புதன், 15 மே, 2019

விண்ணு கண்ணன் கிருஷ்ணசாமி

விண்ணு என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து அமைந்ததே விஷ்ணு என்ற சங்கதச் சொல் என்பதைச் சில ஆசிரியர்கள் முன் உரைத்ததுண்டு.  இந்த ஆய்வு சொல்லும் நூல் இப்போது கிட்டவில்லை

ஆனால்:

விண் > விண்ணு > விஷ்ணு.

ஓர் எழுத்து மாற்றம் தான்.  அழகான இன்னொரு சொல் அமைந்துவிட்டது. மொழி ஆக்கம் என்றால் இதுவே மொழியாக்கமாகும்.

விண்ணனுக்கு நீலமேகன் என்ற பெயரும் உள்ளது.  நீலம் என்பது விண்ணின் நிறமே.  இதைக் கருமை என்று சொல்வதுண்டு.

"வானக் கருமை கொல்லோ?"  என்று வரும் பாரதி பாடலைக் கண்டு இதை உணர்ந்து இன்புறலாம்.

கரு என்ற தமிழ் அடிச் சொல் அயல்திரிபானால் கிரு என்று வரும்.  இவ்வாறே
"கிருஷ்ணபட்சம்"  என்ற சொற்றொடர் உண்டாயிற்று. நிலவு இருள் அடைந்த பக்கமே கிருஷ்ணபட்சம்.   பச்சம் > பட்சம் > பக்கம் எல்லாம் ஒன்றே.

கரு > கருப்புசாமி :  இச்சாமியே கிருஷ்ணசாமி. கிருஷ்ண  என்றால் கருத்த என்று பொருள்.

ரகர றகர வேறுபாடின்றித் தமிழில் வரும் சொற்களில் கரு> கறு என்பதும் ஒன்று.

கரு > கன் > கண் என்றும் திரியும்.

கரு:  கன்னங்கரேர் என்ற தொடரை நோக்கின் கரு கன் என்று திரிதல் அறியலாம்.

கரு > கண்ணன் என்பதில் கண் என்று திரிதல் காணலாம்.  எனினும் கண் என்ற விழி குறிக்கும் சொல் வேறு.

கரு என்பது கார் என்று திரியும்.  கார்மேகம்,  காரிருள் என்பன காண்க.

விண்ணு என்பதை முதலில் வணங்கியோர் மீனவர்களாகவே இருக்கவேண்டும்.  கண்ணன் என்பது ஆயர் கடவுளாக உள்ளது.  இவ்விரண்டும் பிற்காலத்து ஒன்றுபடுத்தப்பட்டு இன்று இரண்டும் கருமை நிறமென்றும் நீலம் என்றும் சொல்லப்படுகிறது.   தெய்வங்கள் இணைப்பு பற்றி மேனாட்டு ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: