புதன், 16 மார்ச், 2016

அதுவும் இதுவும் வந்த சொற்கள் - 2

இங்கிருந்து தொடர்கிறோம்.

இடையில் நின்ற அதுவும் இதுவும்
http://sivamaalaa.blogspot.sg/2016/03/blog-post_7.html 


அது என்ற இடைபடு சொல் வந்த சொற்களைக் கண்டோம்.

இப்போது இது என்பது  நடு நின்ற சொற்கள் சில  காண்போம்.


மன் + இது+  அன் =  மனிதன்.

புன்  + இது + அன் =   புனிதன்.           ( நீரால் கழுவப்பட்டவன், குளித்தவன்,  --தூயோன்  )


கணி  + (இ ) து  +  அம்  =  கணிதம்.  (பகுதி:  கணித்தல் )


புனிதன் என்ற சொல் புனல் என்ற சொல்லின் அடிச்சொல்லினின்று தோன்றியதென்பது மறைமலையடிகளாரின்  முடிபு ஆகும்,  புனல் என்பதன் அடி  புன்  என்பது. அதுவே புனிதன் என்ற சொல்லுக்கும்  அடிச்சொல்.

புன் >  புனல்.\
புன்  > புனிதம்.

தூய்மை என்பது நீரால் அமைந்தது.  தூய்மை ஆக்கும் பிற பொருள்கள் அனைத்தும் பின்பு பயன்பாடு கண்டவை.  மனிதகுலம் முன் அறிந்தது நீரைத்தான்  என்பதுணர்க .புறத்தூய்மை நீரான் அமையும் என்கிறது குறள். புறத்தூய்மை  அறிந்தபின் மனித நாகரிகம் அகத்தூய்மை அறிந்தது. ஆகவே புனிதம் புனலில் தோன்றிய கருத்தென்பது மாந்த வளர்ச்சி நூலுக்கும் ஏற்புடைத்தே  ஆம்

பலி    -   பலித்தல்
பலி  -  பலிதம்   (பலி+ இது+அம் )2

பாணி <  பாண்
பாணிதம்  ((பாணி +இது+ அம்)    கருப்பஞ் சாறு
சுரோணிதம்   (சுர + ஒண் +இது + அம் )   சுரக்கும் ஒளி பொருந்திய  நீர். என்பது  சொல்லமைப்புப் பொருள்.
பாசிதம் (பிரிவு )   பாகு > பாகிதம் > பாசிதம்  கி- சி திரிபு.
 பாகு= பாகுபடுதல் .
 புதிய சொற்களை அமைக்க இந்த முறையைப் பின்பற்றலாமே.





கருத்துகள் இல்லை: