ஞாயிறு, 17 நவம்பர், 2019

சிறுமமே சிரமம்.

நம் முன்னோர் பல துன்பங்களைப் பெரியனவாய் மதிக்கவில்லை. சிலவற்றுக்கு ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் அவற்றைத் துருவி
ஆய்ந்தனர். சில உலகிற்குப் பெருமை தருவன என்றும் நினைத்தனர்.

அவர்களிடையே துன்பங்ககளின் சிறுமை பெருமை பல்வேறு கருத்துக்களையும் ஆன சொற்களையும் தோற்றுவித்தன. ஒரு சொல்லை  ஆய முற்படும் இதனில் சுருங்கக் கூறியுள்ளேம்.

இன்பங்களையும் இவ்வாறே  பெரிய சிறிய என்றனர்.

சிறிய துன்பங்கள் ஒன்றன் இடை இடைத் தோன்றி நீங்கின.  இடையிடை வருவன இடைஞ்சல்,  இடையூறு  என்றனர். முதல் இடை கடை என்று வேறுபாடின்றிச் சில துன்பங்கள்  " சிறுகு" எனப்பட்டன.  இவைகள் சிறு தொல்லைகள். ஒரு செயல்பாட்டு முன்னும் வரும், பின்னும் வரும் இடையும் வந்து குடையும் கொஞ்சம்.

சிரமம் என்பது சிறு துன்பமே.  இச்சொல் தன் பண்டை வடிவத்தில் "சிறுமம்" என்றிருந்ததற்கான சுவடுகள் அச்சொல்லிங்கண்ணே உள.  சிறுமம்  பின் சிறமம் ஆகிப் பிறழ்திருத்தமாகச் சிரமம் ஆயிற்று.  சிறுகு என்பதன் ஒப்புமையாக்கமாகவே சிறுமம் ஆகிய சிரமம் வந்துற்றது.  றகர ரகர வேறுபாடிழந்த சொற்களின் பட்டியலில் சிறுமம் > சிறமம் > சிரமமும் இடமறிந்து  புகுந்து நிற்றற்பாலது.

துன்பமோ சிரமமோ வருங்கால் நகுக.

அறிந்தீர் மகிழ்ந்தீர்.   

தட்டச்சுப் பிழைக்கு மறுபார்வை பின். 

கருத்துகள் இல்லை: