சனி, 11 நவம்பர், 2017

Situation at the China India border:



If the Indian Armed Forces wanted  to bring a bull dozer to the India China border (say in the event of an earthquake, you need heavy machinery to help in the rescue work even though the area is sparsely populated ) they will have to dismantle it into parts and  fly them to the border by helicoper.  There the mechanics will have to reassemble the bull dozer and then test it.
Modi has to focus on many problems.  He is remedying such problems .

It is  a wonder  that such problems have not been addressed previously.

வெள்ளி, 10 நவம்பர், 2017

ஐதராபாத்துப் பிச்சைக்காரர்கள் இடம்பெயர்வு



அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகளார் இவாங்கா 
ஐதராபாத் வருகை முன்னிட்டு அந்நகரம் தூய்மைப்
படுத்தப்படுகிறது.  முதல் வேலையாக பிச்சைக்காரர்கள் 
அப்புறப்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் பலர் பல 
தந்திரங்கள் செய்து பிச்சையைத் தொழிலாக நடத்துவோர்.
இதுபற்றிய கவிதை இங்கே.  படித்து இன்புறுவீர்.

இருமூன்றா  யிரத்தினையும் மிக்கு நின்ற

இரந்துதொழில் புரிந்தோர்-ஐ தரபாத்  தன்னில்,

பெறும்ஈண்டு  புதுவாழ்வு காணீர் மக்காள்!

பெயர்ந்தவர்கள் அரசுதரும் சிறைக்கூ டத்தில்

நறுமாண்ட வசதிகளை நுகர்ந்து வைகும்

நன்னிலையை அடைந்திடுவர் நலமே சூழ.

தெருமீண்டு தூய்மை  நிலை தேரும், இன்றே

தென்னாட்டில் ஓர்புதுமை இந்நாள் மின்னும். 1



அமெரிக்க நல்லதிபர் அருமைச் செல்வி

அங்கவையில் தோன்றியுரை ஆற்றச் செல்வார்.

சுமையாக நகரத்தில் திரிந்து சுற்றும்

சுள்ளகற்றி நல்ல நிலை உய்த்துக் கொள்ள,

தமையிருத்தும் காவலர்கள் தரணி போற்றும்!

தாமிரந்தோர் வாழ்வுறவே தடுத்தாட் கொண்ட,

இமைபொருத்தி விழிகாக்கும் அரசை நாமும்

இனி இங்கு பாராட்டல், இனிதே யாமே.           2

உரை:
 பாடல் 1:
மிக்கு - மிகுந்து.
ஈண்டு - மிகுந்த.
நறு மாண்ட - நல்ல மாண்புடைய.
வைகும் -  தங்கும்.
தெரு மீண்டு - வீதிகள் பிச்சைக்காரர்கள் பிடியிலிருந்து
 மீட்சி பெற்று;
தேரும் - தேர்ச்சி பெறும்.

  பாடல் 2:
அங்கவையில் -  அங்கு அவையில்.
சுள் - சிறுமை, இழிவு.
உய்த்துக் கொள்ள - ஏற்படுத்திக் கொள்ள
இருத்தும் - இருக்கச் செய்யும்.    நிலை  நிறுத்தும்.
காவலர்கள் - போலீஸ்
இரந்தோர் - பிச்சை எடுத்தவர்கள்



சகுனம் என்பது ....



இப்போது நாம் சகுனம் என்ற சொல்லை அணுகுவோம்.

இந்தச் சொல்லின் முன் வடிவம் சொகினம் என்று இருந்தது.  இந்தச் சொல் பேச்சு வழக்கிலோ எழுத்திலோ அண்மையில் காணப்படவல்லை. இதன் திரிபாகிய சகுனம் என்பதே யாண்டும் எதிர்கொள்ளப்படும் சொல்லாகும்.

ஆய்வு செய்வதாயின் நாம் முந்து வடிவத்தையே கவனிக்கவேண்டும்.

சொகினம் என்பதும் முதல்வடிவன்று.   இதன் முதல் “சொல்கினம்”  என்பது.
பல சொற்களில் காணப்படுவதுபோல் இச்சொல்லிலும் ஓர் ஒற்று அல்லது மெய்யெழுத்து வீழ்ந்தது.

 சொகினம்.<  சொல்கிணம் < சொல்கிணை.

ணகரம் னகரமாய் மாறி அம் விகுதி பெற்றது.

கிணை என்பதொரு பறை.  இதை யடித்துக்கொண்டு பாடி நன்மை தீமைகளைத் தெரிவித்தனர்,  பெரும்பாலும் இவை புகழுரைகளாகவே இருக்கும்.

“சகுனம் சொல்லுதல்” என்பது வழக்கு.  சகுனம் என்று சொல் அமைந்தபின் கிணை அடித்தல் இல்லாதவிடத்தும் இது பயன்பட்டது.   எடுத்துக்காட்டு பல்லி சகுனம். 

விளக்கம்: 
மனித வாழ்வில் முன்மை இடர்ப்பின்னலாக இருப்பது எதிர்காலத்தை அறிந்துகொள்ளமுடியாமைதான்.  ஓர் ஐம்பது அறுபது ஆண்டுகட்கு முன் ஒரு கவிஞர் :  “ நாடகமே உலகம், நாளை நடப்பதை யாரறிவார்? “ என்று ஒரு பாட்டை எழுதினார்.  என்றாலும் நாளை நடப்பதை அறிந்துகொள்ள மனிதன் பல கருவிகளைத் தேடி உதவிபுரிய வைத்தான். அவற்றுள் சோதிடம், சகுனம், ஆரூடம் என்பனவும் அடங்கும். நேற்று நடந்தவற்றை வைத்து நாளை நடப்பனவற்றையும் அறிய முற்படுகின்றனர்.   இவற்றுள் முழுப்பயன் அளிப்பன  எவையும் இல்லை.  எல்லாமும் ஓரளவுக்குத்தான் அறிந்துகொள்ளத் துணைசெய்வனவாய் உள்ளன. பறையடித்துக்கொண்டு வீடுவீடாகப் போய்ப் பாடி வீட்டிலிருப்போனைப் புகழ்ந்து பொருள்பெறுவது பண்டைத் தமிழகத்தில் நடந்தது. இவர்கள் நன்மை வரவையும் தீமை வரவையும் பாடிக் கூறினர் என்றாலும் பெரிதும் நன்மையையே முன்னுரைத்துப் புகழ்ந்தனர் என்று அறிக.