ஞாயிறு, 20 மார்ச், 2016

சாணக்கியனும் சாணாரும்


Continue reading from http://sivamaalaa.blogspot.sg/2016/03/chanakya-was-probably-tamil.html

சாணான் என்போன் கள்ளிறக்கும் ஒரு தொழிலுடையான். இவன் (chANakkiyaan )  இத்தொழிலுடையாரைச் சேர்ந்தவன் என்று கருதினாருமுண்டு. வேதவியாசன் மீனவப் புலவன் ; வால்மீகி வேட்டுவன்;  பாணினி பாணரினத்தான்; வள்ளுவன் வள்ளுவக் குலத்தோன்;  கம்பன் ஓதுவார் வழிவந்தோன் எனும் நெடுந்தொடரில்,  இத்திறத்தினரெல்லாம் பண்டை மேனிலையில் நின்றமையையே ஆய்வுகள் காட்டுகின்றன. சாணானாயிருந்து நூலாக்கியமையால்
சாண் ஆக்கியன் > சாணாக்கியன், சாணக்கியன் என வந்தது எனினுமாம். இன்று கீழ் நிலையர் பலர் முன் மேனிலையராய் இருந்தனர் என்பது  அறிஞர் M .  சீனிவாச ஐயங்காரும் கூறுவதாகும்.
சாணாக்குடி ( சாணார் குடி), சாணாக்கிக்கீரை  முதலான பதங்களை
நோக்கின்  சாணா+ ஆக்கியன்  என்பது பொருந்துகிறது.  ஆகாரங்களில் ("ஆ" ) இரண்டில் ஒன்று கெட்டுப் புணர்ந்து சொல் உருவாகும். பிரமத்தை உணர்ந்தவன் பிராமணன் என்பதால் இவன் பின் பிராமணன் ஆயினன்.

சாணா  ஆக்கியன் =  சாணாக்கியன் > சாணக்கியன் : சாணா(ர் )  வகுப்பு ஆசிரியன்  என்பதும்  ஆகும்..

சாணா +  ஆக்கி + யா என்று சங்கதத்தில் இது  மேற்கொள்ளப்பட்டது.  அன் ஆண்பால் விகுதி அங்கில்லை. அது தமிழுக்கே உரியது.  அது தமிழில் இலங்கும் காலை  சாணா  (அல்லது    சாண  ) + ஆக்கி+  அன்  என்று   யகர உடம்படு மெய்யும் இணைந்து சாணக்கியன்  என்று இறுதியில் முடியும்.

வேறு சொல் முடிபுகளை ஈண்டு துருவா தொழிவோம்.

இவனைத் "திரமிள "  இனத்தவன் (திராவிடன்)  என வடநூல் உரைக்கும். இதைப்  புறந்தள்ளக் காரணம் யாதுமில்லை.

---------------------------------------------------

Note:

சாண்+  நாக்கு+ இயன்=  சாணாக்கியன் >  சாணக்கியன்,
ஒரு சாண் நாக்கு உடையவன்;  என்றால்,  எல்லாவற்றிலும் இடையிற் புகுந்து நீளப் பேசுபவன் என்றும் பொருள்.  மற்றப் பொருள் தரவுகளை தொடர்புடைய ஏனை இடுகைகளில் காண்க.



கருத்துகள் இல்லை: