செவ்வாய், 21 மே, 2019

மோடியே வெல்வாரே முன்வந்த வாக்கினும்...(வெண்பா).

மோடியே வெல்வாரே முன்வந்த வாக்கினும்
கூடி வருமிது கொள்வீரே ----- நாடிவரும்
மக்கள் அனைவருக்கும் மாண்பு மிகச்சேரும்
தக்கநல் ஆட்சியால் தான்.


இந்த வெண்பாவை இந்தியத் தேர்தலுக்கு முன்னரே
எனது கைப்பேசியில் பதிவு செய்திருந்தேன். வெளியிட வேண்டுமென்று அப்போது ஆவலாய் இருந்தது. ஒரு கணிப்புமின்றி வெறுமனே எழுதியதால் வெளியிடவில்லை.

இப்போது கருத்துக்கணிப்புகள் அவர் வெல்வார் என்`கின்றன. என் கவியும் அதையே சொல்வதால் ஏன் வெளியிடவேண்டுமென்று ஓர் எண்ணம் தோன்றியது. அதை ஒருவாறு மீறிக்கொண்டு இப்போது இதைப் பதிவு செய்துள்ளேன். ஓர் எளிமையான பாடல்தான்.

ஊழலின் சொர்க்கமாக இருப்பது இந்தியா. அங்குபோய் கள்ளப்பணம் என்பதை ஒழிக்க முனைந்தால் பலரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். பலர் வரியே செலுத்துவதில்லை. ஜி எஸ் டி என்னும் வரியை அங்கு புகுத்தினால் பலர் வெகுண்டு எழுவர். ஊழலால் பலருக்கு ஊதியமுண்டு. அதை இல்லாமலடித்தால் சினவாரோ என்ன? இந்திய வரலாற்றில் இவரைப் போல இழித்துப் பேசப்பட்டவர் யாருமில்லை என்றுதான் தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் நாள்தோறும் ஏசுகின்றன. குற்றங்கள் பலவற்றைச் சாட்டுகின்றன. பாவம்! மக்கள் ஆதரவால் வென்றால் அது உண்மையை மறைக்க முடியாதென்பதை உலகுக்கு உணர்த்துவதாகும்.

கருத்துகள் இல்லை: