புதன், 7 டிசம்பர், 2016

அத்தியாயம்

அத்தியாயம் என்ற சொல்லை முன் விவரித்ததுண்டு,

அற்று =  அத்து.
இயையம் =  இயாயம்

முடிந்து சென்று சேர்ந்து நூலுடன் இயைவது.

ஒரு பகுதி முடிந்து (  அத்து)  பின்பு நூலுடன் இயைகிறது.

அத்து + இயாயம் ‍=  அத்தியாயம்

இப்படி ஒரு சொல்லை அமைத்த அல்லது புழங்கிய பாணினி  ஒரு பாணன். இன்று அவன் பறையருள் அடங்குபவன் .  வால்மிகி  முனிவனும் தலித்து  என்பவனே.  பாணினி  சிவத்தைப் போற்றியவன் ;

மேலும் அறிக:

http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_3362.html

நேத்திரம் - கண்

நேத்திரம் என்ற சொல் கண்னைக் குறிப்பது.

ஓர் ஒலி புறப்பட்ட இடத்திலிருந்து செவிகளை வந்து எட்டி விடுகிறது.
பின்னிருந்தும் பக்கத்திலிருந்தும் முன்னிருந்தும் வரலாம்,

ஒளி என்பது நேராக வந்து கண்ணை அடைகின்றது,  அது கோணலாக‌
வர முடியுமானால் பின்னிருப்பதை நாம் காண இயலுமே.  அப்படி
இயல்வதில்லை.

அதனால் கண்கள் நேராகவே காணும் திறம் உடையவை.

இத்தகைய ஒரு வரம்பு செவி மூக்கு இவற்றுக்கு ஏற்படவில்லை.

நேர்த் திறம் உடையது நேத்திரம் ஆயிற்று,

இங்கு சில சொற்களில்போல் ரகர ஒற்று மறைந்தது.



சோ மறைவு துயர்

எழுத்தாளர் பத்திரிகைப் பண்பர் நடிகர்
வழக்கறிஞர் வாய்மொழி வல்லார் == அழுத்தமுற‌
எண்ணிய  பின்னிடா ஏற்ற கருத்தாண்மை
மன்னிய சோமறைவு மாதுயர் ‍=== விண்ணடைந்த‌
இந்நாள் அவரான்மா எய்துக நல்லமைதி
முன்நாள்  இனிவருமோ  முன் . 

will edit