே ஒன்றைச் செய்தலும் செய்வினை எனப்படும். " ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை"  என்று தன் செயலால் ஏற்படும் எதையும் செய்வினை என்றும் குறள் கூறுகிறது.

ஆனால்  பேச்சு வழக்கில் செய்வினை என்று பிறர் கெட்டுப்போக மந்திரம் செய்வது, மற்றும் பில்லி சூனியம் வைப்பதையும் குறிக்கும்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



கருத்துகள் இல்லை: