எண்ணங்களில் சிறியவை என்று பழிக்கப்படுவன பல. பெரியன என்று போற்றப்படுவனவும் உள. இவற்றை இவ்வாறு சிறியன, பெரியன என்னாமல், உயர்வன, தாழ்வன என்றும் பிரிக்கலாம். தெய்வப் புலவர் இதை, '' உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து'' என்று அருளுதல் காண்க. மனவுணர்வின் அடிப்படையில் எழுவனவற்றை, இத்தகு சொற்களால் அளவிட்டுச் சொல்லும் தன்மை, பல மனித இனத்தாரிடத்தும் காணப்படுவது.
மனிதன் அதிகச் சிந்தனையில் ஈடுபடுகையில், பெரிய கருத்துக்களை உணர்வதுடன், அதிகம் பேசுவதோ அலட்டிக்கொள்வதோ குறைந்துவிடுவதைக் காணலாம். ஏன் அதிகம் பேசுவதில்லை? பெரிதானதை, உயர்வானதை எண்ணுவதால்தான். இவ்வாறே, கணக்கில் ஈடுபட்டிருக்கும் போதும் அதிகம் பேசுவது குறைந்துவிடுகிறது.
மா என்ற சொல், தமிழில் பெரிதைக் குறிக்கிறது. இது மஹா என்று சமஸ்கிருதத்தில் வரும். இதுவே மகா என்றும் எழுதப்பெறுவது ஆகும்.ஆதிகாலத்தில் கண்ணாடி பளிங்கு முதலியவை இல்லாதிருந்தன. பிறகு அவை கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தகாலத்தில், மகுரம் என்ற சொல் உண்டானது. மக+ உரு+ அம் > மகுரம் என்று திரிந்தது காண்க. பிள்ளை என்று பொருள்படும் மகன், மகள் என்ற சொற்களும் இவ்வாறு தோன்றின. மகு+ உடு+ அம் > மகுடம் என்று இன்னொரு சொல்லையும் காண்க. ஊதப்பட்டு மயக்குவதும் ''மகுடி'' ஆகிறது. இது மகு+உடு+ இ > மகுடி ஆகிறது. பூவின் மொட்டும் ஒரு மகவுதான், பிறப்பது.
முகு>மிகு> மகு என்பன தொடர்புடைய அடிச்சொற்கள்.
முகு> முகுர்த்தம் என்றிருந்த சொல் நாளடைவில் முகூர்த்தம் ஆனது.
முகு> முகு_+ உருத்தம்> முகுர்த்தம்> முகு+ ஊர்த்தம் > முகூர்த்தம் என்பது காண்க.
உரு> உருத்து= உருவினை உடையது. உருத்தம் என்பதில் அம் விகுதி. அமைவு குறித்தது.
உரு > ஊர் என்பது, ஓர் அமைப்பினை அல்லது உருவினை அடைந்த இடம். மனிதனுக்கு உரு இருப்பதுபோல ஊருக்கும் ஓர் அமைப்பு அல்லது உரு உள்ளது.
மா என்பதிலிருந்து திரிந்த சொற்களின் வளர்ச்சி காட்டினோம்.
மகுடம் என்பது அரசன் உடுத்துக்கொள்ளும் தலையுடை. பெரிய உடை என்றும் சொல்லவேண்டும்.
மவுனம் என்பது சிந்தனை ஆழ்வினால் பேசாமை. உனம் என்பது உன்னுதல்> உன்னு> உன்னம்> உனம் ஆகிறது. மா+ உனம்> மவுனம் ஆகும். மௌனம் என்பதும் அது. உன்னுதல் சிந்தித்தல். உன்னித்தல் என்பதுமாம்.
அறிக மகிழ்வு
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக