அழகியதோர் ஏரிதனை அண்டுசிறு குடிலே,
அரக்குநிறக் களிமண்ணால் ஆனதுவே சுவரும்;
தழைகளையே தரித்திட்ட மழைக்கூரை;
தனியேநான் இக்குடிலில் தங்குவதென் ஆசை.
உமையவளின் அழகினையே ஊருக்குக் காட்டி
உள்ளமைதி தருகின்ற குடிலருகில்,
இமைப்போதும் வண்டுகளும் நிறுத்தாமல் முரலும்.
என்கருத்ததைத் தேன்கூடு பகலெல்லாம் கவரும். பக்49
ஏரிதன்னின் நீர்ப்பரப்பில் சீறிவரும் காற்றால்
இக்கரைமேல் எழுந்தூர்ந்து கைதட்டும் அலைகள்!
பாரிலிது போலமைதி எங்குகிட்டும்?
பயக்குமொரு 'நித்' 'திரை'யால் "திரைநிற்றல்" கூடும்.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
திங்கள், 20 அக்டோபர், 2008
நாளுக்கொரு வெண்பா
ஒவ்வொரு நாளும் ஒருவெண்பா பாடினையேல்
செவ்விய பாத்திறன் கைவருமே -- கௌவ்விக்
கடிக்கப் பொடியாகும் கெட்டியுண்டை நெல்லும்
இடிக்க இடிக்கவே தூள்.
இந்தப் பாடலை வேறு சொற்களால் முடித்திருந்தேன். அது உணர்வுகள் களத்தில் வெளியிடப்பட்டது. இப்போது நினைவில் உள்ளவாறு பதிப்பிக்கபெறுகிறது.
செவ்விய பாத்திறன் கைவருமே -- கௌவ்விக்
கடிக்கப் பொடியாகும் கெட்டியுண்டை நெல்லும்
இடிக்க இடிக்கவே தூள்.
இந்தப் பாடலை வேறு சொற்களால் முடித்திருந்தேன். அது உணர்வுகள் களத்தில் வெளியிடப்பட்டது. இப்போது நினைவில் உள்ளவாறு பதிப்பிக்கபெறுகிறது.
சனி, 11 அக்டோபர், 2008
வெண்பாக்கள்
தேனூறும் வெண்பா தெளிந்த செழுந்தமிழில்
நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும்
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப்
பானயிவை யாவும் கலந்து!!
வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத்
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்ல தமிழ்வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம்
வெல்க உலகில் தமிழ்.
நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும்
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப்
பானயிவை யாவும் கலந்து!!
வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத்
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்ல தமிழ்வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம்
வெல்க உலகில் தமிழ்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)