இந்தச் சொல்லை அல்லது சொற்றொடரை இப்போது கவனிப்போம்.
இது இறைவனுக்கு ஒரு பெயராகத் தாயுமான சுவாமிகள் பயன்படுத்துகிறார்.
''பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே'' என்ற பாடல் தொடரில் இது வருகின்றது.
பரிதல் என்ற சொல்லுக்கு கதிர்வேலுப்பிள்ளை எல்லாப் பொருள்களையும் விரித்துத் தருகிறார். இவற்றைச் சுருக்கமாக:
பரிதல் - அறுத்தல், அன்பு அன்போடு. பேசல், இரங்கல், ஒடித்தல், ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்து பேசுதல், வெட்டுதல்.
என்று சுருங்கச் சொல்லலாம். பரிதல் என்ற சொல், அதன் முன்வடிவில் பருத்தல் என்றிருந்தது. பரு> பரி. பருத்தது எல்லை கடப்பின் அறுபடும்; ஆகையால் அறுத்தல், அப்புறம் ஒடித்தல், ஒடிபட்டபின் இன்னொன்றுடன் இணைந்து நடத்தல், காதுதல் இன்ன பிறவும் அறிக
மனவுணர்வு கலந்து நடைபெறுதலும் இவற்றுள் வரும்.
புகு(தல்) என்பது பேச்சில் பூர்தல் என்றும் வரும். இதன் எச்சம் பூந்து என்று பேச்சில் வருவதுண்டு. இதைப் புகுந்து என்பதன் திரிபாகவும் கருதற்கு இடனுண்டு. புகு> பூர்> பூரணம் என்பதே இச்சொல்லின் அமைவு. சங்கதத்தில் (சமஸ்கிருதத்தில்) பூரணம் என்ற சொல் இருப்பின் இது தமிழ்த் திரிபுதான். பூர்தல் pūrtal from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 1065)
பூர்தல் - நிறைதல். என்பதும் கூறப்படுகிறது.
ஆக நன்று அம் > ஆ+ நன் + து + அம் > ஆனந்தமானது காணலாம்.
இவற்றைக் கூட்டிப் பொருளுரைத்துக்கொள்க.
சமஸ்கிருதம் என்பது சம + கதம். கதம் - ஒலி.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக