வியாழன், 30 ஜூலை, 2020

இனி யாம் செய்யவிருப்பது

முன்னெழுதி இட்டவோலை மூன்றுதினம் முன்னே
பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே
இன்றெழுதிக் கிட்டுவதோ  இனிமை இலாச் சொல்லே
நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும்  பின்னே. 


இதன் பொருள்:

முன்னெழுதி இட்டவோலை மூன்றுதினம் முன்னே:
மூன்று நாட்களுக்கு முன்பு யாம் இடுகை ஒன்று
உங்களுக்காக இட்டிருந்தோம்;

பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே--
அதன்பின் யாம் எழுதியவை எல்லாம் எம் சொந்த
வேலைகளை முன்னிட்டு; அதனால் அவை 
மக்கள் படிக்கத் தக்கவை அல்ல;

இன்றெழுதிக் கிட்டுவதோ  இனிமை இலாச் சொல்லே-
இன்று ஒன்று எழுதப்போகிறோம்;  அது உங்களுக்குக்
கிட்டும்;  ஆனால் அந்தச் சொல்லில் இனிமை எதுவும்
தேடாதீர்கள், இனிமை என்பது இராது.

நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும்  பின்னே. 
நல்லபடியாக எழுதியபின்புதான் அயர்ந்து
உறக்கம் கொள்ளுவோம் என்றபடி.

அதைப் படிக்கத் தயாராய் இருங்கள். நன்றி

மெய்ப்பு - பின்...


கருத்துகள் இல்லை: