மமதை என்பதன் சொல்வரவு எத்தகையது?
மமதை என்பது மனத்தின் மருவுதலால், அம்மனத்தின் கண்ணே ஒரு மயக்கத்தினை விளைவிக்கும் ஓர் உணர்வுக்கு இடப்பட்ட பெயர். இது எவ்வாறு வந்த சொல் என்பதை இப்போது விளக்குவோம்..
மரு+ மது + ஐ> ம (ரு) மதை > மமதை.
ருகரம் இடைக்குறைந்தது.
இதில். ஐ விகுதி.
மிகுதியாய் வந்து முடிவது விகுதி. மி- வி போலித் திரிபு. எ-டு: மிஞ்சு- விஞ்சு, (மிஞ்சுதல் - விஞ்சுதல் ).
மருமதை> ம(ரு)மதை.
மயக்கினை விளைப்பது மது .
சில அரிய இடைக்குறைகள்:
இரு சொற்களுக்கும் பொதுவான இடைக்குறைச்சொல்.
மடக்கு> மடக்கர்> ம(ட)க்கர்> மக்கர்.
மயக்கு> மயக்கர்>௳(ய)க்கர்>மக்கர்.
கறுப்பிலம்> க(று)ப்பிலம் > கபிலம்
கபிலம் என்பதற்கு வேறு உருவாக்கங்களும் உள.
நிகர், புகர், தகர், நகர்.
மகன், மகர், அன் விகுதிக்குப் பன்மையில் அர் வந்து முடிந்த சொல். மக+ அர்.
அர் விகுதியன்றி ஆர் விகுதியும் வந்து முடியும். மகார் என்பது காண்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக