வெள்ளி, 29 டிசம்பர், 2017

பணம் பிடுங்கிய மஞ்சள்வேட்டிச் சாமியார்,



கிழவி  வனாவுக்கு சாமி கும்பிடவும் பூசைகள் செய்யவும் கொள்ளை ஆசை. ஒவ்வொரு பூசை நிகழ்ச்சியிலும் கடவுள் ஆங்கு வீற்றிருப்பதாகவே வனா நம்புவாள். யாரும் வீட்டில் பூசை செய்வதாகக் கூறி அழைத்தாலும் புடவை, வேட்டி. துண்டு சிங்கப்பூர் வெள்ளி ஐம்பது அல்லது நூறு மஞ்சள் குங்குமம் என்று அனைத்தும் வைத்து அந்த வீட்டு அம்மனுக்கோ மற்ற சாமிக்கோ சாத்துவாள்.  அதை சாமியின் முன்வைத்து அப்புறம் வீட்டுக்கார்ர்கள் எடுத்துக்கொள்வார்கள்..

சிங்குச்சாமி வீட்டில் நடந்த அம்மன் பூசைக்கும் வனா அதே மாதிரி செலுத்தினாள். சிங்குச்சாமிக்குப் பெரிய மகிழ்ச்சியாகப் போய்விட்டது. இது நல்ல பசையுள்ள கிழவி என்று வனாவைப் பின் தொடர்ந்தார்.

ஓரிரண்டு மாதங்களிலேயே சிங்கு இன்னொரு பூசை வைத்தார்.  அன்று வனாவை அழைத்திருந்தார். ஆனால் வனா போகவில்லை.  வேறு ஓர் அழைப்புக்குப் போய்விட்டாள். அன்று ஆக்கி வைத்ததெல்லாம் ஒரு வகையில் வீணாகிவிட்ட்தென்ற கவலை சிங்குச்சாமிக்கு.  போனமுறை போல காசும் காஞ்சிப் பட்டும் யாரும் கொடுக்கவில்லை.  வந்தவர்கள் பிரசாதம் (படையல்) சாப்பிட்டுவிட்டு கைவீசிக்கொண்டு போய்விட்டனர். ஒரு நூறாவது கிடைக்கும் என்று பார்த்தால் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது. பத்துக்காசு இருபதுகாசு தட்டில் வந்து என்ன பயன்?

இந்த நிலையில் இன்னொரு வீட்டில் ஒரு பூசை நடந்தது. அதற்கு வனாவை அழைத்திருந்தார்கள். வனா அங்கு போய் எப்போதும்போல் சாமிக்குக் கொடை அளித்தாள். பூசை முடிந்தது வாடகைக் வண்டிக்குக் காத்திருந்தபோது சிங்குச்சாமியும் அங்கு வந்து, நானும் வருகிறேன் என்று வந்த வண்டியில் ஏறிக்கொண்டார்.

வண்டி முதலில் வனாவின் வீட்டுக்குப் போயிற்று. வனா இறங்கிக்கொண்டு பயணத்துக்குக் காசு செலுத்த எண்ணி, சிங்குச்சாமியிடம் ஐம்பது வெள்ளியை நீட்டினாள்.  அந்தப் பயணத்துக்கு 15 வெள்ளிதான் வாடகை, அதுவும் சிங்குச்சாமி வீடு போகும்வரை அவ்வளவுதான் வரும்.  மீதம் 35 வெள்ளியை எதிரிபார்த்து வனா வண்டிக்கு வெளியில் இறங்கி நின்றாள். சிங்குச்சாமி (பைபை  என்று ) கையசைத்துவிட்டு, வாடகைவண்டியைத் தம் வீட்டுக்கு ஓட்டும்படி ஓட்டுநரிடம்  ஏவினார்.  வண்டியை ஓட்டிய சீனரும் அப்படியே ஓட்டிச் சென்றுவிட்டார்.

நான் கூப்பிட்ட பூசைக்கு வராமல் ஏமாற்றினாய் அல்லவா?  உனக்கு ஆப்பு என்ற படி சிரித்துக்கொண்டே  வீடுபோய்ச் சேர்ந்தார்.

எழுபது தாண்டிய கிழவி வனா பிள்ளைகளை வற்புறுத்திக் குடும்பத்துக்கு நல்லது நடக்கும் என்று நினைத்து, பணம் அவர்களிடமிருந்து பெற்று ,  இத்தகைய பூசைகளிலெல்லாம் கலந்துகொள்பவள். அவளுக்கு வேண்டிய பணம் எல்லாம் பிள்ளைகளைக் கசக்கிப் பிழிந்து பெற்றுக்கொள்பவை. ஒவ்வொரு பூசைக்கும் இவள் செலவு மட்டும் 200 வெள்ளிக்குமேல் போகும். கொடைவள்ளல் போல் வாரி வழங்குவாள். என்றாலும் சிங்குச்சாமி இப்படி நடந்துகொண்டது, இவன் காசுபிடுங்கி என்பதை அவளுக்கு நன்`கு அறிவுறுத்தியது.    

இன்னொரு சாமிக்குக் கைப்பேசியில் அழைத்து விவரத்தைத் தெரிவித்து  இப்படிச் சிங்குச்சாமி செய்துவிட்டான் என்றாள்.  அந்தச் சாமி,  நான் அவனைக் கேட்கிறேன் என்றார்.  வேண்டாம். இத்துடன் விட்டுவிடு என்று வனா சொல்லிவிட்டுக் கவலையாக இருந்தாள். உண்மையாகவே கேட்கத் தீர்மானித்து அப்படி சொன்னாரா?  அது சாமிகளுக்குத் தாம் தெரியும்.

சிங்குச்சாமியும் வீட்டில் பூசைகள் செய்து வருமானம் பெறுபவர். பக்திமான் போல் மஞ்சள் துண்டு வேட்டியுடன் எப்போதும் இருப்பவர்.
இப்படியெல்லாமா காசு பிடுங்குவது?  நன்`கொடை வாங்குவது மட்டுமின்றி, பூசைக்கு வருவதை எடுப்பது மட்டுமின்றி, வழியில் வருவது வராதது எல்லாவற்றையுமா பிடுங்குவது?

உலகம் பொல்லாதது.  அதில் சாமியார் வேடமிட்ட சிங்குச்சாமி சரியான காரியக்காரன் என்று உணர்ந்து அசந்துபோனாள் கிழவி வனா.

பதினைந்து வெள்ளிப் பயணத்துக்கு ஐம்பது வெள்ளி எடுப்பது எப்படி? அதிலும் சிங்குச்சாமி இலவசப் பயணி..... 

வேண்டாம் அம்மா! நான் பணத்தைக் கட்டிவிடுகிறேன்,  நீங்கள் போ`ங்கள் என்று சொல்வார் என்று வனா எதிர்பார்த்தாள். அது நடக்கவில்லை.  மீதம் கொடுப்பார் என்று எதிர்பார்த்தாள். அதுவும் நடக்கவில்லை. இப்படியா ஆசை வைப்பது பணத்தின்மேல்?

யாரைத்தான் நம்புவது இந்த அறியாத நெஞ்சம்?  என்று உலகத்தை அறிய முனைந்தாள் வனா.

(பிழைகள் தோன்றின் பின் திருத்தம் பெறும். )




புதன், 27 டிசம்பர், 2017

மகனுக்கு நாய்த்தட்டில் உணவு.......!



நாய்த்தட்டில் சோறுபோட்ட தாய்

எனக்குத் தெரிந்த ஒரு தமிழர் வீடு.   இங்கு வாழ்ந்த குடும்பத்தில்  பிள்ளைகள் ஒரு பெண். ஓர் ஆண். இந்தப் பெண் நன்`கு படித்துப் பல்கலைக் கழகத்திற்குப் போய்ப் பட்டம் பெற்றுவிட்டாள். இப்போது நல்ல வேலையில் இருக்கிறாள்.  அந்த ஆணோ தொடக்கப்பள்ளியிலிருந்தே படிப்பில் கோழிமுட்டை வாங்கத் தொடங்கிவிட்டான்.

இவன் படித்த பள்ளியில்,  மலாய்ப் பிள்ளைகளும் சீனப் பிள்ளைகளும் இந்திய மாணவருடன் படித்தார்கள்.  இவன் தொடர்ந்து தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்ததால் பள்ளித் தலைமையாசிரியர் “ மாற்றத்தைக் காட்டாவிட்டால் வெளியில் அனுப்பிவிடுவேன்” என்று எச்சரித்திருந்தார்.
இதற்கிடையில் இவன் வகுப்பில் படித்த ஒரு மலாய்ப் பிள்ளையின் எழுதுகோலை ( பேனாவை)த் திருடிவிட்டதாகத் தெரியவந்து, பள்ளியை விட்டு நீக்கிவிட்டார்கள்.

இவன் தாய் சென்று மன்றாடினாள்  தலைமை ஆசிரியரிடம்.  இருந்தாலும் இவன் தாயின் கதறலை அங்குள்ளோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிலேதும் தவறில்லை என்றே தெரிகிறது. ஆனால் அவன்மேல் சிறுவர் நீதிமன்றத்தில் வழக்குப் போடாமல் அனுப்பிவைத்து ஓர் உதவியைச் செய்தனர்.

ஒன்றும் முடியாமற் போகவே,  தாய் மகனை நன் `கு வைதாள். அன்று சோறு கேட்ட போது நாய் சாப்பிடும் தட்டில் அவனுக்குப் பரிமாறப்பட்டது என்று அவன் கூறி அழுதான். அவனுக்கு ஆறுதலாக, “ நீ படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கினால் இப்படி நடவாது:" என்றுமட்டும் சொல்லிவைத்தேன்.

இவன் திருந்தவில்லை. இவன் இனிப் படிக்க மாட்டான் என்று வண்டிகள் கழுவுவோர்க்கு எடுபிடி வேலை செய்ய அனுப்பினர்.  அங்கும் ஒழுங்காக வேலை செய்யாமல்,  திருடர் கூட்டத்துடன் சேர்ந்து.
திருடப்போன இடத்தில் பிடிபட்டு, வழக்கும் நடந்து சிறை சென்றான்.  

இப்போது அவன் பெரிய திருடன். வீட்டுக்கு வருகிறேன் என்று ஒரு கடையில் கண்டு என்னைக் கேட்டபோது, நானதற்கு சாக்குப்போக்குச் சொல்லித் தப்பித்துக்கொண்டுவிட்டேன்.  வேலைக்குப் போகாமலே நல்லபடி உந்துவண்டி ஓட்டுகிறான். சில வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகக் கேள்வி.

மலேசியாவில் பெண்பிள்ளைகள் நன்`கு படித்துப் பலர் நல்ல வேலை செய்கிறார்கள்.  ஆண்கள் ஏன் இப்படி வீழ்ந்துவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. யானறிந்த ஒரு மலாய்க்குடும்பத்திலும் பெண் படித்து நீதிபதியாக இருக்கிறாள். பையன் அலுவலக எடுபடியாக வேலைபார்க்கிறான்.

வீழ்ச்சியடைந்த  ஆண்மக்கள் இந்தியரிடையே அதிகம்.

Please note that a foreign programme has changed spelling
and inserted dots in places resulting in errors.  We have corrected
those detected. They  (errors) may appear in other places again
in the text.  Please read with caution and you may inform us
through the comments column.  Sorry about this.

கௌதம என்ற சொல்லின் அமைப்பு தமிழில்



இன்று கௌதம என்ற சொல்லினைப் பற்றி அறிந்துகொள்வோம்.இதை ஆராய்ந்த சங்கதப் பண்டிதர்கள் இச்சொல் கோ+தம என்ற இரண்டு சொற்களால்  ஆனதென்று கூறுவர். இது ஒரு குடிப்பெயர் என்பர்  வரலாற்றாசிரியர்.

கோ என்றால் இருள்;  தம என்றால் ஒளி என்று கூறுவர்.  இருளில் ஒளி என்று நாம் இதை எடுத்துக்கொள்ளலாம். இது புத்தருக்குமட்டும் பெயராய் அமைந்திருப்பின் இதை ஏற்பதில் தடையேதும் இருக்கவியலாது. அவர் இவ்வுலகத்தில் இருளான அறியாமையை விலக்கும் ஒளியாக இலங்கினார் என்பதால் அது பொருட்பொருத்தம் உடையதாகிறது.  ஆனால் அது ஒரு குடிப்பெயராதலின் புத்தர் தோன்றுமுன்பே அக்குடிக்குப் பெயராய் அமைந்திருந்த படியினால் அவர் குடியினர் அனைவருமே இருளில் ஒளியாய் இருந்தனரா என்ற கேள்வி எழுகிறது.   புத்தரைப்போலவே அவர் முன்னோரும் அறிஞராய் இருந்தனரென்பதற்கு ஆதாரமெதுவும் கிடைக்கவில்லை. புத்தருக்கு வேண்டுமானால் அது பொருத்தமான வண்ணனையாய் இருக்கலாம்.

ஆகவே வேறு பொருள்கள் உள்ளனவா என்று ஆய்தல் ஏற்புடைத்தாம்,

இப்பெயர் காஉத்தம என்று தமிழ்த்தொடராக இருக்கவேண்டும்.  அதுவே கௌதம என்று திரிதற்கு ஏற்ற தொடராகும்.

அவர்தம் முன்னோர் குடிமக்களைக் காக்கும் உத்தமர்களாக இருந்ததையே இத்தொடர் காட்டுகிறது. இயல்பான அறிவுடன் போரிலும் காவலிலும் சிறந்து விளங்கிக் குடிகளைக் காத்தனர்.

உத்தம என்பது இடைக்குறைந்து உதம என்றாகும்.  நாளடைவில் சுருங்குவதற்கு ஏற்ற சொல்லே இது:  உத்தம > உதம.

கா+ உதம =  காஉ தம >  கௌதம என்பது பொருத்தமாகும்.

புத்தரே அறிவு ஒளி. அவர் முன்னோர் குடிகளைக் காக்கும் காவலர்கள் என்பது இதன்மூலம் பெறப்படும்.

.

செவ்வாய், 26 டிசம்பர், 2017

ஆர் விகுதி காட்டும் மதிப்பும் ஆரியன் என்ற சொல்லும்.

ஆரியன் என்ற சொல்லை ஆய்ந்துகொண்டிருக்கையில்
தமிழில் ஆர் விகுதியும் அர் விகுதியும் என்முன் தோன்றுவதை
உணர்ந்தேன்.   ஆர் என்பதனுடன் ஏர் எரு என்ற சொற்களும்
வந்து நின்றன.

பண்டைக் குமுகங்களில் ஏர்த்தொழிலே பெரிதும் 
போற்றற்குரித்தாகக் கருதப்பட்டது என்று தெரிகிறது. 
இதற்கு என்ன காரணம் என்பது தெளிவு. நிலையாக 
ஓரிடத்து வாழ்தலைத் தொடங்கிய மனிதன், தனக்கு 
வேண்டிய உணவினைத் தானே படைத்துக்கொண்டு, 
அத்தொழிலில் ஈடுபடாத பிற தொழில்  மேற்
கொண்டோர்க்கும் அளித்தான். அதனால் ஏரையும்
உழவரையும் பிறர்போற்றி உயர்ந்தோராகக் கருதினர்.
("தொழுதுண்டு பின்செல்லுதல்")

ஆதியில் தோள்வலிமை உடையோர், ஏர்த்தொழில
ரிடமிருந்துநெல் முதலியவற்றை மிரட்டி வாங்கி யுண்டனர்.
இதுபின் சற்று மென்மையாகி விளைச்சலில் ஒரு பகுதியை
ஒப்புவிக்க வேண்டும் என்று விதித்தனர். ஒன்றும் 
செய்யாதார்க்கு உழவன் பங்கு தரவேண்டியதாயிற்று.
உழவனுக்கு வேறு வழிகள் இல்லை. (வரிவிதிப்பு
தொடக்கம் )

இதிலும் போட்டி ஏற்பட்டது. தனக்கு வரவேண்டிய 
பங்கினை, பிறருக்குச் சென்றுவிடாமல் வலிமையுடை
யோன் காத்து, பின் பங்கை எடுத்துக்கொண்டான்.
அரசனாலும் காவலாளிகளாலும் வந்த நன்மை இதுதான். 
இதுவே இன்று பலவித நிறுவாகங்களாக நிலைபெற்று
உள்ளன. ( நிறுவாகங்கள் தோன்றுதல்)

இதை இங்கு கூறக்காரணம் யாதென்றால், ஆர் -ஏர் 
என்பன எப்படி மதிப்பு நிலையை அடைந்து உயர்வு
குறித்தன என்பதை விளக்குவதற்கே.

இந்த வளர்தமைந்த உயர்வு பிற்கால வரலாற்றில், 
உழவரிடமிருந்து அரசர், பூசாரிகள் முதலியோருக்கு
மாற்றப்பட்டது. இதுவே குமுகத்தில் ஏற்பட்ட ஒரு
புரட்சி ஆகும்.

தமிழில் ஆர்  அர் விகுதிகள் பன்மையையும் மதிப்பையும் 
ஒருங்கு சுட்டுவதற்கு இதுவே காரணம்.

வந்தான் (ஓருமை, மதிப்பு இன்மை)
வந்தார் (பன்மை மற்றும் பணிவு , மரியாதை).  ஆர் என்பது
மதிப்பு ஆகும்.

பழ நூல்களில் ஆரிய என்று வருவதை வெளியிலிருந்து
வந்தவர்களைக் குறிப்பதாக வெள்ளைக்காரன் எழுதி
வைத்திருப்பது அவன் தமிழ் மொழியை ஆராயாமையே
காரணம்.

இப்போது நீங்கள் இதனைப் படித்து மேலும் அறிக.
இதுவும் எம் வரைவே ஆகும்.

சொடுக்கவும்:

திங்கள், 25 டிசம்பர், 2017

சொல்லாக்கம்: வித்துவான்



வித்துவான் என்ற சொல்.

வித்துதல் என்பது வினைச்சொல்.
கல்வி என்ற சொல் “கல்லுதல்” என்ற வினையினின்று எழுதல் போல் வித்தை என்ற சொல்  வித்துதல் என்பதினின்றும்  தோன்றுகிறது. பூமியைத் தோண்டி விதைப்பதுதான் வித்துதல். ( விதைத்தல் ) என்போம். மண் தோண்டி விதைத்தல், கற்பித்தலுக்கு ஒப்பானது ஆகும்.

வித்து + ஐ =  வித்தை.

வித்து + அன் =  வித்துவன் > வித்துவான்.

அன் விகுதியும் ஆன் விகுதியும் ஒன்றே.

செய்வன்,  செய்வான் இரண்டும் ஒருபொருளன ஆதல்போல்.

வித்து+ அகம் + அன் =  வித்தகன். பணிவுப்பன்மை: வித்தகர்.

அக(ம்)+ அன் >  அக+( அ)ன் >  அகன்.
இத்தகைய சொல்லமைப்பில் மகர ஒற்றும் ஓர் அகரமும் தேவையற்றவை.

அகவர் என்பது சூதர், புகழ்வோர் என்று பொருள்தரும்
சொல்.
இனி.  விதை> வித்தை எனினுமாம்.  தொடர்புடைய வினைச்சொல்:  விதைத்தல்.

வித்துவன், வித்துவான் என்பது வித்வான் என்றும் துகரம் கெடப் பிறமொழிகளில் உளைப்புறும்.

கல்வியானது விதைபோலும் மனிதனுள் விதைக்கப்படுகிறது.  வித்து என்பது பிறமொழியில் வித் என்றாகி அறிந்தவை என்றும் பொருள்தரும்.  இச்சொல் இங்ஙனம் பரப்பாட்சி செலுத்துவது  பண்டைத் தமிழின் விரிந்த பயன்பாட்டினைத் தெளிவுறுத்தும்.

வேதமென்பது தமிழ்ச்சொல்.  அது வேய்தல் என்பதன் அடிப் பிறந்த சொல்.
வேய்தலாவது ஆக்குதல், அமைத்தல், கூரை அமைத்தல் முதலியன.  வேதமென்ற இன்னொரு சொல் சமஸ்கிருதத்தில் உள்ளது.  அது ஒலியொற்றுமை உடைய இன்னொரு சொல் ஆகும். அதை வித் என்பதினின்றும் பிறந்ததென்பர்.  "பேக்கட்" என்ற ஆங்கிலமும் பைக்கட்டு (பை+கட்டு) என்ற தமிழ்ச்சொல்லும் ஒலியொற்றுமை உடையன, அதுபோல. இன்னோர் எடுத்துக்காட்டு: காலண்டர் (ஆங்கிலம்),  காலகண்டர் (தமிழ்).  காலகண்டர் எனின் காலத்தைக் கண்டுபிடிக்க உதவும் ஏடு என்பதாம்.

சனி, 23 டிசம்பர், 2017

வருவது: வருடம்; ஆள்வது ஆண்டு. தவறாத காலம்.



பழங்காலத்தில் மனிதர்கள் மழையை நம்பித்தான் பூமியின் பல இடங்களில் வாழ்ந்தனர். இது உண்மையென்பதைத் திருக்குறளின் வான்சிறப்பு என்னும் அதிகாரம் நமக்கு நன்றாகவே உணர்த்துகிறது.  இவ்வரிய நூல்தவிர இன்னும் பன்மொழியிலுள்ள நூல்களும் இதனை நமக்குணர்த்தும். இப்போது புதிய பல தொழில் நுட்பங்களும் தோன்றிக் கடல் நீரைக் குடிநீராக்குதல், அழுக்கு நீரைத் தூய நீராக்குதல் போன்ற புதுமைகளும் மனிதர்தம் வயப்பட்டுள்ளன.

வருடம் என்ற சொல் மழையின் காரணமாக ஏற்பட்ட சொல் என்று முன்னாளில் ஆய்வாளர்கள் சிலர் கருத்துக் கொண்டிருந்தனர். ஆகவே தமிழில் வழங்கும் வருடம் என்ற சொல் மழையின் காரணமாய் அமைந்தது என்றனர். இதற்குக் காரணம் வர்ஷ என்ற மழையென்று பொருள்படும் சங்கதச் சொல் வருடம் என்ற தமிழில் வழங்கும் சொல்லுடன் ஒலியொற்றுமை உடையதாய் இருப்பதுதான்.

அடிச்சொல் வருதல்:

வர்ஷ என்பதும் வருடம் என்பதும் வருதல் என்னும் தமிழ்ச்சொல்லின் அடியாய்ப் பிறந்தவையே ஆகும்.  மழையென்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் வந்து பொழிகிறது. சிலவேளைகளில்  தவறி ஏரி குளங்கள் முதலியவை வற்றிவிட்டாலும், பெரும்பாலும் தவறாமல் வருகிறது. ஆகவே பெரும்பான்மை கருதி , வருதல் என்ற சொல்லினின்று வர்ஷ என்பதை அமைத்துக்கொண்டனர். மனிதனால் இயற்கையைத் தடுக்கமுடியாது. வரு > வர் > வர்ஷ.

வருடமாகிய ஆண்டும் பூமியின் சுழற்சியால் வருகின்றது. அதுவும்  ஓர் இயற்கையை முன்னிட்ட காலக்கணக்கு ஆகையால் தவறுவதில்லை. வந்தே ஆகிறது. ஆண்டு அல்லது வருடமானது ஐம்புலன்`கட்கு அப்பால்பட்ட காலம் ஆனால் ஒரு பொருளைபோலவே  வருடம் போனது, வருடம் வந்தது, வருடம் பிறந்தது, சென்ற வருடம் என்றெல்லாம் நாம் பேசுகிறோம். ஒரு மனிதனைக் குறிப்பதுபோல் அல்லவோ குறிப்பிடுகிறோம்.  மொழிகளின் வழக்கு அப்படி!  எனவே வரு + உடம்  என்ற இரு சொற்களையும் இணைத்து இச்சொல் புனையப்பட்டுள்ளது.  உடம் என்பது உடன் என்பதன் இன்னொரு வடிவம். உடம்படுதல், உடம்படு மெய் என்பன கண்டுணர்க. திறம் -  திறன் என்பதுபோல உடம் - உடன் என்ற திரிபுகளுமாம். உடன்வருவது காலம்தான்! அது முடிவதில்லை. நாம் முடிந்துவிடுகிறோம். வருகின்ற காலத்தை நாம் உடன் கொண்டுள்ளோம்.  அதுவே நம்மை உடுத்துக்கொண்டுள்ளது. உடு > உடல்; உடு > உடம்> உடம்பு.
நம்மை உடுத்து உடன்வருவது வரு+ உடம் என்று அமைந்தது மிக்கப் பொருத்தமுடைத்தே ஆகும்.

வரு + உடம் என்பதில் உள்ள இரு உகரங்களில் ஒன்று கெட்டு வரு+ டம் என்று அமைந்தது. இரு உகரங்களில் முன்னது கெட்டதா பின்னது கெட்டதா என்பது வீண்வழக்கு. பேச்சில் வரு என்பது வர் என்று திரியும்:  வருகிறாயா > வர்றியா என்பது காண்க.  வரு > வர். (வர்ஷ)(வருட)

வாரம் என்பதும் வார் என்ற சொல்லால் அமைந்தது.  வந்தே ஆகும் காலக்கணக்கு. வரு > வார் என்று திரியும். வா> வாராய். வார் > வாரான்.  வாருமே.

குறித்த காலத்தில் ஆற்று நீர் வருகிறது. ஆகவே அதுவும் மழைபோல வாரி என்பட்டது. (வரு>வர்>வார்)  பின் இது கடலுக்கும் பயன்படுத்தப்பட்டது. (வரு>வார்>வாரி: ஆறு , கடல்). வாரி என்பது மாரி என்றும் திரிந்தது.  வ- ம திரிபு.

இந்தச் சொல்லமைப்புகளிலெல்லாம் வருவது என்றால் தவறாமல் வருவது   என்பதே அடிப்படைப் பொருள் ஆகும்.  கிழமை என்பது உரிமை என்ற பொருளதாகும்.  நாம் காலத்தால் ஆளப்படுகிறோம். ஆதலின்  ஆள் > ஆள்+து > ஆண்டு.  ஆள் = ஆளுதல்; து-  உரியது.  காலமே மனிதனை ஆள்கிறது.

year < jear:   proto-Germanic: jeram.  Perhaps also from a word meaning something fixed.

மேற்கண்டவை இங்கும் விளக்கம் பெற்றுள்ளது காண்க.

https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_27.html 

அறிந்து மகிழ்க.