புதன், 10 பிப்ரவரி, 2016

ஆயிரம்

பத்து என்ற சொல் பல் ( பல,  பன்மை)  என்னும் சொல்லினின்று தோன்றியது. ஒன்று முதலாக எண்ணக்கற்றுக்கொண்ட மாந்தர்க்குப்  பத்தை எட்டியவுடன் அது மிகப்பலவாகத் தோன்றியதே,  பல் என்பதன் அடிப்படையில் பத்தை எண்ணியதற்குக் காரணம் ஆகும்.  இன்று மனிதன் ஆயிரங்  கோடிகளாகக் கணக்கிடுகின்றான்.
ஐந்துக்கு அப்பால் பெரியதாவது  ஆறு ;  இது நதி என்றும் பொருள் படுகிறது.  ஐந்துக்கு அப்பால் செல்வது ஆறுபோல் நீள்வது என்று அயர்ந்தான்  அவன். அந்த நீட்சி குறிக்க  ஆறு என்றே  கூறினான்.  அதிலிருந்து மேல் இன்னொன்றைச் சேர்த்தால்  அது  ஓர் எழுச்சி ஆகிவிட்டது .....எழு > ஏழ் > ஏழு  என்று அதைக் குறித்தான்.

இங்ஙனமே  ஆயிரத்தை அடைந்த போது  அவன் எண்களை  எண்ணுவது  "ஆகிவிட்டது -   இறுதி  ஆகிவிட்டது  -  இனி ஏது பிறவென்ற நிலைக்கு வந்து
அதை  "ஆய்  + இரு +  அம்  -=  ஆயிரம்  என்று கூறினான்.  எண்ணிக்கை முடிவாகி இருக்கின்றது  என்று  கருதினான்.

இன்னும் சென்ற காலை   இனி முடியுமோ -   திரும்பவன்றோ வேண்டும் என்ற கவலை.  கோடு  என்றால் மலையுச்சி.   கோடு என்றால் வளைந்து திரும்புதல்.   இதை  அடிப்படையாக ஏற்று,   கோடு> கோடி  என்றான். கோடி என்பதோ  முடிவு என்றும் பொருள்.  தெருக்கோடி என்ற வழக்கை உன்னுக.

ஆயிருக்கும் ஆயிரமும்  கோடுயர்ந்த கோடியும் கண்டு மகிழ்ந்தோம்.


செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

வாரணம் ஆயிரம்

வாரணம்  ஆயிரம் சூழ வலம்வந்து 

என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள் .

வாரணம் என்றால் யானை.  ஆயிரம் ஆனைகள்  ( யானைகள்  என்றும் எழுதப்பெறும் )  வலம்  வந்தன என்றால்  இங்கு காட்டு யானைகளைக் குறிக்கவில்லை.

வாரணம் என்ற சொல்லே காட்டு யானைகளைக் குறிக்காது.  அந்த யானைகள் வலம்  வர உதவாதவை என்பது மட்டுமன்று;  வாரணம் என்ற சொல்லே அவற்றை  உட்படுத்தாது.

வாரணம் என்பது  வரையப்பெற்ற யானைகளைக் குறிக்கும் என்று அறியவேண்டும். வண்ணங்கள் தீட்டப்பெற்று அழகு படுத்தப்பட்ட யானைகளையே  பாடல் குறிக்கும்;  அதில் வந்த சொல் குறிக்கும்.
வரி வரியாகத் தீட்டப்பட்டு வலம் வருபவை அவை .

வரி + அண் + அம்  =  வாரணம் .
அல்லது:
வரை +  அண் + அம்  =  வாரணம் .

இதில்  வ என்ற குறில்  வா என்று நீண்டது.

எடுத்துக்காட்டுகள்

படி  + அம்  =  பாடம்.
உங்கள் கண்ணும்  கருத்தும் எழுதப்பட்டவற்றில் படிந்து  பின் நீங்கள்  அவற்றைத்  தெரிந்து  வாயிப்பதால்  ( வாசிப்பதால் )  (வாய்விட்டுப் படிப்பதால் )  அது  பாடம் ஆகின்றது.

இதன் முன் கருத்து படிதலே.   படித்தல் பிறவினை.

இப்புணர்ச்சியில்   (ட் + இ = டி ​ )  இகரம்  மறைகிறது.   இகரம்  கெட்டது  என்பர் இலக்கணியர்.  சுடு  > சூடு என்று பெயர் ஆவது போல் முதல் (எழுத்து) நீண்டு
ப > பா  ஆகிறது.

இன்னும் பல உதாரணம் காட்டலாம் என்றாலும்  இக்கருத்தே வலியுறும்.
உங்களுக்கு நேரமில்லை அன்றோ?

இப்படித்தான்  வரி +அணம்  என்பதிலும்  முதல்  (தலை) நீண்டு  இகரம் கெட்டு
வாரணம் என்றாகி,  அலங்கரிக்கப் பட்ட யானையைக் குறிக்கிறது,

வரை + அணம்  என்பதில் ஐ கெட்டு  முதல் நீண்டு புணர்ந்தது என்றாலும்  அதுவும்  இதே.

என்மட்டில் இவற்றுள் எதையும் நீங்கள்கொள்ளலாம். பெரிய வேறுபாடு ஏதுமில்லை.  விவாதம்  வேண்டியதில்லை.  ( வி(ரி) + வா (ய் ) + து ​+   அம் )  

அறிந்து இன்புறுவீர்.


--------------------------------------------------
அணம்  என்ற  இடைச்சொல் -   முன் இடுகைகளில் காண்க.
will edit

தீபாவளிப்பொருள். & தீபாவளி பொருள் difference

தமிழ் இலக்கணத்தின்படி சில சொற்புணர்ச்சிகளில் வலி மிகும்.  அப்படியென்றால்  வல்லின எழுத்து மிகுந்து வரும்.  எடுத்துக்காட்டு:

தீபாவளி + பொருள் =  தீபாவளிப்பொருள்.  

இதன் பொருள் என்னவென்றால்  தீபாவளிக்குப்  பயன்படும்  உணவு  சிற்றுண்டிகள் ,  மற்றும் ஆடை அலங்காரப் பொருள்கள் முதலானவை என்பதாகும் .

Oct 21, 2014, 
மேற்கண்ட 
மேற்கண்ட இடுகைத் தலைப்பில் தீபாவளி  பொருள் என்று  வந்திருப்பதால் வலி மிகவில்லை.  இந்தச் சொற்றொடரை விரித்தால்  தீபாவளி என்னும் சொல்லின் பொருள் என்று  போதரும்.   இதனை  தீபாவளி :  பொருள்  என்றோ   தீபாவளி -  பொருள்  என்றோ  நிறுத்தக் குறிகளுடன்  (punctuation )  எழுதலாம்.

இத்தொடர் சரியாகவே பதிவாகி இருப்பதால்  மகிழ்ச்சி யன்றி வேறில்லை.

தட்டச்சுப் பிழைகள்  காணப்படின்  சுட்டிக்காட்டுவீர்கள் என்று  நம்புகிறோம்.

நன்றி முன் உரித்தாகுக /