ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

An exercise on word formation on adoption தத்து

This purports to be an extension of my last  post on "thaththu" .  Here we examine a number of other ways in which a term meaning or standing for "adoption"  could have been formed. Well,  we must  reach our conclusions at the end of the exercise.  Attempt has been made to keep to ways which must of necessity be unfamiliar  to the reader,  so as to of some pleasure.

தத்து  என்பது புலவர் புனைவு அன்று.    மக்கள் சொல்பேச்சு வழக்குச் சொற்களை "கொச்சைஎன்று  குறிப்பதோர்  வித அறியாமை. பேச்சு  வழக்கோ  உயிருள்ளது.
எழுத்தும்  எழுதப்பட்ட நூல்களும் பேச்சு  வழக்கைப் பார்த்து    "உன்னால்தானே வாழ்கிறேன்  நான்என்று பாடினால்   அது  முற்றும் உண்மையாம்பேச்சு  மாத்திரம் இல்லையானால்   ஏனையவை  "அழிந்து  ஒழிந்து  சிதைந்துவிடும்.   " அது  நிற்க.
இப்போது   தத்து  என்பதை வேறு  விதமாக அமைத்திருக்க  முடியுமா என்று பார்க்கலாம்.


தன்து =   தன்று.
இது  நாளடைவில்  தன்னு  என்று மாறிவிடும்ஒநோ    இன்றுஇன்னு.

தன் + + து    = தனத்து. ( தனது   வேறு).

+ அது ==  தவது.   / தயதுமற்றும் தவத்து    தயத்து.

தன்+ தன.(இதில்   ஏதேனும்   விகுதி வேண்டும்).

அது  + தன்  =  அதுதன்  அல்லது    அதுதனம்  அல்லது    அத்தனம்.

பிலிப்பைன்ஸ்  முதல்   ஃபார்மோசா  வரையில்  அவ்வம்மொழிகளுகேற்ப இந்த இரண்டு   துணுக்குகளை வைத்தே பல  புனையலாம்.

இவை யாவினும்  தத்தே   நன்று. ஒரு பையனோ பெண்ணோ எடுத்து வளர்க்கப்  படுங்காலை அவனுக்கு / அவளுக்குத் தெரியாமல் வளர்க்கப் படுதலே பெரும்பான்மை. பிறர் சுட்டும்போது இதை அடக்கியே வாசிக்க வேண்டும்   சிக்கல்கள் தோன்றுதலைத்  தவிர்த்தல்  கடமை. தத்து  என்பது இங்ஙனம் அடக்கலாகத் தோன்றி  இன்றைய அளவில் முழு  ஓட்டம் பெற்றுவிட்ட சொல். சில எழுத்துக்களை  மறைத்துச் சொல்லமைத்தல் இங்கு தேவையானது.    

தத்து

இச்சொல் எவ்வாறு அமைந்தது என்பது காண்போம்.

தன் + அது =  தனது.

ஒரு குழந்தையைத் தனது ஆக்கிக் கொண்டனர் அந்தத் தம்பதியர்.

ஒரு குழந்தையைத்  தனதாய் எடுத்துக்கொண்டனர்.  ""     "" .


இந்த வாக்கியத்திலிருந்து  ஆய்வைத் தொடங்குவோம்.

தன்  + அது
தன்  +  து.
த      + து.   =  தத்து.

தத்து  என்ற  சொல்லில்   னகர ஒற்றும் அ எனும் எழுத்தும்   மறைந்தன.

அகரச் கட்டு  மறைவது பல சொற்களில் உண்டு.

உடையது  :    உடைத்து.

"அன்பும் அறனும் உடைத்தாயின் ......."  குறள்.  உடைத்து என்பது இலக்கியத்தில் காணப்பெறும் வழக்கு.

அது என்பதில் அ ,  சுட்டு, து என்பது அஃறிணை ஒன்றன்பால் விகுதி.

தத்து என்ற சொல்லமைப்பில் சுட்டு தேவையில்லை.  இங்கு எதையும்  சுட்டி  அடையாளம் காட்டவில்லை.  It has been rightly discarded.

தன்  என்பது   "தற்"   என்று  புணர்ச்சியில் திரிதல்.  எ-டு   :  தற்காலிகம்,   தற்காலம், தற்போது,  தற்பவம், தற்சமம்   எனப்பல. எனவே,  தற்,  >  தத்  என்ற ஒலியுடன் தமிழ்ப் பேசுவோர் ஒத்துப் போகக் கூடியவர்கள்.

தன்  து  >  தற்- து  >  தத்து. இலக்கணம் ஒத்துப் போகாவிட்டாலும்  இந்த ஒலிமாற்றத்துடன் தமிழர் செல்வதில் ஏதும் தடை இருக்காது.

தத்து என்பது பேச்சு வழக்கில் வந்த திரிசொல் ஆகும்,

continued in the  next post.


குறிப்பு:  21.11.2019-ல் காணப்பட்ட மாற்றங்கள் சில
திருத்திச் செப்பம் செய்யப்பட்டன.

"அபராதம்"


இப்போது  "அபராதம்"  என்பதைக்  கவனிப்போம்

அவம் என்பது  அவ > அப  என்று   நின்றது.  அவமாவது கெடுதல் பொருள் தருவதொரு சொல்.

இனி ராதம் எனற்பாலது.

இறுத்தல்  -  "காசு கட்டுதல் "  அல்லது  பணம் கட்டுதல்.

இறு +  அது + அம்  = இறதம்  >  றதம் >  ரதம் > ராதம் .

அது என்பது   சொல்லாக்க இடை நிலையாக  வருமென்பது   பருவதம் (< பரு ), ,   காவதம்  (<கா )  என்பனவற்றில் காண்க. ( இது என்பதும் கொள்க     சுரோணிதம்(<சுர ) கணிதம் (<கணி, கணித்தல் )   )

அப +  ராதம் = அபராதம்  (தண்டம் )  ஆகும். Having to pay a fine is bad for your purse. It is naturally "avam". That's why this word started with "apa-"

இஃது தமிழ் மூலங்களையுடைய ஒரு சொல்.

அவமாகப்  பணம் இறுத்தல் என்பது.

நன்கு   திரித்துப்    புனையப்பட்ட  சொல்.

அவி + அம்  = அவம்  -    முன் இடுகைகளில் காண்க

"அவ இறதம்"  எனில் அஃது ஒரு சொன்னீர்மைப் படாமை அறிக.  "அவவிறதம்"  எனில்  இன்னா ஓசை தரும் .  இவையெல்லாம்  நல்லிசைப்  புலவன்மார் புனைதக்க வல்ல.