செவ்வாய், 19 டிசம்பர், 2017

கேரளமும் சமஸ்கிருதமும்.



இன்று கேரளம் என்ற சொல்லைச் சிந்தித்து அறிவோம்.


பல மொழிகளில் சே என்பதும் கே என்பதும் ஒன்றுக்கொன்று பரிமாற்றமாக வரும். ஆங்கிலத்தில் பல சொற்கள் சிஎச் என்று எழுத்துக்கூட்டி க என்று ஒலிக்குமென்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனை ஐரோப்பியத்திலும் இங்கனம் வருமென்றாலும் உங்களுக்கு தெரிந்த எளிதான மொழியிலிருந்தே இதை உணர்ந்துகொள்ளுதல் நன்று. 

பண்புநலன் என்று பொருள்படும் கேரக்டர் என்ற ஆங்கிலச்சொல் சேரக்டர் என்பதுபோல் எழுத்தில் தோன்றினாலும் கேரக்டர் என்றே அதை ஒலித்தல் வேண்டும். இது பலமொழிகளிலும் உள்ள அமைப்பு ஆகும்.

ஸி என்ற ஆங்கில எழுத்தின் ஒலி ச என்பதுதான். இது அடுத்து எச் என்ற எழுத்தைப் பயன்படுத்தாமலே இப்போது மலாய் மொழியில் ச என்ற ஒலிப்பைப் பெறும்.   ஓர் ஐம்பது ஆண்டுகட்குமுன் சிஎச் என்று எழுதவேண்டியிருந்தது.  இப்போதுள்ள முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆயினும் சை சீ அல்லது சாய் சீ என்ற சீனத் தொடரை ஆங்கில எழுத்துக்களால் எழுத நேரும்போது ஸி யின் அடுத்து ஓர் எச் போடவேண்டியுள்ளது. மலாய் அல்லாத மொழிகளின் சொற்கள் சிலவற்றை உரோமன் எழுத்துக்களால் எழுதுகையில் மலாய்மொழியில் பின்பற்றப்படும் ஏற்பாடு ஏற்கப்படவில்லை.

இவற்றை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கேரளம் என்ற சொல்லைப் பொருத்தி நோக்கினால் இது சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்ட சொல் என்றே மலையாள நண்பர்கள் கூறவிரும்புவர்.  இப்படிச் சொல்வது இது சமஸ்கிருதத்தின் வழிப்பட்ட மொழியாக அல்லது அதிலிருந்து வடித்தெடுத்த மொழியாக இதை எண்ணுவதுதான் காரணம்.

இத்தகைய கருத்தினால் மலையாளத்திற்கு இந்தோ ஐரோப்பியத் தொடர்பு கிட்டுகிறது; மொழியின் மதிப்பும் கூடுகிறது; ஆகவே இதை விட்டுக்கொடுத்தல் அவர்களுக்கு துயர்விளைப்பதாக எண்ணப்படும்.

கால்டுவெல்லின் ஆராய்ச்சி இதைத் தமிழின் இனமொழி என்று முடித்திருப்பினும் பெயர் கிருதத்திலிருந்தே பெறுதற்குரியதாய் கருதற்கு முனைவர்.

மலையாளிகள் சேரர்கள். சேரம் என்னும் சொல் சேரலம் என்றும் வழங்கும். சேரலம் என்பது கேரளம் என்று திரிந்ததற்கு வியப்படையத் தேவையில்லை. சே என்பது கே என்று திரிந்தது பல மொழிகளில் இயல்பானது. ல ள  திரிபும் மிகுதியாய்க் காணப்படுவதே. பட்டியல் தேவையில்லை. தண்ணீரைத் தண்ணீர் என்று மெய்ப்பிக்க ஓர் அறிவியலாளன் தேவையில்லையே.

Government discretion and legal powers



Newspaper:

Statement: This is a warning against  autocratic rulers.

Comment.   If an applicant has asked for some new benefits not previously authorized by laws or regulations, and the application is not acceded to by a government authority,  that is not being autocratic.

Must your application be always acceded to? You may not have given sufficient reasons or causes.

One has to look for a better word than “autocratic”.

சாத்தன், சாஸ்தா, சாதுவன் சாத்துவிகம் இன்னும்.....




ஐம்புலன்`களையும் சாத்தும் திறமை.

மனிதன் தன் ஐம்புலன்`களையும் அடைத்துக்கொள்ளக் கற்றுக்கொள்ளவேண்டும். காண்பதிலும் தீமை ஏற்படும்.  ஓர் அழகிய பெண்ணைக் கண்டு மதியிழந்தோ அல்லது ஓர் கவரும் ஆடவனைக் கண்டு மனம்திரிந்தோ சென்று அதனால் துன்புறுவோர் பலர். இது காண்பதனால் வரும் தீது ஆகும். இங்கனமே கேட்பதிலும் மோப்பதிலும் உயிர்ப்பதிலும் உறுவதிலும் உண்பதிலும் துன்பங்கள் வரும்.  ஐம்புலங்களுமே நமக்குத் துன்பம் வரும் வழிகளாதலின் அவற்றைச் சாத்தி வைக்கவேண்டும்.  சாத்திவைத்தால் துன்பங்கள் நம்மை அணுகமாட்டா.

இதெல்லாம் தெரிந்துவைத்திருந்தாலும் மறந்துவிடுகிறோம். துன்பத்தில் வீழ்ந்துவிடுகிறோம். நம்மை நாம் காத்துக்கொள்ள நமக்குத் துணை தேவைப்படுகிறது.  அத்துணையே இறைவன். அவனை வணங்கி நின்று வலிமை பெற்று ஐம்புலன்`களையும் அடக்கவேண்டும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தையும் அடக்கவேண்டும். இதனை இந்திய மண்ணில் தோன்றிய மதங்களும் நீதி நூல்களும் நன்றாகவே போதிக்கின்றன.  நாம்தாம் அவற்றை நன்`கு கவனிப்பதில்லை.

இப்படி ஐந்துமடங்கத் துணைநிற்பவனே “சாத்தன்”. இவன் ஐம்புலன்`களையும் உங்கட்குச் சாத்தி அருள்வான்.

சாத்தன்:
சாத்துதல்:  அடித்தல், அணிதல், அப்புதல், மூடுதல், சார்த்துதல், தரித்தல், பூசுதல், பெயர்த்து நடுதல்.

இத்தனை பொலிந்த பொருட்களும் உடைய சொல்லே சாத்துதல் என்ற சொல்.

இவற்றைத் தமிழ்ப் பேசுவோரிடம் கற்றுக்கொள்ளுங்கள். சில எடுத்துக்காட்டுகள், பயன்படுத்த:

சாத்து சாத்து என்று அவனை போட்டு சாத்திவிட்டார்    ( அடித்துவிட்டார்).

சாமிக்கு மாலை சாத்தினார்கள் ( அணிவித்தார்கள் )

சந்தனம் திருநீறு சாத்துகிறார்கள்  ( அப்புகிறார்கள் ).  ( அப்புகிறார்கள் என்பது பொருளாயினும் சாத்துகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.  சரியான பதங்களையே பயன்படுத்துவது அறிந்தோர் செயல்).

“கதவைச் சாத்தடி, கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி”  -- பாரதிதாசன் பாட்டு.  (கதவை மூடுதல்).

கருமாதியின் போது இவர் வேட்டி சாத்தினார்.
(தரிக்கச் செய்தார்).

பயிர்முளை சாத்துவது.  (நடவு).


ஆக, ஐம்புலன்`களையும் சாத்துவதற்குத் துணையாகுபவன் சாத்தன் என்னும் இறைவன்.

ஐயனார் ஐயன் என்பது சாத்தனின் இன்னொரு பெயர்.

“என்னைநீ ஏன் படைத்தாய் என் ஐயனே!”  ஐயன் = கடவுள்.

சாத்தன் > சாத்தா (விளிவடிவம்)  > சாஸ்தா. (ஐயப்பன்).

சாத்தன் > சாத்தப்பன்

ஐயன் > ஐயப்பன்.

சாத்தா என்று வல்லெழுத்தியலாமல் சாஸ்தா என்று மெலிவாக்கப்பட்டது.

சாத்தன் என்பது ஐம்புலன்`களையும் வென்ற புத்தபிரானையும் குறிக்கும்.

சாத்து >  சாத்து + அன் = சாத்துவன்.

இச்சொல் இடையில் தகர ஒற்றுக் குறைந்து சாதுவன் என்று வழங்கும்.  இலக்கணத்தில் இடைக்குறை.

சாத்து > சாது ( இடைக்குறை ).  ஐம்புலன்`கள் அடக்கியோன்.

சாத்து > சாத்து + வ் + இகம் = சாத்துவிகம்,  வ் என்பது வகர உடம்படு மெய்.   அடக்கியாளும் குணம் உடையோன். இகம் : விகுதி.

சாத்து > சாந்து (௷லித்தல் )  > சாந்தம்.

சாந்துவம் : சாந்த மொழி.  மென்மொழி.

சாந்து > சாந்தன்.  புலனடக்கம் உடையோனுக்குச் சினமில்லை.

சாது + உரி + இயம் = சாதுரியம்,  சாதுவைப்போன்ற  திறமை.  சாதுவுக்கு உரிய திறன்.

அறிக. மகிழ்க.

திங்கள், 18 டிசம்பர், 2017

எதிர்க்கட்சிகள் செயல்பாடு



எந்தக்க  ருவியையும் கையிற் கொண்டு
யாதானும் விளக்கமென முன்நி றுத்தி
சொந்தமாய்க் கருதார்க்கும் சொல்லித் தந்து
சூழ்மண்ணும் சுடுநீர்போல் கொதிப்பு றுத்தி
வெந்தபுணில் வேல்பாய்ச்சிக் கிண்டும் போக்கே
வீண்பிளவாம் எதிர்க்கட்சி விளைக்கும் நன்மை!
தந்துவிடிற் பதவிதனை மிஞ்சும் நாட்கள்
தாழுறக்கம் மேல்கனக்கும் தரணி மீதே.  

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

Tamil word for ambassador

தூது என்ற சொல் தமிழில் நன்`கு வழக்குப் பெற்றது.

அது எப்படி அமைந்த சொல் என்பதைப் பல முறை
விளக்கி இருப்பினும்,  இங்கும் அதைக் காணலாம்.
சொடுக்கி வாசித்து மகிழவும்.

 http://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_80.html

இங்கு ஓரு பிற்குறிப்பையும் தந்துள்ளேன்.   இச்சொல்லின்
சுட்டடித் தொடர்பினை ஆங்கு விரித்துரை செய்துள்ளேன்.
அறிந்து மகிழுங்கள்.

ஊது என்ற சொல்லும் சுட்டடிச் சொல்லே. அக்கா
தங்கை போல உறவுடைய சொல்.  காற்றின்
முற்செலுத்தலைக் குறிப்பது.  தூது என்பது
ஓர் அரசன் இன்னோர் அலுவலனை முற்செலுத்தி
அறிந்து வரச்செய்தலைக் குறிக்கும்.

You should be able to take cognizance
of the forward action perpetrated by the doer
in these words. Not that difficult.  

சனி, 16 டிசம்பர், 2017

இங்கு ஏன் இத்தனை பிழைகள்?



எதைச்செய்வது என்`கின்ற கேள்வி என்னுள் எழுந்தது. செய்வதற்குப் பல உள்ளன. ஆனால் அதற்கான அறிவும் வேண்டும். 

எடுத்துக்காட்டாக, “என்`கின்ற” என்ற யானெழுதும் சொல்லின் என் என்ற ஈரெழுத்துக்களை அடுத்து ஏன் ஒரு மேற்புள்ளி இருக்கிறது என்று கேட்கலாம். இதிலுள்ள இடர் என்னவென்றால்: அந்தப் புள்ளியை வைக்காவிட்டால் அந்தச் சொல் “எங்கின்ற” என்று தானே மாறிக்கொள்கின்றது. அதனைத் திருத்தி மேலேற்றினாலும் அது என் கணினியை விட்டு நீங்கிய பின் இணையத்தில் மாறிக்கொள்கிறது என்று நினைக்கின்றேன். அது பிழையாகிவிடுகிறது. 

இதை கணினி நிபுணர்தான் சரிசெய்ய முடியும். இதற்கு இந்தச் செயலியின் அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கத் தெரிந்திருக்கவேண்டும்.  அது எனக்குத் தெரியாது. மாற்றியமைக்கும் சட்டப்படியான அதிகாரம் எனக்குள்ளதா என்று தெரியவில்லை.  இந்தச் செயலியின் அமைப்பாளர்களுக்கே அந்த அதிகாரமிருப்பதாக நினைக்கிறேன்.  

தற்போதுள்ள சூழ்நிலையில் இடுகையை அடிக்கடி சரிபார்த்தாலும், பதிவிறக்கம் செய்யச் செலவு கூடிவிடுகிறது. செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருத்தல் முன்மையான தேவையாதலின் இப்போது யான் செய்யமுடிந்தது என்`கிறது என்ற சொல்லில் ஒரு மேற்புள்ளி யிடுவதே ஆகும்.


சிலவேளைகளில் இந்த்த் தமிழ்ச் செயலி தேவைக்கதிகமான புள்ளிகளை இட்டுவைக்கிறது. புள்ளிகளை நீக்கப் பலமுறை இடுகையைப் பதிவிறக்கம் செய்து திருத்தவேண்டியுள்ளது. இந்தப் பாகியின் முதல் வாக்கியத்தில் வரும் சொற்களில் சில தேவைக்கதிமான புள்ளிகள் உள்ளன அல்லவா? கண்டு முகம் சுளித்தல் தவிர்க்கவும்.  ஒன்றுவிட்டு எழுத்துக்களில் புள்ளியிட்டால் வரிசையாக மூன்றெழுத்துக்களில் புள்ளிகள் வந்துவிடுகின்றன. நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென்பதற்காக நான் இந்த இடுகையில் திருத்தமெதுவும் செய்யாது வெளியிடுகிறேன்.

எத்தனை புள்ளியிடுவது என்று இவளுக்குத் தெரியவில்லையா என்று ஏசிவிடாமல் அன்புடன் இடுகைகளை வாசித்து உள்ள இடர்களை நீங்கள் புரிந்துணர்வுடன் அணுகுவீர்கள் என்று யான் நம்புகிறேன்  

உள்ள கட்டிடர்களைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். கட்டிடர் என்பது கட்டிப்போட்ட்துபோன்ற தொல்லைதரும் இடர்.
இந்தச் செயலி எப்படியெல்லாம் புள்ளிபோடுகிறது பார்த்தீர்களா?

வேறு செயலிகளைப் பயன்படுத்தலாமே என்பீர்கள். வேறு செயலிகளில் ஏற்படும் இடர்களை விளக்க இன்னோர் இடுகை தேவைப்படும். புள்ளிகள் இட்டாலும் எழுதியது திடீரென்று காணாமல் போய்விடுகிற தொந்தரவு இல்லை.  ஒருமுறை எழுதிக்கொண்டிருந்தது மறைந்துவிட்டால், பிணிவாய்ப் பட்டதுபோன்ற ஒரு நிலையில் வீழ்ந்துவிட நேருமே. 

வெளியார் கள்ளக் கடவுமூலம் உள்புகுந்து பிழைகளை உண்டாக்குவதையும் கவனிக்கவேண்டியுள்ளது.

இடரில்லா உலகு செவ்வாய்க் கோளில் அன்றோ இருக்கிறது.......
  

History: Patel and not Nehru should have been PM India


When History was made by the Mahatma to change course for Nehru > Indira Gandhi family  to enjoy PM-ship of Indian democracy:

 Read here:  click

http://www.indiatvnews.com/politics/national/why-gandhi-opted-for-nehru-and-not-sardar-patel-for-pm-6689.html

Another interesting point:

When Nehru was just a freedom fighter (so to speak), he had
written that much of the territory that China is now claiming was Chinese territory appropriated by the British and these should be returned to China. He later became PM of India and was not  able to act on what he wrote.  This has been adverted to by the then Chinese PM Chou En-Lai. in his book.  I had this book but it is not available now.

Chou then thought that Nehru could not be trusted, obviously.

If I am able to get the book or find similar material in the Internet I will post it for our readers.

Query:  Why write on something of which he was not sure? Obviously his cabinet or  others in his company did not support his unnecessary writings. Things would have been better for India had he not been the PM. - on this point.