வெள்ளி, 17 ஜூலை, 2020

அழகிரி என்னும் பெயர்.

இன்று அழகிரி என்ற பெயரின் சொல்லமைப்பைக் காண்போம்.

இப்பெயரை இயற்பெயராய்க் கொண்டோர் பலர் உள்ளனர். 
இது  சொல்லாய்வே அன்றி வேறில்லை. இப்பெயரைப் பற்றி
எழுதி அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவேண்டுமென்பது
நோக்கமன்று.  ஆகவே,  ஆய்வினை ஏற்றுக்கொள்வீர்கள் ; 
அவ்வாறே வேண்டிக்கொள்கிறோம்.

அழகு+ இரு + இ  என்று பிரித்து அழகிரி என்று முடித்து, 
அழகிருப்பவர் எனினும்  ஆகும்; ஆனால் அதனினும் 
சிறந்த முடிபினை எட்ட மேலும் ஆய்வோம்.

அழகு என்ற சொல்லில் அழ என்பதே முதனிலை ஆகும். 
கு என்பது விகுதியே ஆகும். ஆனால் இவ்விகுதி பெயர்ச்
சொல் அமைப்பிலும் வினைச்சொல் அமைப்பிலும் வருவது.  வினைச்சொல்லில் வருதற்கு எடுத்துக்காட்டு:  பழகு (பழகுதல்), 
மூழ்கு (மூழ்குதல் ) எனக் காண்க.

எனவே  அழ என்ற முதனிலையும் மலை என்று பொருள்படும்
"கிரி" என்ற கிளவியும் இணைந்ததே அழகிரி என்ற பெயர். 
இஃது விகுதிகெடுத்துப் புணர்த்திய சொல் ஆகும்.  இப்பெயரை 
வேறு விதமாகச் சொல்வதென்றால் " அழகுமலை" என்னலாம். 
கிரி என்பது மலை.

கிரி என்பது திரிசொல்.  குன்று என்பது (சிறிய) மலை. இது 
இடைக்குறைந்து  குறு என்றாகி,  குறு > கிரி என்று திரிபுற்றது.
குறு என்ற அடியினின்று பல சொற்கள் தோன்றியுள்ளன. குறி, 
குறை என்பவை தொடர்புற்றவை.

அறிக. மகிழ்க.

கருத்துகள் இல்லை: