வியாழன், 7 நவம்பர், 2019

திடகாத்திரம் இனிய படைப்புச்சொல்

இன்று "திடகாத்திரம்" என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

இது ஒரு புனைவுச்சொல்லே.

ஒருவன் திடகாத்திரமாக இருக்கின்றான் என்றால்:

அவன் தன் உடலின் திடத்தினை      {....திட(ம்)  }

உணவினாலும்  ஏனை  நடபடிக்கைகளாலும்   காத்துக்கொண்டு   {....கா(த்து ) .....}

இவ்வுலகில் இருக்கும்படியாக நல்வாழ்வை அடைந்துள்ளான்   {....இரு....}

அம் என்பது ஒரு விகுதி.

அம்முக்கும் ஒரு பொருளைக் கூறிக்கொள்ளலாம்.  பெரிய வேறுபாடு ஒன்றும் ஏற்பட்டுவிடுதல் இல்லை.

எல்லாத் துண்டுகளையும் இணைக்க:

திட(ம்)  +  காத்து +  இரு +  அம்.


=  திடகாத்திரம்

ஆகிவிட்டது.

காத்து + இரு + அம் > காத்திரம் என்பதை

கா+ திறம்  >  காத்திரம் என்றும் பிறழ்பிரிப்பாகக் கூறலாம்.

இதிலும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப் பிழைகள் புகினோ அன்றிக் காணப்படினோ திருத்தம் பின்.



கருத்துகள் இல்லை: