வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

தான்வந்தர முனிவர்

இன்று தான்வந்தரம் என்ற சொல்லைப் பார்ப்போம்,

தான்வந்தரம் தைலம் என்று ஒரு தேய்த்துக்கொள்ளும் எண்ணெய் உள்ளது.  இது நாட்டுவைத்தியம் செய்வோரிடையிலும் செய்துகொள்வோரிடையிலும் மிக்கப் புகழ் எய்திய ஓர் எண்ணெய் ஆகும். தலைக்குத் தான்வந்தரம் தைலமும் உடம்புக்குச் சீரபலாத் தைலமும் தேய்த்துக் குளித்தால் சில உபாதைகள் நீங்குவதாகக் கூறுவர்.  நரம்புத் தளர்ச்சியை விலக்குவன இவை என்பர்.  தான்வந்தர முக்கூட்டு என்றொரு தைலமும் கேரளத்தாரால் பயன்படுத்தப்படுகிறது. இவை யாம் சில ஆண்டுகட்கு முன் கேள்விப்பட்டவை ஆதலால் சரியாக ஒப்பிக்கிறேமா என்று ஐயப்பாடு உள்ளது,  நீங்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.

தான்வந்திரி ( தான்வந்தரி ) என்பது ஒரு முனிவரின்  பெயராம். இவர்தாம் தம் நூலில் இத்தைலம் ( தான்வந்தரம்)  பற்றிக் கூறியுள்ளார் என்ப.

தான்வந்தரி ஒரு பெரிய மருத்துவ நூலார்.  இவர்பற்றிச் செய்திகள் இப்போது கிட்டிட வில்லை.

எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை. தானே வந்த அரிய முனிவர் என்ற பொருள்படும் இவர் பெயர் ஒரு காரணப்பெயரே ஆகும்.

தான் :  தானேயாக.
வந்து :  தோன்றிய
அரு :   அரிய
இ:  விகுதி.

தானே வந்து மக்களிடம் தோன்றிய அரிய முனிவர்
தான்வந்தர முனிவர்

அரு> அரி என்பதற்குப் பதில் தான்+வந்து + இரி என்பதே சொல்லின் வடிவமாகவும் இருத்தல் கூடும்.  இரு என்ற வினை இரி  என்று கேரள நாட்டில் வழங்கும்.அவ்வாறாயின்  அரிய முனிவரென்பதற்குப் பதிலாக வந்து இருந்த முனிவர் என்று பொருள்கொள்ளுதல் வேண்டும்.  இதில் சிறப்பில்லை. அரிய முனிவர் என்பதே அவர்க்குப் பெருமை சேர்ப்பது. செயற்கு அரிய செய்த அருமுனி அவரென்பதனால் என்று கொள்க.  மேலும் இஃது அவர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்.  அவர்தம் இயற்பெயர் எமக்குக் கிட்டவில்லை,  செயற்கரிய செய்த பெரியவரே இவர்.

நோய் தீர்க்கத் தைலம் தந்த இம்முனிவரைப் பாராட்டுவோமாக.

இவர்பற்றிய அரிய செய்திகள் உங்கட்குக் கிட்டுமாயின்  அல்லது  நீங்கள் அறிந்திருப்பின் இங்குப் பின்னூட்டமிட்டுப் பகிர்ந்து கொள்ள வருக.

வியாழன், 21 பிப்ரவரி, 2019

எதைத்தான்

எதைத்தான் பாடுவதோ என்றெண்ணும் போது,
விதைத்தாள் பக்க த் தில்
இருந்தென்றன் அம்மை,
அதைத்தான் கொண்டேனென்(று)
அண்முகின்ற காலை,
சிதைத்தால்    அலைபேசி
செய்வதுவும் தகுமோ?

பல ஆண்டுகளாக கைப்பேசிகளைப் பயன்படுத்தி வந்துள்ளேன், ஆனால் பல கோளாறுகளாலும் சிறந்தமைவுகளாலும் இவற்றையும் இவற்றிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இன்றுகாலை ஒரு சோனி தொலைபேசியிலிருந்து ஒரு பாடல் புனைய முனைந்தேன். ஆனால் இக்கைப்பேசியில் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு சரியாக வரவில்லை;  இருந்தேன் என்பது இருன் -தேன் என்று வந்தது.  நகர எழுத்துவரவில்லை.  அதற்கான ஓட்டுமெல்லி ( டிரைவர் )  இல்லை என்று அறிந்துகொண்டேன். அப்புறம் கைப்பேசியையும் விண்டோஸ் என்னும் இயக்கமைப்பையும்  இணைத்து அந்தச் சிறு கவிதையை எழுதி முடித்தேன். ஒரு விதையைப் பற்றி எழுதப்போய் அது இயலாமல் கைப்பேசி கொடுத்த எழுத்துத் தொல்லையைப் பற்றியே என் கவிதை அமைந்துவிட்டது.  சில வரிகள் தாம். படித்து மகிழுங்கள்.

சிறந்தமைவுகள் - இம்புரூவ்மென்ட்ஸ் என்னும் மேம்படுத்துதல்கள்.
கைப்பேசி =  அலைபேசி.

இயக்கமைப்பு: "விண்டோஸ்" போன்றவை. மென்பொருள் இயக்கமைப்பு.

பாகிகள் : ( பேரகிராஃப் ) சரியாக வரவில்லை. இதைச்சரியாக அமைக்க முடியவில்லை. வேறொரு கணினியிலிருந்து பின்னொரு நாள் செய்யலாம் என்றெண்ணுகிறேன்.

கவிதையின் ஒரு வரிக்கு ( அடிக்கு ) ஒரு  புள்ளி  ( , ) இடப்பெற்றுள்ளது.

நன்றி.


புதன், 20 பிப்ரவரி, 2019

வேவு வேசி தாசி தாசன்

ஒற்றர்களை அனுப்பி அவர்கள் மறைவாக இருந்து நடப்பவைகளை அறிந்துவருவது அரசின் செயல்களில் ஒன்றாகும்,  சில வேளைகளில் இவ் வொற்றர்கள் மாறுவேடத்தில் செல்வர்.

இவ்வேடத்திற்கு அவர்கள்  ஆடை அணிகலன் முகமாவு முதலியவற்றால் தங்களை வேய்ந்துகொள்ளவேண்டும்.  வேய்தல் என்றால் மேல் அணிந்துகொள்ளுதல்.

அவன் பெண்ணுடைகளை வேய்ந்துகொண்டான்.
ஒரு சேவகனின் உடையை வேய்ந்துகொண்டான்

என்றெல்லாம் கூறலாம்.

இந்த வேய் என்ற சொல் தொழிற்பெயராகும் போது வேய்வு ஆகிறது.  வேய்வு என்பதில் யகர ஒற்று கெடும்போது அச்சொல் வேவு என்று திரிந்துவிடும்.

இதிலிருந்து வேவு பார்த்தல் என்ற சொல்வழக்கு ஏற்பட்டது.


யகர ஒற்று இல்லாமற் போன சொற்கள் பல.

எனக்குப் பிடித்த ஒரு திரிபு: வேய்வு >  வேவு போன்றது இது.

வாய் > வாய்த்தி:> வாத்தி >  வாத்தியார். ( பணிவு அல்லது மரியாதைப் பன்மை).

உபா த்ியாயர் என்பது வேறு சொல்.

பண்டைக் காலத்தில் எல்லாம் வாய்ப்பாடமாகத் தான் கற்றனர்.  வாய்ப்பாடம் சொல்லிக் கொடுத்தவர் வாய்த்தியார் > வாத்தியார்.

உய்த்துணர்தல் குறிக்கும் உய்த்தி என்ற சொல்லும் உத்தி ஆனது அறிக.

உத்தி என்பது பின் யுக்தி ஆனது மெருகு.

கண்ணுக்கு இனிய ஆடைகளையும் செம்பஞ்சுக் குழம்பு போலும் அழகுபடுத்தும் துணைப்பொருள்களையும் ேய் ந் து கொண்ட வள் வேய் > வேயி ஆனாள்.  யிகரம் சிகரம் ஆகுமாதலால் இது பின் வேசி என்று திரிந்தது மட்டுமின்றி, பொருளும் பொல்லாமை பூண்டு விலைமகள் என்று உணரப்படலாயிற்று.

தன்னுடல் தந்தவள் தா > தாசி எனப்பட்டாள்.   சி என்பது ஒரு விகுதி.   தாச்சி என்று வல்லெழுத்து மிகாமல் தாசி என்றே மென்மை பெற்றுச் சொல் அமைந்தது. அன்றியும் இடைக்குறை என்று விளக்கினும் ஏற்றற்குரித்தே.
உடலுழைப்புக்குத் தன்னைத் தருவோன் தாசன் எனப்பட்டான்.  இவை தா என்ற சொல்லினின்றும் அமைந்தவை.  சில மேலை வரலாற்றாசிரியர் இதன் அமைப்பு அறியமுடியவில்லை என்றனர். அது தமிழ் வினைச்சொல்லான தா என்பது அறியாமையே  ஆகும். அயற்றிரிபு தாஸ்யு என்பதாகும்.

தாசி என்பது பண்டை நாட்களில் வேலைக்காரிகளைக் குறித்திருக்கக்கூடும்.  வேலைக்காரிகள் ஆண்டைகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டமையால் அவர்கள் பின் விலைமாதர் நிலைக்குத் தள்ளப்பட்டிருத்தல் கூடுமென்பதை ஊகிக்கக் கடினமொன்றுமில்லை என்பதறிக.


திருத்தம் வேண்டின் பின். Some new errors not in original noted. Will correct..