புதன், 14 மே, 2014

pakkiri

பெரும்பாலும் முஸ்லீம் துறவியைக் குறிக்கும்  சொல்லாம் இது.

நபி நாதர் தம் பின்பற்றாளர்க்குத் துறவறம் போதிக்கவில்லை. அவர்கள் யாவரும் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தக் கடவர் என்றே அவர் விதித்தார்.  மண வயது எட்டிய ஒவ்வொரு முஸ்லீமும் அவர் வாழ்க்கையில் பக்கத்துணையாக ஒரு பெண்ணைப் போற்றிக்கொள்ள வேண்டும். 

இவ்வாறு கூறினாலும், ஒரு குறிப்ப்பிட்ட குழுவினர்  துறவறம் கொள்வாராய் உள்ளனர். அவர்கள்  "பக்கத்துணை இல்லாதவர்கள்"  என்பது உணரப்பட்ட போது,  பக்கு+இலி =  பக்கிலி  என்ற வரணிக்கப் பட்டனர்.

பக்கு என்பது பக்கம் என்பதன் முன் நிற்கும் வடிவச் சொல்.  பக்கு+ அம் = பக்கம்.

பக்கு + அம் = பக்கம்.
பக்கு+  இலி = பக்கிலி.

லகரம் ரகரமாய்த் திரியும்.

பக்கிலி >  பக்கிரி.>  பக்கிரிச் சாமி.  பக்கத் துணையாக ஒரு மங்கையை இல்லாதவராய் வாழ்வு நடத்தும் துறவி என்பதாகும்.

லகரம் ரகரமாய்ப் பல சொற்களில் திரிந்துள்ளன.  தமிழல்லாத வேறு மொழிகளிலும் இது காணலாம். இதை என் முன் இடுகைகளில் குறித்துள்ளேன்.

அம்பலம் > < அம்பரம்,  சிற்றம்பலம் >  சித்தம்பரம் > சிதம்பரம்.
சிதம்பரம் என்பதற்கு வேறு அழகிய பொருள் வருவித்துரைப்பதுமுண்டு.

இவை பின்பு  விவரிக்கப்படும்.

பக்கிரி என்பது  பின் வேறு மொழிகட்கும் தாவியது  அது மிக்கப் பொருத்தமான அமைப்புடையது என்பதையே தெரிவிக்கும்.

காலாடி

கைப்பொருள் உள்ள /காரணத்தினால் வாங்கித் தின்னும் கூ ட்டாளிகள்  அதிகமாகி  வீணே ஊர் சுற்றிக் காலம் கழிப்பவனைக்  "காலாடி"  என்று சொல்வர் .   நேரம் இருப்பதனால் வீண் சண்டைகளிலும் ஈடுபடுவான் .

" காலாடு போழ்தில் கழிகிளைஞர்  வானத்து
மேலாடு மீனிற் பலராவர் "

என்ற நாலடியாரில் வரும் பாட்டினால் "கைப்பொருள் உள்ளவனையே "  இச்சொல் குறித்த தென்பதை அறியலாகும்.

காலாடுதல்  =  கையில் காசு உள்ளவனாய் .இருத்தல்.

இப்பொருள் இழிந்து இப்போது "rowdy person"  என்று பொருள் தருவதாய் உள்ளது.  கைப்பொருள் பற்றிய பொருண்மை மறைந்து விட்டது ..  

உருவம்

உருவம் என்பது ரூபம் என்று மாறி.   இறுதியில் ரூப என்றானது.

அ, இ,உ என்று முச்சுட்டுக்களில், என்பது முன் தோன்றுதலையும் குறிக்கும். பிற அர்த்தங்களும் உளவெனினும் அவை இப்போது கிடக்கட்டும்.

உருத்தல் ‍ : ‍  முன்  தோன்றுதல்.


"ஊழ்வினை உருத்து வந்தூட்டும்"
( சிலப்பதிகாரம் ).

உரு + அம் = உருவம். வகர உடம்படு மெய் பெற்றது.

வழக்கம்போல், வ > ப என்று திரிந்து, தலை "உ" தொலைந்து, ருகரம் ரூகாரம் ஆகி,  ரூப , ரூபா என்ற சொற்கள் அமைந்தன. இது மகிழ்வு தரும் விளைவுதான்.

பேச்சு வழக்கில் உருவம் என்பது ரூப என்று திரிவதில்லை. வேறு சொற்களில் தலை போவது கண்ட பண்டிதன்மார், இது புனைந்தனரென்றே சொல்லத்தகும்.

இந்தோ ஐரோப்பியத்தில் ரூப உள்ளதா என்று நீங்கள் தேடிப்பார்த்துச் சொல்லலாமே!