சான்னித்தியம் என்ற சமஸ்கிருதச் சொல்லில், காட்சிதந்து நிற்றல் என்ற பொருளில் சொல்லமைகிறது. சன்னம் ( பிரசன்னம்) என்பதற்கும் சான்னித்யம் என்பதற்கும் உள்ள நெருக்கத்தினை உணர்ந்துகொள்க. இவ்வேறுபாட்டில் உள்ள பொருளொற்றுமைகளை உணர்ந்துகொள்க. நீங்கள் வாருமே, மற்றும் வருக என்பவற்றில் வகரம் வாகாரம் எனச் சொல் மாறினும் பொருளொற்றுமை மாறவில்லை என்பதை அறிக. அதே வருதல் என்பதுதான்.
அன் (அன்பு) என்ற மூலமே, அண் என்றும் (அண்மை என்பதில் ) மாறிவிடுகிறது. இனி, அன் என்பது சன் என்று மாறுகிறது. இதுபோலவே அண் என்பது சண் என்று மாறுகிறது. இவை எல்லாம் அடுத்துநிற்றல் கருத்துத்தான். அன்பு என்பது ஒரு மனிதனை அடுத்துச்சென்று கொள்ளும் மனவுணர்வு. அண்> அண்ணன் என்பவன் தம்பிக்கு அடுத்து மேல்நின்று பேணுவோன் அல்லது பராமரிப்பவன். காட்சிதருதல் என்பது காணத்தக்க வகையில் அடுத்துவருதல். அன்> சன் என்று திரியும் உள்ளமைந்த சன் தரும் பிரசன்னம் இது என்பதை உணர்ந்துகொள்க.
இதிலிருந்து அண்> ஆண் என்ற சொற்களைக் காண்போம். அண் என்பது மூல (அடி)ச்சொல். ஆண் என்பவன் பெண்ணை அடுத்துச் செல்பவன் அல்லது செல்லும் பிறப்பு என்பது பொருளாகிறது. ஆள் என்பதிலிருந்து ஆண் வந்தது என்று கொண்டு ஆட்சி செய்வோன் பொருள்கொள்வது ஒக்குமா என்பது நன்கு ஆராயத்தக்கது. இது பொருண்மை பற்றியதாதலின், இதை பின்பு சிந்திக்கலாம். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். எம் முடிவை இப்போது சொல்லவில்லை.
பிற என்பது பிர என்று வந்தது. உண்டாதல் என்னும் கருத்து. சன்னம் என்பது அடுத்து என்னும் கருத்தாதலின், பிற என்பது அதே பொருளில் வருவது பொருத்தம் என்று கொள்வதற்கில்லை. அடுத்து முன் தோன்றுதல் என்பதுதான் பிரசன்னம் என்பது , தெளிவாகின்றது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக