வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

மழை வெள்ளம் சிங்கப்பூர்

 

நீரிலை என்று நிரப்போர் ஒருபுறம்

மாரியின் பொழிவில் மாள்பவர் ஒருபுறம்

வாரி சூழுல கில்காண் வருத்தும்

மாறு பாடுகள் மலைவுறப் பலவே.


நிரப்போர் -  கெஞ்சுவோர்

பொழிவு - கொட்டுதல்

வாரி - கடல்

மாறுபாடுகள் -  எதிர்மாற்றங்கள்

மலைவு - கடவுள் ஓரிடத்தில் ஒன்றை அதிகமாகவும் 

இன்னோரிடத்துக் குறைவாகவும் தருதல் ஏன் என்னும்

ஐயப்பாட்டு நிலை  உண்டாகுதல்.





கொஞ்ச நேர மழை.  வெள்ளப்பெருக்கு.  தொடர்வண்டி மேம்பாலம் அருகில்.




For more news on this topic:  pl click,

கோவிட் நிலையில் பூசை. ஆள்நுழைவுக் கட்டுப்பாடு.


 கோவிட்டுக்கு முந்திய நாட்களில் இப்பூசைக்கு 300 பேர் வரை ஆதரவளிப்பர். பெருங்கூட்டம் வந்து, அன்னதானம் பூசை அபிஷேகம் ஹோமம் ஆகியவையும் நடக்கும்.  இப்போது கோவிட் என்பதால்  அமைப்பாளர்கள் தவிர வேறு யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. பூசை நடைபெறுகிறது. ஓரிருவரே படத்தில் காணப்படுகின்றனர்.  கோவிட்டினால் அச்சம் மிகுதியாக வுள்ளது. நம் இறைவி சிவதுர்க்கை எல்லோரையும் காக்கவேண்டும். ஒவ்வோருயிரும் அம்மையின் அருள்பெற்று வாழ்க,

கட்டுப்பாடுகள் இல்லாத காலத்தில் பெருந்திரளானவர்கள்  கூடியபோது எடுத்த படம் காண்க:

சுமங்கலிப் பூசையில் பெருந்திரள்.

அந்த நன்னாள் அணுகுமோ  மீண்டும்?
சொந்தம் சூழ்வரு மக்கள் யாண்டும்!
மந்தம் வீழ்ச்சி மாட்சியிற் குந்தகம்
நொந்ததிவ் உலகே உந்துதல் ஒழிந்தே.

----சிவமாலையின் கவிமாலை.

யாண்டும் - எப்போதும்.
சூழ்வரு -  சுற்றி நிற்கும்
மந்தம் - நிறைவின்மை
குந்தகம் - கெடுதல்.
உந்துதல் - உற்சாகம்.



தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன 1427  21082021
If our readers gain access to the compose window by error, please exit without changing 
the text.  By moving your mouse over the text, you may effect unwanted changes and
errors.  Please cooperate.

சுமங்கலிப் பூசைப் படங்கள்

அருள்மிகு துர்க்கையம்மன்





இவை கடந்த ஞாயிறு 15.8.2021ல் சிங்கப்பூர் சிவதுர்க்கா ஆலயத்தில் நடைபெற்ற சுமங்கலிப் பூசையின்போது எடுக்கப்பட்ட படங்கள். தந்துதவியவர் திருமதி சிவலீலா அவர்கள் குடும்பத்தார்.  நன்றி.

பூசை ஆலயத்தாரால் ஸ்ரீ  துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

அருள்மிகு துர்க்கையம்மன் திருமுன் நடைபெறும் பூசை காண்க.


அழகிய சிவதுர்க்கை  அருள்மழை பொழிகின்றாள்

இளகிய உளம்கொண்டே இன்னலற வந்துசிறு

குழவியை அணைத்தல்போல் குரல்காதில் கேட்டதுமே

உழைவந்து பிழைபொறுப்பள்  உலகினையே காத்திடுவள்


-   சிவமாலையின் கவி.


குழவி -  குழந்தை

உழை -  அருகில்


.