வியாழன், 14 மே, 2020

தொல்காப்பியர் இன்னொரு பெயர் திரணமாதக்நி?

தொல்காப்பியருக்கு திரணமாதுக்கினி  என்ற ஒரு பெயரும் சொல்லப்படும்.

இவர் தம் நூலை அரங்கேற்றிய போது  பேராசானாக விளங்கிய
அதங்கோடு ஆசான்  தொல்காப்பியரை அரசவையில் தமக்குச் சமமானவராகவும்  தக்கவராகவும் ஏற்றுக்கொண்டார். அப்படி இல்லாவிட்டால் இருவரும் எப்படி ஒன்றாக அவையில் அமர்ந்து  ஒருவர் இலக்கணத்தைச் சொல்ல இன்னொருவர் கேட்பது? அரசன் தந்த வேலை ஆதலால் இருவரும் ஒத்துப்போனால்தான் காரியம் நடைபெறும்.  ஒருவர் இக்காலத்தில்போல் இணையதளத்தில் சொல்லி இன்னொருவர் வீட்டிலமர்ந்து படித்துக்கொள்வதானால் இந்த ஏற்பாடு தேவையில்லை அன்றோ?  இருவருக்கும் அரசன் தரும் சம்பளமும் தேவை. அவை பெரும்பாலும் பொன்னும் மணியுமாய் இருந்திருக்கும்.

இது நடைபெற்றது இடைச்சங்கத்தின் இறுதி என்பதே சரியான கொள்கை.


ஆசான், தொல்காப்பியரை திறனில் மாதக்க நீர் என்று போற்றிக்கொண்டாடினார்  என்று அவையில் உள்ளவர்கள் நினைத்தனர். அதுவே உண்மையும் ஆகும்.

இதிலிருந்து திறனில் மா + தக்க + நீ  என்ற பெயர் அமைந்து, பின் அயல் நாவுகளும் அறிந்து போற்றியதால் திரணமாதக்கநி என்று பேதமுற்றுச் சுருக்கம்பெற்றுப் பெயராயிற்று.

திரணமாதக்கனி என்பதும் காரணப்பெயர்தான்.

சீனி என்பது சில தமிழின மொழிகளில் ஜீனி என்று வருதல் காண்க

பழம் + நீ  = பழநி என்பதும் நீ  என்பதில் முடிந்தது  காண்க, பின் குறுகிற்று.


 அந்தக் காலத்துப் பெரும்புலவர்கள் தங்கள் இயற்பெயர்களால் அறியப்படவில்லை என்பர் ஆய்வாளர் சிலர். எடுத்துக்காட்டு:


வள்ளுவர் >  வள்ளுவக்குடி
தொல்காப்பியர் >  காப்பியக்குடி
பாணினி > பாணர் குடி  (பாண்+ இன் + இ)
வால்மிகி > வால்மிகக் குடி.  வான்மிகி என்ற வடிவமும் வழங்கும்.

இப்பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளிலும் வழங்கியிருக்கக்கூடும்.
அதாவது : பாணினி என்பது பாண் குடியினர் என்றும் பாட்டில் வல்லவர் என்றும் இருபொருளில் அந்தக்காலத்தில் வழங்கியிருக்கலாம். இதை அறிய வழியில்லை,

பாணினி என்ற பெயரின் அமைப்பைப் போலவே பாடினி என்ற சொல்லும் அமைதல் காண்க. எடுத்துக்காட்டு:  காக்கை-பாடினியார். பாணர்கள் தமிழ் நாட்டில் இருந்தவர்கள். பாட்டு எழுதிப்  பாடிப்  பிழைப்போர்.

பாண் இன்  இ
பாடு  இன் இ


அவர்களில் ஒருவரே சங்கதத்துக்கு  Sanskrit  இலக்கணம் வரைந்தார் .Sanskrit was then known by a different name. Does not matter here.

காப்பியக் குடியினர் பலர் புலவர்களாய் இருந்தனர். எடுத்துக்காட்டு: பல்காப்பியனார் ,  இவர்களுள் தொன்மையானவர் தொல்காப்பியனார்,

பழம் பண்டிதர்களை அறிக  மகிழ்க 

தட்டச்சுப் பிறழ்வு - பார்வை பின்.

( தமிழ் எழுத்துருவாக்கி வேலை செய்யவில்லை )


மகுடமுகி  ( கொரநாவால்  ) இவை குறைவான தொகையினரால் இயக்கப் படுகின்றன  போலும் .

உங்களைப்  பாதுகாத்துக் கொள்ளுங்கள்.




மூர்க்கமும் முறுக்கும்

கடுமை என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம்.   "கடு"  என்பது தொட்டுப்பார்க்கும்போது ஒரு பொருள் நெகிழாமலும் அமுங்காமலும்  திடமாக இருப்பதையே குறிப்பதாகிறது.  பொருளில் கடினம் அல்லது கடுமை இருக்கின்றது என்று சொல்கின்றோம்.  அதனால்தான் உண்பொருளாகிய கடலைக்கு அப்பெயர் ஏற்பட்டது. இச்சொல் ஏற்பட்ட விதம்:

கடு >  கடு + அல் + ஐ >  கடலை

என்பதுதான்.

கடு என்ற உரிச்சொல்லில் அல் விகுதியும் ஐ விகுதியும் இணையவே, கடலை என்ற சொல் தோன்றுகிறது.  கடு என்பது  கடு அல் என்று இணைக்கப்படும்போது சொல் நீட்டமாகிறது. இவ்வாறு மிகுவதால் அல் என்பதை விகுதி என் கின்றோம்.  மிகுதிதான் விகுதி.  இது சொல்லின் மிகுதி.
மிஞ்சு என்பது விஞ்சு என்றாவது போல் மிகுதி என்பது விகுதி என்று திரிவதால் அல் என்பதை விகுதி எனலாம்.  ஆனால் இங்கு இன்னொரு விகுதியான ஐ என்பது இணைக்கப்படாதாயின் வேறுபொருள் ஆகிவிடும். ஆதலின் ஐ வரவேண்டும். அப்போதுதான் கடலை ஆகும். இல்லாவிட்டால் கடல் என்று நின்று வேறுபொருள் ஆகிறது.  வேறுபொருள் ஆயினும் ஆகவில்லை எனினும் இடையில் நிற்கும் விகுதியை  இடைநிலை என்ற இன்னொரு பெயரால் வழங்குவது நன்று என்று தோன்றுகிறது. நினைத்த எல்லையை அடையாதவரை இடைவரவுகளை இடைநிலை என்று கொள்வது நல்ல கொள்கையாகும். இதில் சரி-தவறு என்பதினும் வசதியே குறிக்கோள் ஆகும்.

கடு என்பதில் கடினம் அல்லது திடத்தன்மை மட்டுமே பொருளன்று.  கடு என்பது வேகத்தையும் குறிக்கும். இன்னும் பல்வேறு பொருள் உள்ளன. அவற்றை நீங்கள் அகரவரிசைகளில் கண்டுகொள்ளலாம்.  வேகமாக அல்லது விரைவாக ஓடும் விலங்காகிய குதிரைக்குக் கடுமா என்ற பெயரில்லை. அது புலி, யானை, அரிமா என்னும் சிங்கம் முதலியவற்றைக் குறிக்கும். மான் என்னும் மென்மை விலங்குக்கு முரணாக அரிமாவிற்குக் கடுமான் என்ற பெயருள்ளது அறிக. ஆனால் கடுக என்பது விரைய என்றே பொருள்தரும்.

சொற்களில் பலபொருள்  இருக்கக்கூடும் என்பதை மனத்திலிருத்தவே இதைக் கூறினோம்.  இப்போது மூர்க்கம் என்ற சொல்லுக்கு வருவோம்.

மூர்க்கம் என்பது  எதையும் விடாமல் நின்று மிகுதி காட்டும் தன்மையையே குறிக்கிறது. விட்டுக்கொடுத்துப் போவதே சாலச்சிறந்த தந்திரமான தன்மை என்று பிறர் நினைக்கையில், விடாமைபற்றும் தன்மையையும் மூர்க்கம் என்று சொல்லலாம்; சிலர் அத்தன்மையை மடமை என்றும் கொள்ளலாம் ஆதலின், இதற்கு மடமை என்ற பொருளும் ஏற்பட்டது. மிகுசினம், கடுங்கோபம் என்பவும் இச்சொல்லுக்கும் பொருளாகக் கூறப்படும்.

முறுகுதல் என்ற சொல்லுக்கும் விரைவு, முதிர்தல், மிகுதல், செருக்குதல் என்னும் பொருள்கள் உள்ளன. முறுக்குதல் என்பதற்கும் இதை ஒட்டிய பொருள் வரும். இவற்றின் பகுதி அல்லது முதனிலை "முறு" என்பதாகும்.

முறு எனற அடியே மூர் என்று திரிந்தது.  ஆனால் மூர்த்தி என்ற சொல்லுக்கும் இதற்கும் தொடர்பில்லை.  அந்த மூர் வேறு. இந்த மூர் வேறு.

முறு மூர் என்ற இவ்வலைக்குள் அகப்பட்ட பகுதிகள் விரைவு, மிகுதி, சினமிகை,  செருக்குதல் என்ற பொதுப்பொருள் உடையன.  ஆகவே முறு, மூர் என்பன நுண்பொருள் வேறுபாடு உடையனவே.  இவற்றின் முந்திய மூலவடி முல் என்பது. அதனை ஈண்டு விளக்கவில்லை.

அடிப்படையில் இப்பகுதிகள் கடுமை அல்லது கடினம் காட்டுபவை.

எனவே, இதன் முடிபு  முறு என்பதே மூர் என்று திரிந்தது. என்னும்போது முல் என்பதும் மூர் என்று திரியும்.  அப்பன், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்னும் உறவுகள் போல்வன. ஆதலின் இன்னொருவர் முல் மூல் என்பதே மூலமெனினும் பேதமின்மை அறிக.

-------------------------------------------------------------------

அடிக்குறிப்புகள்


பெயர்தல் :  பெயர் > பேர் > (பே{ர்})+ து+ அம்) > பேதம்.
மிகு> விகு+ஆர்+அம் > விகாரம்.  மிகுந்து வேறுபடல், வேறுபாடு. ஆர் - நிறை(வு.) சொற்பொருள் மிகுதியினால் வேறுபடல். வழக்கில் பொதுவாக
வேறுபடுதல்.

தட்டச்சுப்பிறழ்வுகள்: மறுபார்வை பின்
  

ஞாயிறு, 10 மே, 2020

எறும்பை விலக்கிவைத்த மனிதன்

இடியுடன் கூடிய அடியல் மழையே
விடியலை அடுத்து விழைவுறு வண்ணம்

நல்ல துளிகளாய்ப் பெய்வதிம் மழையே
வானி   லிருந்து வழிதல் நோக்கினென்

மேனி குளிர்ந்திட அழகு காட்டிடும்
நல்லது நமக்கெனில் எறும்புக் கெப்படி?

அவற்றின் வீடுகள் அனைத்திலும் வெள்ளம்
வைத்திருந்   திட்ட வத்துகள் எல்லாம்

வெற்று முயற்சியாய் வீணா கிற்றே!
எறும்புகட் கென்றே இரங்குவர் யாரோ?

சுவர்சூழ் கூரையுள்   இவர்வாழ் மனிதன்
நவைதீர் இரங்குதல் நாட்டினில் இல்லை.

எரிமலை வெடித்து நரன்தலை வீழ்ந்தால்
ஒருகுலை நடுக்கில் உழல்வர் மாந்தர்.

மனிதரை மனிதரே உகப்பர்,
தனித்துயர் எறும்பினைத் தாங்குவர் யாரே?


சுவர்சூழ் கூரை - வீடு.
இவர்வாழ் - இவர்வுஆழ் - ஏறுதல் அல்லது
ஆசையில் மிகுந்த.
அடியல் -  சொரிதல்.
நரன் - மனிதன்
நவை - கெடுதல். தீர் - இல்லாத

மறுபார்வை பின்.