புதன், 15 ஜூலை, 2026

அரம்பை, அரம்பையர், ரம்பை, ரம்பா

 இந்தச்  சொற்கள்  வழக்கில் சற்று  குறைந்துள்ளன என்று தெரிகிறது.

அரம்பை என்பவள் ஒரு தேவருலக மாது என்பர். இச்சொல் பன்மையில் அரம்பையர் என்று வரும். இச்சொல் தலையிழந்தபின்,  ரம்பை, ரம்பா என்றும் வழங்கும்.

அரம்பை என்ற சொல்லின் பகவுகள் ( உட்பிரிவுகள்),   அரு+ அம்+ பை  என்பன. இவற்றை இணைத்தால் ''அரம்பை''  என்ற சொல் வந்துவிடும். பாணினியில் சமஸ்கிருதச் சொற்பிரிப்பின்படி,  வேறு பிரிப்புகள் இருக்கும்.  பிற எழுத்தாளர்கள்,  வேற்று விளக்கங்களும் அளித்திருப்பர்.  அவற்றை  அவர்களின் நூல்களில் அறிந்துகொள்ளவும். அரம்பை -  பாற்கடற் பாவையருள் ஒருவர்.

அரு என்பதே முதற்பகவு.  அரிய என்ற பொருள்தரும்.

அம் என்பது அழகைக் குறிப்பது. அம் - அம்மை : அழகு.

பை என்பது இளமை குறிக்கும் அடிச்சொல்.   பை> பய் என்றும் வரும்.  பய்> பயில். பயிலுதல் -  தொடக்கப் படிப்பைக் குறிக்கும்.  பய்- பயிர்:  முளைப்பனவில் இளம்பகுதி.  பய் > பயம்:  ஒன்றை முழுமையாக அறியாத போது தோன்றும்  அச்ச உணர்வு என்று சொல்க.  பை > யையன்.  இந்தச் சொல்  boy என்று இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வரும். கிரேக்க மொழிச்சொல் ''பைஸ்'' என்பது உறவுச்சொல்லாகக் காட்டப்பெறும். இளநாட்களில் விளைதல் ''பயத்தல்''  என் க.  இந்த இளமைப் பொருள் நாளடைவில் தேய்வுற்றது -  பிறமொழிகளில்.

அரம்பை என்பதில் இறுதியில் இச்சொல்லே பகவாகும்.

பொருள்:  அழகுடன் இளமையும் உடைய பேரழகி. இது தமிழிலிருந்து வருவது.

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்

பகிர்வுரிமை




கருத்துகள் இல்லை: