திங்கள், 27 ஜூலை, 2020

மருத்துவர் உயிரிழப்பு.

பீடிக்கும்  எந்த வயதிலும் 
நோயிம் மகுடமுகி
மாடியில் வாழினும் மண்குடில்
வீழினும்  பார்ப்பதில்லை
ஓடி உழைத்த மருத்துவர்
ஒய்ந்துயிர் விட்டகன்றார்
கூடும் இருபத் துடனேழில் 
நோய்நுண்மி கூடியதே

உரை:

பீடிக்கும்  எந்த வயதிலும் நோய் -  எந்த
வயதிலும் நோயானது பற்றிக்கொள்ளும்;

இம் மகுடமுகி மாடியில் வாழினும் மண்குடில்
வீழினும்  பார்ப்பதில்லை - கொரனா வைரஸ்
நோய் மகுடமுகி என்பது  மாடியில்
வாழ்பவரையும் மண்குடிலில் வாழ்க்கையில்
வீழ்ச்சி காண்பவரையும்
வேறுபடுத்தி நடத்துவதில்லை;

(டெல்லியில்) ஓடி உழைத்த மருத்துவர்
  -  முன்னணியில் இருந்துகொண்டு
 ( இந்த நோயாளிகளைக்) 
கவனித்துக்கொண்ட மருத்துவர்,

கூடும் இருபத்துடன் ஏழில் -  அடைந்த
தன் இருபத்து ஏழாம் (வயதில் )

ஓய்ந்து  -  மருந்துவமனையில் படுக்கையில் 
நடமாட்டம் இன்றிக் கிடந்து;

உயிர்விட்டு அகன்றார் -  இறப்பினை எய்தி
உலகினைப் பிரிந்தார்;

நோய்நுண்மி கூடியதே -  நோய்க்கிருமிகள்
அதிகம் ஆகிவிட்டன.

( அதனால் )  என்றவாறு.



செய்தி:
கொரனா நோய் மருத்துவர் 27 வயதில்
தொற்றின் காரணமாய் மறைந்தார்.
டில்லியில்.

கவனமாய் இருங்கள்.
நோயிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.

மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை: