வியாழன், 24 மார்ச், 2016

எவனோ விதைத்த பயிருக்கு.......

"அல் நீயன்" விளைத்த போரிலே
நீ ஏன்  கலந்து மீறினாய்?
எவனோ விதைத்த பயிருக்கு
ஏனோ நீர் நீ ஊற்றினாய்?
பணமோ வந்த பய   முறுத்தலோ?
பயன்சேர் கொள்கை உறுத்தலோ?
குடும்பம் குழந்தை உனனுடமை
விரும்பிப் போற்றுதல் உன்கடமை.
உயிருக் குலைசெய் நடப்புகளில்
அயர்வில் இணைதல் தவிர்த்திடுவாய்.
குண்டுகள் புதைத்து வெடிகிளப்பி
வென்றிடில் உனக்குச் சொர்க்கமில்லை.
மண்டுகள் மொழியில் நிலைகுழம்பி
மாயையில் சிக்கி அழிந்திடுதல்!.

நின்று நிலவும் நலம்படு கொள்கை
என்றும் எண்ணி 'அறிதல்
நன்றெனக் கடைப்பிடி நானிலம் உய்யவே.

கருத்துகள் இல்லை: