புதன், 7 ஏப்ரல், 2021

Stroke patient recovered பங்குனியின் பரமன் நம்பிக்கை பரவியது.

இல்லை என்பாரை ஏன் நம்ப முடியவில்லை தெரியுமா?  
(எண்சீர் ஆசிரிய விருத்தம்ப்

பங்குனியில் பரன்நம்பிப் பணிந்து பாடி

பரவினரே பல்லோராம் தெரிந்தின் புற்றோம்,

தங்கினவர் எங்கணுமே சிவனே ஆவார்

தக்கபெயர் அன்னார்க்கு முருகன் அம்மன்

எங்குநின்ற எத்தெய்வம் எதுபேர் என்றால்

எப்பெயரும் அவராவார் பெயரும் இல்லை!

பொங்குபெயர் பலப்பலவே புகல்வர் எல்லாம்

பூதலத்தில் ஒருபேதம் இலதே கண்டோம்.


உத்திரத்தில் உள்ளபெயர் சொல்லி வேண்டி

ஓரிரவில் உயர்நன்மை ஒன்று கண்டோம்

இத்தலத்துச் சிவன்செய்த விந்தை: மண்டை

இழைரத்தக் குழைதெரித்து மயங்கி வீழ்ந்தார்

மெத்தைவிட்டு மேலழுந்தார் மெல்லத் தேர்ந்தார்

மெல்லமெல்ல நலப்பயிற்சி மேற்கொண் டாரே

இத்தகுமோர் நன்மைபல நிகழ்வ தாலே

இல்லையென்று சொல்லிடுதல் கொள்ளோம் நாமே.


We are not asking you to believe this God. You just pray to your own god to which you have been praying. 




This below is a copy only. For the time being you can view either.


 Same video. The best will be retained and the other later removed.

கருத்துகள் இல்லை: