வியாழன், 29 மார்ச், 2018

மோடியும் அமித்ஷாவும் கர்நாடகாவில்....



இவ்விரண்டு இன்னிசை வெண்பாக்களும் கர்நாடகா மாநிலத் தேர்தல்கள் பற்றியவை.  மோடியாரின் வாய்ப்புகள் மாடிபோல் உயர்ந்து நிற்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன.  அவை மோடி மந்திரம் (மேஜிக்) என்`கின்றன. தேர்தல் முடிவுகட்கு ஆர்வமுடன் காத்திருப்போம்.  நல்ல முடிவாகட்டும் .

இன்னிசை வெண்பாக்கள்.


மோடி அமிட்சா மொழிமந்  திரங்களே
கூடி உவப்புடனே கோடியாய் வாக்குகள்
வந்து குவிந்திடுமோ வைகுவம் ஆர்வமுடன்
செந்தண் முடிவாக்கும் சீர். 1


அரசகுல ஆள்வொழிந் தாலும் அகலா
முரசுகளை நன்றாய் முழக்கிவரும் கட்சிகள்
தந்தைதாய் பாட்டன் தருகோலால் ஆங்கமைதல்
நந்தா நடப்பாமோ நாடு.
      2

அருஞ்சொற்பொருள்:

பாட்டு 1 

மொழி = பேசுகின்ற; பரப்புரை செய்கின்ற. 

மந்திரம் -  மக்களிடம் ஏற்பட்டுள்ள ஒருவித மாயமயக்கு.

கூடி -   ஒன்றாகி.
இருதலைவர்களின் இணைதிறனைக் குறிக்கிறது.
உவப்பு -  மகிழ்ச்சி.
வைகுவம் -  காத்திருப்போம்.
செந்தண் -  சிறந்த.
முடிவு ஆக்கும் - முடிவுகளை உண்டாக்கும்.

பாட்டு 2

ஆள்வு -  ஆட்சிமுறை
அகலா = அரசர்கள் பதவியேற்கும் முறையினின்று
விலகாத;
தருகோலால் =  தருகின்ற ஆட்சி முறையால்.
ஆங்கு அமைதல் -  அவ்வாறு ( ஆட்சி) அமைதல்.
நந்தா -  கெட்டுப்போகாத; நீங்காத.
நடப்பு ஆமோ = நிகழ்வும் ஆகுமோ.
நாடு -  சிந்தனை செய்க.

புதன், 28 மார்ச், 2018

சிவமாலா வலைத்தளமோ ஓட வில்லை....!


சிவமாலா  வலைத்தளமோ ஓட வில்லை
செய்தனரே அதுவென்ன? வாட வில்லை
இவண்மீண்டும் வருகின்றேன் பாடலொன்றைப்
புனைந்துங்கள் முன்வைத்தேன்  தேடு முன்னே
கவண்வைத்துக் குருவியைப்போல் சிக்க வைத்துக்
காட்டுக்குள் போட்டாலும் கடுகி வந்து
கவிமாலை சொல்லாய்வு கவினு ரைகள்
கனிவோடு தரமுருகன் அருளே செய்வான். 

இது 23.3.2018ல் எழுதப்பட்டது.  வலைத்தளம் வசப்பட்டது
போல் தோன்றினாலும் எதையும் பதிவேற்றம் செய்ய
முடியவில்லை. இந்தப் பாடலை மட்டும் சேமித்து வைத்து
வேறோர் இடத்துக்கு அனுப்பி இப்போது மீட்டெடுத்தோம்.
அந்தத் தடையை நினைவு கூர்வது நல்ல அறிகுறியா 
என்று தீர்மானிக்க இயலவில்லை. எழுதப்பட்டதைப்
படித்து மகிழுங்கள்.

பல காரணங்களால் அவ்வப்போது தடைகள்
ஏற்பட்டுக்கொண்டுதாம்  உள்ளன. என்றாலும்
தொடர்வோம்.

நம் வலைத்தளத்தைத் தேடினால் வேறு தளங்களுக்கு
மாற்றிவிடுதலும் நடக்கிறது.  இத்தளம் இல்லை என்றும்
அறிவிப்பு வருகிறது. கவலை வேண்டாம்.

ை நிகழ்ந்து இன்னொரு நாட்டில்.

காமி ( காட்டு) மற்றும் காமி (அன்புக்குரியாள்)



பிறவினைச் சொற்களில் ஏற்படுந்  திரிபுகள்


காண் என்பதன் பிறவினை காண்பி  என்பது.  இதை நம் இலக்கண நூல்கள் விளக்கும்.  செய் என்னும் வினையோவெனின் செய்வி என்று பிறவினை வடிவு கொள்ளும்.  ~தல் என்னும் தொழிற்பெயர் விகுதியைச் சேர்த்தால் காண்பித்தல்,  செய்வித்தல் என அமையும்.

செய்வி, காண்பி, செய்வித்தல் காண்பித்தல் போன்றவற்றைத் தனிச்சொற்களாய் நாம் கொள்வதில்லை.  செய், காண் என்ற சொற்களையே சொற்களென்`கிறோம்.  மற்றவை இச்சொற்களின் பிறவினை வடிவங்கள் என்`கிறோம்.  செய்வித்தல் போன்ற சில வடிவங்களை அகராதிகளும் பெரும்பாலும் தருவதில்லை.

காண்பித்தல் என்பது பேச்சுமொழியில்காமிஎன்று வருகிறது. காமி என்பது  அகரவரிசையில் இப்பொருளில் இடப்படுவதில்லை.
காமி, சத்தியபாமா, கதவைத் திற வாஎன்ற நாடகப் பாட்டில் காமி என்பது காமத்துக்குரிய பெண்ணைக் குறிக்கிறது.  கலகம் மூலம், காமினி மூலம்  என்ற மலையாளப்பாட்டிலும்  காமினி என்பது காமி என்ற பொருளிலேதான் வருகிறது.

காமம்> காமி > காமினி.

காமி  (காட்டு என்ற பொருளில் ) என்பதை   முறைப்படி அமைந்த சொல்லாய்த் தமிழாசிரியர் ஏற்றுக்கொள்வதில்லை.  

சிவகாமி என்பதில் சிவனின் இணை என்ற பொருளில் காமி என்பது சரியாக வருகிறது.
காமி என்பது அன்புக்கும் அணைப்பிற்கும் உரிய பெண் என்று தனித்து நின்றும் பொருளுணர்த்தும். ஆனால் பேச்சு வழக்கில் காண்மி, காண்பி என்பவற்றுடன் சென்று மலைவு தருகிறது.  காமினி என்பது இன்+இ என்ற இறுதிகளைப் பெற்று இவ்விலக்கலிலிருந்து தப்பிவிடுகிறது.

ஒருமித்தல் என்ற பிறவினையில் மி என்ற இறுதிநிலை  வந்து, நல்ல சொல்லாகிறது.  நிறுமித்தல் ( நிருமித்தல்) என்ற சொல்லிலும் தடைக்கற்கள் இல்லை.  நேர்மித்தல் ( நேமித்தல் ) என்பதிலும் பிறவினையமைப்பு நன்றாகவே உள்ளது. ( நியமித்தல் என்பது இன்னொன்று).   சேர்மித்தல் ( சேமித்தல்) என்பதும் நன்று.

காமி(த்தல்) என்ற பேச்சு வழக்குச் சொல்லை காண்மித்தல் என்று திருத்தமாக எழுதியிருப்பின்  அல்லது பேசியிருப்பின்  இடர் ஏதுமில்லை. அது காண்பித்தல் போலவே ஏற்றுக்கொள்ளத்தக்க உரு உடையதாகிவிடும், இடையில் நிற்கும் ணகர மெய்யை ஒலிக்க இயலாத காரணத்தால் காண்மி என்பதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. காண்பி என்பதும் அதே காரணத்தால் உரையாடல்களில் அருகிவிடுகிறது.

காண்மானம் என்ற பேச்சுச்சொல்,  எழுத்தில் வருவதில்லை.  "ஓரு காமானமா அதெ சொல்லுவாரு" என்று செவிகளில் வந்தேறும்.  அகராதிகளில் இல்லை.  எடுத்துக்காட்டு என்ற பொருளில் இது கையாளப்படுகிறது. இதிலும் ணகர ஒற்று மறைந்துவிடுகிறது. காண்மானம் என்பதில் இலக்கணத் தெற்று ஏதுமில்லை. 


(பிழைத்திருத்தம் பின்.)


செவ்வாய், 27 மார்ச், 2018

நஞ்சை புஞ்சை தஞ்சை இன்னும் சில



சில திரிபுகளை இன்று மறுபார்வை செய்வோம்

செய் என்ற சொல் வினையாகவரும்போது  செய்தலைக் குறிக்கும். அது பெயர்ச்சொல்லாக வரும்போது நிலம் என்றும் பொருள்படும்.
எடுத்துக்காட்டுகள்.

நன்செய் :  இது திரிந்து நஞ்சை என்றாகும்.

புன்செய் :  இது திரிந்து புஞ்செய் என்றாகும்.

இத்தகைய திரிபுகளைப் பெருவாரியாகக் காணமுடிவதில்லை.  மொழியில் சிலவே கிட்டுகின்றன. நீங்களும் தேடிப் பாருங்கள்.

சோழன் கரிகால் வளவன் காவிரியினைச்  செம்மைப் படுத்தி மக்களுக்கு நீர் கிடைக்கும்படியான வளத்தை உண்டாக்கிய பின் சோழ நாட்டில் பல பகுதிகள் செழுமை பெற்றன.  வரண்ட பூமி தண்மை பெற்று  விவசாய மென்னும் விழுமிய வாழ்வுக்கான சா(ய்)த்தியம் உண்டாயிற்று.1

தஞ்சையென்னும் நகரும் அதன் பெயரைப் பெற்றதென்று தெரிகிறது.  ஆனால் அப்போதே பெயர் அமைந்ததா அல்லது பின்பா என்பது ஆய்வுக்குரியது.

தஞ்சை என்னும் பெயர்:
தண்+ செய் =  தஞ்சை.

தண்மையான நிலங்களை உடைய இடம்.

0னகர 0ணகரங்கள்  ஓரினத்தவை.

விஞ்சுதல் என்பது மிஞ்சுதல் என்றுமாகும்.   குவி என்பது குமி என்றும் அமையும்.    அம்மை என்பது அவ்வை என்றுமாகும்.  இவையெல்லாம் மகர வகர எழுத்துப் பரிமாற்றங்கள்.  இத்தகு மாற்றத்தினைப் போலி என்றும் கூறுப.

இதன்படியே வல்>வன்> வன்சி>  வஞ்சி எனற்பாலது மஞ்சி என்று வந்து, வலிமை என்றும் பொருள்தரும்.
வஞ்சி என்ற சொல்லும் போருக்குச் சென்று வலிமை காட்டுதல் குறிக்கும்.  சற்றுக் கடின ஒலிகளை யுடைய பாவாகிய வஞ்சிப்பாவையும் குறிக்கும். அடிப்படைப் பொருள் வலிமை என்பது (வல்>வன்).  பெண்ணைக் குறிக்கும் வஞ்சி என்பது வலிமையுடைய பெண் என்பதையே குறிக்கும் எனினும் அப்பொருள் நாளடைவில் மறைந்து பொதுப்பொருளில் சொல் வழங்கிற்று என்று அறிக.
இது இங்கு காட்டப்பெறுவதற்குக் காரணம்,  0ன்சி என்ற எழுத்துச்சேர்க்கை ஞ்சி எனவாகும் என்பதே.

செய்கை > சைகை.  (கைச்செய்கை).
செய்தன்னியம் > சைதன்னியம்.

https://sivamaalaa.blogspot.com/ 


அறிந்து மகிழ்க.

பிழைத்திருத்தம் பின்பு. 

---------------------------------


அடிக்குறிப்பு: 

1. விவசாயம்(acronym) இது ஒரு முற்கூட்டுச் சொல்:  வி = விழுமிய; வ = வாழ்வு;
சா = சார்ந்த;  அம்: இது சொல்லாக்க விகுதி.  வ  என்பது வாழ்வு ,   வா என்பதை வ  என்று  குறுக்கிய  உத்தி;  வழுத்து, வாழ்த்து என்று நடைபெறும் சொற்களில்  வாழ் என்பது வழு என்றும் குறுகுமென்பது அறிக. தமிழ்மொழியில் இத்தகு வசதி கிட்டுவதால், வ: என்பதை வாழ்வு குறிக்க நிறுத்தியது பொருத்தமான புனைவுதான்.

இன்னோர் எடுத்துக்காட்டு: கபோதி.  கண்போன திக்கற்றவன் என்பது சொல்லமைப்பின்போது நின்ற பொருள்.  இப்போது போதி - போதமுடையான், க = கழிந்த, கடைகெட்ட என்று இணைக்கும்படியான பொருள் மாற்றம் உண்டாகிவிட்டது.

விவாகம் என்பது மற்றுமொன்று.  விழுமிய; வா = வாழ்வுக்கு; ஆ = ஆகும்;  (  நெறி )  அம் விகுதி.

முற்கூட்டுச்  சொல் :  முதலெழுத்துக்களைக் கூட்டி  அமைக்கப்பட்ட சொல் .  

இப்படியெல்லாம் சொல்லமைத்தவர்களைப் பாராட்டுங்கள். 

28.3.2018
 

திங்கள், 26 மார்ச், 2018

அணுவும் ஸ்தம்பித்தலும்



தம்பித்தல் > ஸ்தம்பித்தல் என்ற சொல்லை ஆய்ந்து காண்போம்

மற்ற கருவிகள், உறுப்புகள் அல்லது பாகங்களுடன் இணைந்து செயல் பட்டுக்கொண்டிருந்த ஒரு பொருள் செயல்பாடாமல் நின்றுவிட்டால் அதைத் தம்பித்து விட்டதென்று கூறுவோம்.  இது “ஸ்தம்பித்து” விட்டதென்பது ஒரு மாற்று வழக்கு.

தம் என்பது தமிழில் பன்மைப் பதிற்பெயர்.  தாம்> தம்.

ஒன்று என்று நாம் சொல்லும் எந்தப் பொருளும் ஒரே ஒரு பொருளாய் இயங்குவதில்லை.  எடுத்துக்காட்டாக:  ஒரு மனிதன் என்பவன் பல உறுப்புகள் ஒன்றாக இணைந்து செயல்படும் ஒரு பிறவி. அவன் இறந்துவிடும் போது அவனுள் ஏதோ ஓர் உறுப்பு செயல்படாமல் நின்றுவிட்டது.  அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகள் இயங்கவில்லை என்பதே பொருள்.  அவை “தாம்” ஆகிவிட்டன.  அவை தானாகியோ தாமாகியோ இயங்குதலை விட்டன.

இந்த நிலையை,  தானித்தல்  அல்லது தன்னித்தல்  என்று அமைக்காமல் தம்பித்தல் என இச்சொல்லில் அமைத்தது ஒரு பேரறிவு ஆகும்.

இதற்குக் காரணம் அணுவைத்தவிர பிற அனைத்தும் இணைந்தே செயல்படுபவை.  அவை தம்பித்து விடுகின்றன அல்லது “தாமித்து “ அல்லது தாமாகி விடுகின்றன.

அணுத்திரட்சிகள் இணைந்ததே பொருள்.  அத் திரட்சிகள் இயங்காமை “ தம்பித்தல்” ஆகும்.

தமிழின்மூலம் ஆய்ந்தாலே இந்த அறிவியல் உண்மை புலப்படும்,  வேறு தன்னிறைவுச் சொல்லாய்வுகளில் இது விளக்கப்படுதல் இயலாது.

தம்பித்தல் என்பது ஸ்தம்பித்தல் என்றானது ஒரு திரிபு அல்லது மெருகூட்டல் ஆகும்.

தமிழில் அணு என்ற ஒரு சொல் பண்டைக்காலம் தொட்டு வழங்கி வருகிறது. “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்பதில் அணு என்ற சொல் மிளிர்கின்றது.  அண் என்பதிலிருந்த அணு என்ற சொல்லைப் படைத்துக் கொண்டனர் தமிழர். ஓர் அணு மற்றோர் அணுவை அணுகியே திரண்டு பொருள்களை உருவாக்குகிறது என்பதை அறிந்த தமிழர்  அணுகுதல் என்ற சொல்லினடியாகிய அண் என்பதிலிருந்து இதற்குப்  பெயரிட்டது இன்னொரு பேரறிவு ஆகும்.

தமிழை அறிக.
 நிறைவைப் பெறுக.







ஞாயிறு, 25 மார்ச், 2018

இகரம் இணைந்து வினையாக்கம்

ஒன்று என்பது ஒரு பெயர்ச்சொல்.  அதை எண்ணுப்பெயர் என்பர்.
அதாவது ஒரு எண்ணுக்குப் பெயராக வருவது.  அதை ஒரு வினை
யாக மாற்றுவதென்றால் எப்படி அதைச் செய்வது?

ஓன்றாக்கு; ஒன்றாகு;
ஒன்றுபடு; ஒன்றுபடுத்து;
 என்று சொல்லலாம்.

ஒன்றித்தல் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒன்று என்பதில் ஒரு இகரத்தைச் சேர்த்தால்  அது வினை
யாகிவிடும்.

இதேபோல் இரண்டு என்பதை வினைச்சொல் ஆக்க,  இரண்டு+
இ =  இரட்டித்தல்  என்று அமைக்க.

மூன்றுக்கு இப்படி அமையவில்லை.  மூ என்பது வயதாகுதல்
என்றும் பொருள்படுவதால், மூன்றித்தல், மூவித்தல் என்று
அமையவில்லை. இது மொழிமரபு.

ஒரு என்ற சொல்லிலிருந்து  ஒரீஇ என்ற சொல் அமைந்தது. இதில்
ஒன்றித்தல் என்பதில் போல இகரமே வந்து வினையமைந்தது.
மேலும் ஒரீஇ என்பது அளபெடை வடிவமெடுக்கின்றது. இகரம்
வந்து வினையாகாத சொற்களும் உள.  எடுத்துக்காட்டு:
குரீஇ  என்பது.  இதன்பொருள் குருவி.

தாளிகைகளில் வரவேண்டிய செய்தியை வெளிவராமல்
தடுத்துவிட்டால் இதனை "இருட்டடிப்பு செய்துவிட்டனர்"
என்று சொல்வார்கள்.  நாமிதற்கு ஒரு புதிய சொல்லைப்
படைத்து மகிழலாமே.

இருட்டு > இருட்டித்தல் என்று ஒரு புதிய சொல்.  இப்படி
ஒரு சொல் இல்லை என்று நினைக்கிறோம்.  இருந்தால்
பிழை பொறுத்தருள்வீர்.

இருட்டித்தலுக்கு ஒரு புதுமெருகும் ஏற்றலாம்,   அதாவது:
இருஷ்டித்தல் என்று கவினுறுத்தலாம். எனக்கு இனிமையாகவே
உள்ளது.  நீங்கள் விரும்பாமற் போகலாம். ஒவ்வொரு நாவிற்கும்
சுவையூற்று வேறுபடுமன்றோ?

நாமிங்கு கூறமுனைவது என்னவென்றால்,  இருட்டு என்பதில்
ஓர் இகரம் சேர்த்து வினையாக்கம் நிகழ்த்தலாம் என்பது.

இன்னோர் எடுத்துக்காட்டு:  மறு>  மறுதலை > மறுதலித்தல்.
இங்கு ஐகாரம் ஒழிந்து இகரம் இணைந்தது. வினை அமைந்தது.

மகிழ்வீர்.


புதன், 21 மார்ச், 2018

vaarthai - how formed

 வார்த்தை என்ற சொல்லைச் சிந்திப்போம்.


வாய் என்பதோர் உறுப்பு.  மனித உடலின் முன்மையான

உறுப்பாகும்.


உண்ணவும் வாய்; பேசவும் வாய்.  புன்னகைக்கும் வாய்.

சி¡¢க்கவும் வாய். இன்னும் அழுவதில் கூட வாய்க்கும்

பங்குள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.


வாயிலிருந்துதான் சொற்கள் வெளிப்படுகின்றன.

ஒலிகள் வாயில் உருவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து

சொற்களாகி நாம் செவிகளை எட்டுகின்றன.


வாய் ஒரு தையல்காரன். ஒலிகளைத் தைத்து வார்த்தைகள்

ஆக்கி வெளிக்கொணருகின்றன.


வாயைத் தையல்காரனுடன் ஒப்பிட்டுக் கற்பனை செய்யாமல்

இயல்பாகச் சிந்திப்போம்.


வாய்+தை =  வாய்த்தை ஆகிறது. நாளடைவில் இது

தி¡¢ந்து வார்த்தை ஆகிறது.  யகரமும் ரகரவும் ஒன்றுக்கொன்று

நிற்கும் வண்ணத்தைப் பிற சொற்களில் கண்டு மகிழ்க.

ரகரமே இல்லாத கோவை என்ற சொல்லை கோர்வை

என்று சிலர் சொல்வது எப்படி?  தி¡¢புகள் அத்தகையன.

பின்னர் வி¡¢ப்போம்


வாய்த்தை வார்த்தையாயிற்று.


தையல்காரன் கதைக்கும் பொருந்துகிறது.


சந்திப்போம்.

AN intruder hacked this post and he simply changed
the post ( below) to TSC II font. We have reverted this
by reconverting it. We no longer use TSCII.
But there are still some changes that could not be
reverted. You can still make out those affected
words, so we have left them alone. Hope this post
is now intelligible.


 =========================
Å¡÷ò¨¾ ±ýÈ ¦º¡ø¨Äî º¢ó¾¢ô§À¡õ.

Å¡ö ±ýÀ§¾¡÷ ¯ÚôÒ.  ÁÉ¢¾ ¯¼Ä¢ý Óý¨Á¡É
¯ÚôÀ¡Ìõ.

¯ñ½×õ Å¡ö; §Àº×õ Å¡ö.  Òýɨ¸ìÌõ Å¡ö.
º¢¡¢ì¸×õ Å¡ö. þýÛõ «ØÅ¾¢ø ܼ Å¡öìÌõ
ÀíÌûÇÐ ±ýÚ¾¡ý ¦º¡øÄ§ÅñÎõ.

š¢ĢÕóо¡ý ¦º¡ü¸û ¦ÅÇ¢ôÀθ¢ýÈÉ.
´Ä¢¸û 𢸠¯ÕÅ¡¸¢ ´ýÚ¼ý ´ýÚ þ¨½óÐ
¦º¡ü¸Ç¡¸¢ ¿¡õ ¦ºÅ¢¸¨Ç ±ðθ¢ýÈÉ.

Å¡ö ´Õ ¨¾Âø¸¡Ãý. ´Ä¢¸¨Çò ¨¾òÐ Å¡÷ò¨¾¸û
¬ì¸¢ ¦ÅǢ즸¡½Õ¸¢ýÈÉ.

Å¡¨Âò ¨¾Âø¸¡ÃÛ¼ý ´ôÀ¢ðÎì ¸üÀ¨É ¦ºö¡Áø
þÂøÀ¡¸î º¢ó¾¢ô§À¡õ.

Å¡ö+¨¾ =  Å¡öò¨¾ ¬¸¢ÈÐ. ¿¡Ç¨¼Å¢ø þÐ
¾¢¡¢óÐ Å¡÷ò¨¾ ¬¸¢ÈÐ.  ¸ÃÓõ øÃ×õ ´ýÚ즸¡ýÚ
¿¢üÌõ Åñ½ò¨¾ô À¢È ¦º¡ü¸Ç¢ø ¸ñÎ Á¸¢ú¸.
øçÁ þøÄ¡¾ §¸¡¨Å ±ýÈ ¦º¡ø¨Ä §¸¡÷¨Å
±ýÚ º¢Ä÷ ¦º¡øÅÐ ±ôÀÊ?  ¾¢¡¢Ò¸û «ò¾¨¸ÂÉ.
À¢ýÉ÷ Å¢¡¢ô§À¡õ

Å¡öò¨¾ Å¡÷ò¨¾Â¡Â¢üÚ.

¨¾Âø¸¡Ãý ¸¨¾ìÌõ ¦À¡Õóи¢ÈÐ.

ºó¾¢ô§À¡õ.



பதியும் தம்பதியும்

பதி என்ற ஏவல் வினை ஒன்றை இன்னொன்றில்
உள்ளிடுதலைக் குறிக்கும்.  புகுத்தல், நுழைத்தல்
முதலிய வினைகளில் மென்மை இல்லாமை
உணரப்படும்.  ஆனால் பதியும்போது கால்  சேற்றில்
மெதுவாக அழுந்துதல்போல் ஒன்றில் மற்றொன்று
இணையும்.

பதி என்பது கணவனையும் குறிக்கும். இது இப்பொருள்
பெற்றதற்கு நாம் மனிதவளர்ச்சி  நூலைக்கண்டு
விளக்குதல் வேண்டும்.  இந்தியாவில் பல குழுவினரிடை
குடும்பத்தில் பெண்ணே தலைமை தாங்கினாள்.
திருமணம் நிகழ்ந்தபின் ஆண்மகனே தன் பிறந்த
வீட்டை விட்டுப் பெண்ணின் வீட்டில் சென்று தங்கி
வாழ்ந்தான்.  ஆகவே அவன் பெண்ணின் உறையுளில்
சென்று பதிந்தான்;  வீடுவாசல் முதலிய சொத்துக்கள்
பெண்வழியே பிள்ளைகட்குச் சென்றன. இங்ஙனம்
தன்னைப் பதிந்துகொண்டதால் அவன் பதியானான்.

வீட்டுக்குப் பெண்ணே தலைவி. கணவன் பதிவு
பெறுபவன்.  இந்தப் பொருளைப் பார்த்தால் அவன்
சென்றேறிதான். ஆனால் பிற்காலத்தில் பதியென்னும்
சொல் தலைவன் என்ற பொருளைப் பெற்றது குமுக
மாற்றத்தினைக் காட்டுகிறது.

தம்பதி என்ற சொல்லோ இன்னும் இனிய பொருளை
நமக்குத் தெரிவிக்கிறது.  தம் என்பது இருவர் இணைவைக்
குறிக்கும் பன்மைச் சொல்.  தன் என்பதன் பன்மை.
தம்பதி என்போர் ஒருவருள் இன்னொருவர் பதிவாகு-
கின்றனர். இது மனப்பதிவு அல்லது ஒருவர் வாழ்வில்
இன்னொருவர் சென்றிணைந்தததைக் காட்ட
வல்லது.  பதி என்ற முதனிலைத் தொழிற்பெயர்
கள் விகுதியோ அர் விகுதியோ பெற்று கணவன்
மனைவி இருவரையும் குறிக்கும். அதாவது:
தம்பதியர் அல்லது தம்பதிகள் என்று.  அருமையான
வாழ்க்கை இணைப்பை இச்சொல் காட்டவல்லது.

மனைவி கணவன் வீட்டில் சென்று வைகும்
மணமுறையில் அவளும் பதிவாகிறாள் என்றாலும்
அவளைப் பெரும்பாலும் பதி என்பதில்லை; இது
ஆணாத்திக்க நிலையைக் காட்டுவதாகும். இருவரும்
பதிகளே ஆயினும் ஆணே குமுகத்தில் பதி எனப்
படுகிறான்.

தமிழ்வழியாக விளக்குகையில்தான் இச்சொல்லின்
உண்மைப்பொருள் சிறக்கத் தோன்றுகிறது.

இவை தமிழ்ச்சொற்களே.

------------------------------------------------------
அடிக்குறிப்பு:

தளபதி :  இச்சொல்லில் "பதி" என்பதன் பொருள்:

இங்கு காணலாம் (சொடுக்கவும்)

http://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_85.html