செவ்வாய், 13 மே, 2025

சாசுவதம் அல்லது சாஸ்வதம் என்ற சொல். தொடர்வரு கடைப்பிடிகள்

 ஒன்று எதுவாயினும் என்றுமுள்ள தென்று சொல்ல இயல்வதானால் அது மனிதன் இறந்த பின்னும் இருக்கும் மனிதர்களால் பின்பற்றி வரத் தக்கதாகவும்  உண்மையில் பின்பற்றப்படுவதாகவும் இருக்கவேண்டும்.  என்றும் பற்றப் படுவது என்பதற்குச்  சமஸ்கிருதம்  அல்லது சங்கத மொழியில்  "சாசுவதம்" என்று சொல்வர். இதைத் தொடர்வரு கடைப்பிடிகள் என்று இங்கு சொல்கிறோம்.

சா -  இறந்த பின்னும்;

சுவ --  சுயமாக அல்லது தானே தொடர்வருகையாய்

து -  மாற்றமின்றித் தொடர்வது  ஆகிய;

அம்  -  அமைப்பு 

இவ்வாறு விளக்க,  சாசுவதம் என்பது நன்கு புரிந்துணர்வைத் தரும் கடைப்பிடிப்பு என்பதைச் சரியாக விளக்கமுடிகிறது.

சொ >  சு >  சுய  அல்லது சுவ.  இந்தச்சொல் வரும் சொல்லுக்கு ஏற்ப,  சுய என்றோ சுவ என்றோ வரும்.  சுவாதீனம் என்ற சொல்லில் சுவ என்பதே வந்தது.  ஏற்ற வடிவம் தேர்ந்துகொண்டு சொல்லை அமைக்கவேண்டும்.

சொ - சொந்தமாகவே, வ - வந்து கொண்டிருப்பது. இது "சொவ" > சுவ> சுய. சொவ என்பது சொய என்றுமாகும். இது உடம்படுமெய் மாற்றம். இதில் தமிழ் - சம்ஸ்கிருதம் ஒன்றுபாட்டை  உணர்க.

இதையும் படித்தறிந்து ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்:

சம்பிரதாயம்  https://sivamaalaa.blogspot.com/2023/07/blog-post_75.html

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

உங்கள் அன்பான கவனத்திற்கு


FOR YOUR KIND  ATTENTION


If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post for sharing among friends and students.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகைக்குப் பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.


ஞாயிறு, 11 மே, 2025

துரு குறு அடிச்சொற்கள்ள்ரு

 துருவுதல் என்ற வி னையின் அடி ச் சொல் துரு என்பதாகும். இந்த வினையில் வு என்ற வினையாக்க விகுதி வோலைக்கப்பட, மீதம் இருப்பது துரு என்பதே. இது துளைத்து வெளிவருதலைக் கு ரிக்கும் . 

மலாய் மொழியில் ஏ றத் தாழ இதுவே பொருள். ஆன அம்மொழியில்  ஸ் என்ற இறுதி சேர்ந்து கொள்கிறது.   துரு ஸ் என்ற தொடர்ந்து முன் செல்லுதலைக் குறி க்கிறத

இதுவே போல் அமைந்ததுதான்  குறு  >குறுஸ் >கு ரு ஸ் என்பதும். உடல் கு றுகுவ தைக் காட்டும் . ஸ் என்ப தை விகு தி யாய்க்  கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின் 

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.




சனி, 10 மே, 2025

தொந்தரவு முடிந்து நிம்மதி - சொல்லமைப்பு

 தொந்தரவு என்பது ஒரு திரிபுச் சொல். சிலவேளைகளில் எது உங்களைத் தொந்தரவு செய்கிறது என்று வெளிப்படையாகத் தெரிவதில்லை. முன் சென்மத்தில் அல்லது பிறவியில் நடைபெற்று முடிந்த தீவினைப் பயன்கள் மீண்டு வந்து தொந்தரவு செய்வதாக இருக்கலாம். எதனால் தொந்தரவு என்று கடுமையாகச் சிந்திப்பதானால் ஏதும் பயன் விளைந்துவிடாது.  காரணம் கருத்தில் கோளாறு என்பதன்று, எதனாலென்றாலும் வருவது வந்துகொண்டுதான் இருக்கும். இனி அடுத்த சென்மத்தில் இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ள முனையலாமே தவிர பண்டைப் பயன்களை மாற்றி அமைக்கும் திறன் குறைவுதான். காலத்தைப் பின்னோக்கித் தள்ள இயல்வதில்லை. நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து எதுவும் விளைவதில்லை. நீங்கள் எதை நம்பினாலும் நம்பாவிட்டாலும்  நடப்பவை நடக்கும்.


தொல் என்றால் பழையவை. தரவு என்றால் தருதல், அதனால் மீண்டும் வருதல், அல்லது அலையடித்தல்.  தொ+ தரவு >  தொந்தரவு.

நிம்மதி என்பது,  நில் > நி,  நின்று போவது. மன்னுதல் என்பது நிலைகொள்ளுதல்.  மன்னுவதால் நின்று போனவை மீண்டும் தொடங்காமல் இருத்தல்.  திரும்பாமை என்பதற்கு தி என்று போட்டால்  நிம்மதி என்ற சொல் வந்துவிடும். இந்தச் சொல்லும் வாக்கியங்களி லிருந்து குறுகி அமைந்த சொல். நின்று போனவை மன்னுதலும் மறுபடி திரும்பாமையுமும் ஆகும்.

வாக்கியங்களிலிருந்து குறுக்கி அமைக்கப்பட்ட சொல் நிம்மதி,  நில் என்பதில் லகர ஒற்று மறைந்து நி என்று நின்றால் அது கடைக்குறை என்று இலக்கணம் சொல்லும். இதனுடன் மன்னுதல், திரும்பாமை முதலியன வந்து  நிம்மதி என்ற சொல் ஆகிறது.

சொற்கள் பல மனிதன் உருவாக்கியவை. அந்த அறிவினை மனிதனுக்குக் கடவுள் கொடுத்துவிட்ட காரணத்தால் கடவுள் பின்னணியில் இருந்துள்ளார்.  அவனன்றி அணுவும் அசையாது என்பதால் அவ்வாறு எடுத்துக்கொள்வதற்குக் காரணம் உள்ளது. நீர் எதை நம்புவதாலும் நம்பாமையினாலும் எதுவும் உலகில் மாறிவிடாது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

உங்கள் அன்பான கவனத்திற்கு


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்குப் பகிர்வுரிமை  அளிக்கப்படுகிறது.



வியாழன், 8 மே, 2025

அனுக்கிரகம் என்பதென்ன? தமிழா? தெரிந்துகொள்ளுங்கள்.

 பற்றனின் அல்லது பக்தனின் ( பத்தனின்)  அன்புக்காக அணுகிவந்து அகத்தில் இருப்பவன் தான்  இறைவன்.  அவன் இவ்வாறு அன்பு காட்டி அருள் கூட்டிய கதைகள் நாட்டில் பல வுண்டு என்பது நீங்கள் அறிந்தது.\

இதிலுள்ள தமிழ்ச் சொற்களின் ஓட்டத்திலே நாம் சென்று ஒட்டி உணர்ந்துகொள்ளுவோம்.

அன்புக்கு:

இந்தச் சொல்லில் ( அன்பு)   பு என்பது விகுதி.  விகுதி வேண்டாம் என்று விட்டுவிட்டால்,  அன்+( ப்) உ+ க்கு,  இவை சேர்க்க:  அனுக்கு என்றாகும்.

இரு என்பதை இணைக்க:

அனுக்கிரு  என்று வந்துவிடும்.

எங்கே கடவுள் வந்து இருப்பான் என்றால் அகத்தில் இருப்பான்.  ஆகவே

அனுக்கு + இரு+ அகம் >  அனுக்கிரகம் என்று வந்துவிடும்.  இரு என்பதன் இறுதி உகரம் நீங்கிற்று.

அனுக்கிரகம் என்பது சமஸ்கிருதம் என்னலாம்.  அதுவும் இந்திய மொழிதான்,  தமிழர்களாலும் வளர்க்கப்பட்ட மொழிதான்.  இராச இராசன் முதலிய பேரரசர்கள் தென் கிழக்காசியா முழுவதும் அதைப் பரப்பினார்கள். தமிழர்கள் அதில் ஒட்டும் உறவும் இல்லை என்றால் ஏன அவ்வளவு சிரமம் மேற்கொள்ளவேண்டும்? வேறு வேலை இல்லாமலா?

சமஸ்கிருதம் என்பது சம கதம் அல்லது சங்கதம் என்றும் பெயர் பெறுவதுண்டு.  கதம் என்றால் ஒலி :  கத்து> கது > கதம்/  ஒலி.  தமிழுக்குச் சமமான ஒலியமைப்பை உடைய  மொழி சமஸ்கிருதம் ஆகும்.  இதை வெள்ளைக்காரன் வேறு பொருள் சொல்லி மடக்கினான். வங்காள அறிஞர் எஸ் கே சட்டர்ஜீ யின் மொழி ஆய்வினையும் படித்து அறிந்துகொள்ளுங்கள். தென்மொழிகளின் ஒலியமைப்பை உடையது சமஸ்கிருதம்.

அன்புக்காக அகத்தில் வந்து இருப்பவன் தான் இறைவன் என்பதை இந்தச் சொல்  ( அனுக்கிரகம்) என்பது  தெளிவாகக் காட்டுகிறது.

சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பியம் என்றால் சொல் ஏன் இப்ப்டி அமைகிறது?

அன்பு  என்ற இனிமையான சொல்,   அண், அன் என இருமடியாகத் திரியும்.  அணுக்கம்,  அணு முதலிய சொற்கள் அண் என்னும் அடியில் தோன்றின.  அன்பு, அனுக்கிரகம் முதலியவை அன் என்னும் அடியில் வருவன ஆகும்.  இன்னும் பல உள்ளன. நான் இரண்டு எடுத்துக்காட்டுவதான் இரண்டுதாம் உள் என்று எண்ணிவிடலாகாது.. அனுசரணை என்பது அன் அடியில் தோன்றிற்று என் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may  share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.




புதன், 7 மே, 2025

விக்கிரமா

 இன்று விக்கிரம என்ற சங்கதச் சொல்லை அறிந்துகொள்வோம். 

சங்கதம் என்பது  சமஸ்கிருதம் என்பதற்கு மற்றொரு பெயர். இம்மொழிக்குப்   பல பெயர்கள் உள்ளன. சந்தாசா என்றோர்  "அழைப்பும்" உண்டு. இது சந்த அசைவு என்ற தொடரின் மருவுதலே.

இனி  விக்கிரம என்ற என்பதைக் கவனிப்போம்.

இது வில் + கு+ இரு +அ+அமை +அ என்பவற்றின்  சேர்க்கையும் திரிபும்தாம். வில்லுக்குப் பெரியோனாய் அமை ந்தவன்  என்பது பொருளாம். வில் கு > விற்கு என்று தமிழிலும் விக்கு என்று அயலிலும் வரும். இரு என்றால் பெரிய என்பது. இரு என்பது எண்ணிக்கை என்றும் கொள்ளல் தகும். இருமடங்கு என்னில் அதுவும் பெருமைக்  குறிப்பே.

வில்லிற் பெரியோன் எனில் வீரன் என்பதன் பொருட்டு.  பெண்ணுக்கும் அமையும்.

விக்கிரம என்ற சொல் தமிழ் மூலத்தது. இது மனிதப் பெயர்களிலும் பயின்று வழங்கும் .

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பிறருடன் பகிர்க.



செவ்வாய், 6 மே, 2025

உத்வேகம் என்ற சமஸ்கிருதமும் அதற்குரிய மூலச்சொல்லும்.

 இன்று உத்வேகம் என்ற சமஸ்கிருதச் சொல்லையும் அதன் தமிழ் மூலத்தையும் காண்போம்.

சுட்டடிச் சொல்வளர்ச்சியில்  அ , இ , உ  என்ற மூன்று சுட்டுகள் இடம்பெறுகின்றன.  இவற்றுள் அ ( அகரம் )  மற்றும் இ  (இகரம் )  இரண்டும் இந்நாள் வரையில் தொடர்ந்து வாழ்ந்துள்ளன.  ஆனால் உகரம் என்பது பல்லாயிரம் சொற்களைப் படைத்துவிட்ட பின் வழக்கொழிந்து அல்லது குன்றிவிட்டது  உத்வேகம் என்ற சொல் இந்த உகரத்தைச் சார்ந்து எழுந்தது ஆகும். இதன் முழுமை யாதெனின் உது வேகம்  என்பதுதான்.   இது அது வேகம் என்றும் இது வேகம் என்றும் வருமாறு போல உண்டான பயன்பாடுதான்.  உது வேகம் என்றால் முன்னுள்ள வேகம் என்பதுதான்.  மனிதனின்  எண்ணத்தில் செயலில் முன்னே எழுநிலையாக நின்று அவனை வழிப்படுத்துவது என்று பொருள் பெறுகிறது/  இந்தப் பொருள் சுட்டடிக் கருத்து அடிப்படையில் எழுந்து வேறு பயன்பாடுகளால் மங்கி விடாமல் உத்வேகம் என்ற சொல்லிலும் இன்றும் காணப்படுவதும் பயன் கொள்வதும் ஆகும்.

உதுவேகம் என்பது சமஸ்கிருதத்தில் உத் வேகம் ஆகிறது.  இதில் து என்பதில் உள்ள உகரம் கெட்டது அல்லது விலக்குண்டது என்பதுதவிர  வேறு மயக்கம் யாதும் இலது கண்டுகொள்க.

தமிழ் முறைப்படி காணப்படும் சொற்கள் சமஸ்கிருதத்தில் இவ்வாறு குறுக்கமுற்று வழங்குவது அம்மொழிக்குரிய இயல்பு  ஆகும்.  

இன்று இதைப் ப்யன்படுத்த வேண்டின் உத்துவேகம் என்று விரித்துப் பயன்படுத்தலாம்.  ஆனால் அதற்கீடான தென்மொழிச் சொற்கள்  தடையின்ரிக் கிடைப்பதால் இவ்வாறு விரித்துப் பயன்படுத்துதன் தேவையானல் செய்துகொள்ளலாம்.  இல்லை என்றால் வேறு தனித்தமிழ்ச் சொற்களைப்  பயன்படுத்திக் கொள்க.

வேகம் என்பது வேகுதல் என்பதன் தொடர்பில் எழுந்ததே.  வேகுதலால் அல்லது வேக்காளத்தால்  பொருள்கள் விரைவில் அழிந்து அல்லது மாறிவிடுகின்றன.  இவ்வேக்காளம் வெப்ப மிகுதியால் ஏற்படும் அழிவு. விரைந்து அழிதற்குக் காரணமாவதால் வேகு+ அம் > வேகம் என்ற சொல்லுக்கு விரைவுப் பொருள் வழக்கில் உண்டானதே ஆகும். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may  share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.




திங்கள், 5 மே, 2025

பள்ளத்தாக்கு

 இன்று பள்ளத்தாக்கு என்ற சொல்லைப் பார்ப்போம்.

பள்ளம் என்பதில் எந்தக் கவனத்திற்குரிய திரிபும்  இல்லை. இதன் பொருள் நிலத்தின் உள்ளிறங்கிய பகுதி என்பதே. இது இயல்பான பொருள்.

தாக்கு என்பதில் கருதற்குரிய திரிபு உள்ளது. தாக்கு என்பது தாழ் > தாழ்க்கு > தாக்கு என்று அமைகிறது.

 இதில் வரும் தாக்கு,  வலி வருமாறு மோதுதல் என்று பொருள் படும் சொல் அன்று. மேற்காட்டியவாறு திரிந்த இன்னொரு சொல் ஆகும். இதில் வரும் திரிபும் தனிததன்மை உடை யது என்று கருதலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து  பயில்க.



வெள்ளி, 2 மே, 2025

விருத்தி, விருத்தியுரை

விருத்தி என்னும் சொல்லின் பொருளும் தோற்றமும் காண்போம்.

இதன் அடிச்சொல் விர் என்பது. விரிதல் , விரித்தல், விறைத்தல், விருத்தம் என்ற பல பத ங்கட்கு  விர் என்பது அடிச்சொல் ஆகும். வேகம், விரிவு, க ட்டியாகி நீட்சியும் பெறு தல்  எனப் பல நுட்ப வேறுபாடுகளைக் காட்டவல்லது இவ்வடியாகும்.இசையுடன் பாடுகையில் சற்று நீட்டிப் பாடும் வகையினது எனக் குறிக்க இப்பெயர் எழுந்தது என்க. விறைத்தலில் இடவிரிவும் கொள்வதும் கூடும் ஆதலின் விரி என்பதனுடன் இஃது ஒற்றுமைகொள்ளுதலும் உளதாகும்.

விருத்தப் பாக்கள் தமிழிற் பல வுள கோ . ஆதலின் இச்சொல் தமிழா சமஸ்கிருதமா வெனில் thamizhenREe தமிழே  என்று கோடலும் சரியாகும்.

விருத்தி என்பது விரித்தி என்பதன் திரிபு எனலும் ஒக்கும் 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்க தமிழ் பரப்புக.


ப்





வியாழன், 1 மே, 2025

வருஷம் வருடம் என்பதற்கு இன்னொரு முடிவு

 வருடம் என்ற சொல்லுக்கு பல்வேறு சொல்லமைப்புக்களைக் கூறலாம், வருஷ என்பதை மழைவருங்காலத்தை முன்னிட்டு எழுந்த சொல் என்றும் கூறுவதுண்டு.

இந்தச் சொல் தமிழிலும் வழங்குவதால் தமிழ் மூலங்களைக் கொண்டு இதற்குச் சொல்லமைப்பைக் கூறுதலும் பொருத்தமே.

தமிழ் எண்ணிக்கையின் படி 12  மாதங்கள் கொண்டது ஒரு வருடம் ஆகும். ஒரு வருடத்தில் வரும் மாதங்களை அவை வரவர அவற்றைச்  மேல்சட்டை போடுவதுபோல் உடுத்துக்கொண்டு மாதம் முடிந்தது கழட்டி விடும் மாதமுறை உள்ளது.

வரு + உடு + அம் >  வருடம் ஆகிறது,   உடுப்பதைக் கழட்டி விடுவதும் இயல்பானதே. மாதங்கள் அப்படியே நகர்ந்து மறைந்து இன்னொரு வருடத்தில் மீண்டும் வரும்..  ஆகவே உடு ( உடுத்தல்) இங்கு நன்கு பயன்பெற்றது என்று கூறலாம்,

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

உங்கள் அன்பான கவனத்திற்கு


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.