வெள்ளி, 8 டிசம்பர், 2017

நீதி சான்று கட்சி



நாம் முன்  இடுகையில் நீ என்ற அடியிலிருந்து போந்த சில சொற்களை அறிந்து இன்புற்றோம். அந்த இடுகையை வேண்டுமானால் மறுபார்வை செய்துகொள்ளுங்கள்.


நீ என்ற அடிச்சொல் நீக்கப்பொருளை மையமாகக் கொண்டுள்ளது.
இப்போது இதே கருத்தை முன்னிறுத்தி நீதி என்ற சொல்லை ஆராய்வோம்.

நீதி சொல்பவன், எப்பக்கமும் சாயாமல் அல்லது கோடாமல் நடுநிலை நின்று ஒரு வழக்கையோ தருக்கத்தையோ ஆராய்ந்து தீர்ப்பைச் சொல்லவேண்டுமென்பது நீங்கள் அறிந்துவைத்திருப்பீர்கள். உங்களிற் பலரும் அதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவராகவும் இருப்பீர்கள். இதில் ஐயமில்லை.

எனவே வழக்கில் உள்விழுந்து வாதங்களில் இழுக்கப்பட்டுவிடாமல், காய்தல் உவத்தல் யாதுமின்றி முடிவு சொல்வது அவன்றன் கடமையாகும்.   நீங்கி நின்று சான்றுகளை ஆராயவேண்டும்.

நீங்குதல் என்ற சொல்லினின்றே நீதி என்ற சொல்லும் அமைந்தது.
நீ > நீதி.

இங்கு தி என்பது விகுதி.

சான்று என்பது சாலுதல் அல்லது நிறைவு என்பதனடிப் பிறந்த சொல்.  சால்பு என்பதும் அவ்வடியிற் பிறந்ததே.

வழக்கில் கட்சிக்கார்ர்கள் இருப்பர்.  இரு கட்சிகளோ அல்லது அவற்றுக்கதிகமோ இருக்கும்.   கள் என்ற அடிச்சொல் ஒன்றுக்கு மேற்பட்டவை குறிக்கும் ஒரு அடிச்சொல்.

நரி > நடிகள்.  இங்கு  பன்மைப் பொருள் வந்தது.

கள் என்பதற்குப் பிற பொருளும் உள.  அவை ஈண்டுப் பொருந்தாதவை.

கள் + சி =  கட்சி ஆகும். ( பன்மை ஆகிய பிரிவினை).

ஒன்றுக்கு மேற்பட்ட கருத்து இருந்தாலோ குழுக்கள் இருந்தாலோ அதனில் ஒன்று கட்சி  ஆகும். மற்றொன்றுமாம்.   பின் விட்டுக்கொடுத்துப் போவதென்பது வேறு. பெரும்பான்மை போற்றுதலும் வேறு.

ஒரு கட்சிக்குள் ஒரு கருத்து நிலைநிறுத்தம் பெறுகையில் அதை ஏலாதோர்
உலகெங்கிலும் உளர் என்பதால் கட்சி என்பதன் பொருள் உணரப்படும்.

கள் +து =  கட்டு > கட்டுதல். ( ஒன்றின் மேற்பட்டன ஒன்றாக்கப் படுவது).

கட்டு > கட்டி.  (திரண்டிருப்பது).

ஆக, கட்சி எனின் தனி நிலையினர் ஒரு நிலையில் கோவைப்படல் எனலாம்.. எப்படிப் பொருள் கொள்ளினும் கள்+சி = கட்சி என்பது காண்க.

அறிந்து மகிழ்வீர்.


 அடிக்குறிப்பு:

நீதி நில் என்பதனடித் தோன்றிற்று என்ற கருத்தினர் உளர்.  நில்> நில்+தி>
நீதி என்பர்.  நீதிபதி நீதியுரை பகர்ந்தபின் அதுவே நிற்கும் (  மாற்றற்கரிய ) சட்டமாகிவிடுகிறது.  மக்களும் ஏற்றுக்கொள்வர். இவ்வகையிலும் இது
பொருத்தமாதலின் இது தமிழடிப்படையிலெழுந்த சொல்லே. இருபிறப்பிச் சொல். இங்கு லகர ஒற்று வீழ்ந்தது.

நீலம் என்பதும் நில்+அம் என்றமைந்ததே, நில் > நீ என்று நீண்டு லகர ஒற்று வீழாது விகுதி பெற்றது.  அடிக்கருத்து: கறை நீங்காமை.  கறு > கறை.  கறுப்பு நீலம் இரண்டுமடங்குவது.

வியாழன், 7 டிசம்பர், 2017

நீ என்னும் அடி





 நீ என்பது முன்னிலை ஒருமைச் சொல் என்பர்  இலக்கணியர்.  அதாவது முன்னிற்கும் ஒரு நபரைக்1 குறிக்கும்.


நீ  என்பது ஓர் அடிச்சொல்லுமாகும். அங்ஙனம் வருங்கால் அது  நீக்கப்பொருளை அடிப்படைக் கருத்தாகத் தருவது.  முன்னிலை ஒருவனை நீ என்னும் போதும் அதுவும் நீக்கப்பொருளே.  தன்னின் நீங்கிய பிறன் முன்னிற்போன் என்ற பொருளையது தரும்.

அடிச்சொல்லாய் அது விகுதி (மிகுதி)  பெற்று நீளும்.

நீ > நீங்கு > நீங்குதல்.
நீ>  நீங்கு >  நீக்குதல். (பிறவினை).

நாற்றமான பொருள்  தன்னின் நீக்கமடையும்.
நீ >  நீச்சு.   ( சு என்பது விகுதி).  பொருள்: நாற்றம்.
நீ > நீச்சு > நீச்சம்  ( விலக்கத்தக்கது. நாற்றம்பிடித்தது ).

நீச்சம் >  நீசம் > நீசன். இழிவானவன். 

நீசமடைதல்:   கோள் வலுவிழந்து, செயலிழந்து போதல்.
“கிரகம் நீசமடைந்த்து “ என்பர்.

நீரால் நீங்கிச் செல்லுதல் நீச்சல்.
நீ > நீந்து  > நீந்துதல்.
நீந்து > நீந்தல் > நீச்சல்.
நீந்து > நீச்சு ( நீந்துதல்).
(இது நீந்து :>  நீத்து  > நீச்சு எனவரும்.  த> ச திரிபு). இடைவடிவம் தவிர்க்கப்பட்டது)


நீஞ்சு > நீஞ்சுதல்.    நீஞ்சு > நீச்சு.

நீ > நீத்தல்.  ( உயிர் நீத்தல் முதலியவை)


 நீ என்ற சொல் பல சொற்களுக்கு அடியாக உள்ளது. சில இங்குச் சொல்லப்பட்டன.




1  நபர் <  நண்பர்  இடைக்குறை. இடைக்குறைந்தபின் ஆள் என்ற பொருளில் வழங்குகிறது.

Edited  8.12.2017.
An irrelevant paragraph found herein has been deleted.

நீலத் திரைக்கடல் ஓரத்திலே என் எஸ் கிருஷ்ணன்

Thursday, August 30, 2012

கலைவாணர் விளக்க வரிகள்



பாரதியாரின் கவிதை பற்றி எடுத்தியம்பத் தனித் திரிகள்  உண்டு. ஆனாலும் பலசுவைக் கவிதைகளையும் நாம் நுகர்ந்து வருவதனால், அவருடைய கவிதை ஒன்றிரண்டை அவ்வப்போது தொட்டிணைத்துக்கொள்வதில் தவறொன்றும் இல்லையென்றே கருதுகின்றேன்.

நாம் இன்று படித்தின்புறும் அவர் வரிகள் இவை:

நீலத் திரைக்கடல் ஓரத்திலே -- நின்று
நித்தம்  தவம்செய்த குமரிஎல்லை -- வட
மாலவன் குன்றம் இவற்றிடையே -- புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு.

இந்த வரிகளுக்கு நகைச்சுவை அரசு என்று பெரும்புகழ் வாய்ந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வரைந்திருந்த சில விளக்க வரிகள்,இலக்கிய நோட்டம் (திறனாய்வு )  என்னும் தகுதிக்கு நன்கு ஏற்புடையன என்னலாம்.

அவ்வரிகள் இவை:

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் யோகசாலிகள்தான். தமிழென்றாலே இனிமை என்பது பொருள். தமிழில் சில வார்த்தைகளுக்கு இரும்பைக் காந்தம் இழுக்கும் தன்மைபோன்ற சக்தியுண்டு. இது கற்பனையல்ல. கடைந்தெடுத்த அனுபவ உண்மை.

"மண்டி" என்ற சாதாரண வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த வார்த்தையில் விசேஷமாக ஒரு சக்தியோ கவர்ச்சியோ இருப்பதாகத் தோன்ற வில்லை அல்லவா? சிறந்த கலைஞர்கள் இவ்வார்த்தையைக் கையாண்டு எத்தனை ஆச்சர்யகரமான அற்புத சக்தியை ஏற்படுத்தி விடுகிறார்களென்பதைப் பாருங்கள்.

பாரதியார் பாடலொன்றில் ("புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு" {என்கிறார் } )1...... புகழ் மண்டிக் கிடக்கிறதாம். புகழானது கொழித்து, கொப்பளித்து, உறைந்து, ஊறித் ததும்பி எங்கும் பரந்து நிரம்பிக் கிடக்கிறதாம். இந்த ஒரு வார்த்தை கவிதையில் ஜீவகளையைப் படம்பிடித்துப் படிப்போர் கருத்தைப் பரவசமாக்குகிறது. இன்னும் பல உதாரணங்கள் காட்டலாம்.

என். எஸ். கிருஷ்ணன். கட்டுரை. ஜூன் 1952,


1 பிறை க்கோட்டுக்குள் உள்ளவை என் இணைப்புச் சொற்கள். 

சேவைக்குப் பிறந்தவர் மோடி





சேவைக்குப் பிறந்தவர் மோடி ---  அதைத்
தெரிவிக்க வைத்திருப் பாரொரு தாடி.
நாவிற்கு  நலமான  சொல்வார் --- உலக
நாடுக ளிடைஒரு நல்லிடம் வெல்வார்.

முதல்வராய்  நின்றிட்ட  காலை --- பெரு
மூச்செறிந்  தவர்மிசை ஏச்செறின் தவர்கள்
இதை இனும் செய்தரும் கோலம் --- கண்டு
இரங்கு நெகிழ்மனம் பிறவிமுற் பயனாம்.

தலைமை அமைச்சராய் வந்தும் --- அதைத்
தாங்காப்  பொறாமையில்  வீங்கி  வெடித்தோர்
குலைந்த குணமுடை  யோராம் --- அவர்
கூறின பழிகளைத்  தேர விடுத்தார்.














இஃது இரண்டாம் எழுத்தை வெட்டிவிட்டுப் பின்னர் ஒரு விகுதி (மிகுதி) புணர்த்துச் சொல்லைப் புனையும் தந்திரம். (<தம்+திறம்).  இப்படியே அமைந்த இன்னொரு சொல் மேலே  தரப்பட்டுள்ளது காண்க.

புதன், 6 டிசம்பர், 2017

ஆரியனும் ஆசிரியனும்



ஆசிரியன் என்பது தொன்றுதொட்டுத் தமிழில் வழங்கிவரும் தமிழ்ச்சொல்.

இது பற்றுக்கோடு (ஆதரவு) என்று பொருள்தருஞ் சொல்லாம் “ஆசு”  என்பதனடிப் பிறந்தது.  ஆசு + இரு + ய் + அர் = ஆசிரியர் எனவரும்.  இரு என்பது இரி என்று  தமிழின் இனமொழிகளில் வழங்குவதும் எண்ணற்குரித்தாம். 

நம்பூதிரி என்ற பிற்காலச் சொல்லிலும் இரு என்பது இரி என்று திரிந்து பதிந்துள்ளது.  நம்+ புது+ இரி  :  இது நம்மிடத்துப் புதிதாக வந்து வேலைபார்ப்பவர் அல்லது தங்குகிறவர் என்று பொருள்தரும். வேறு சொற்களிலும் இரு என்பது இரி என்று திரிவதுண்டு.  புது என்பது பூது என்று திரிதலை பூதம்( புது+அம்) , ஐம்பூதம்(புதிதாய்த் தோன்றுவது)  எனக் காண்க).

 மாதிரி =  மா + து + இரி;  மா= அளவு ; து = உடையது;  இரி = இருத்தல்.  அதாவது ஓர் அளவு உடையாதாய் இருக்கும் பொருள்.  திரி என்பது திரி :  திரிக்கப்பட்டது என்றும் கொளலாகும். இவற்றை எம் பழைய இடுகைகளில் காண்க.

ஆசு என்பது விளக்கப்பட்டுள்ளது.  ஆங்குக் காண்க.

இனி ஆசிரியன் என்பது ஆசான் என்ற வடிவிலும் வழங்கும்.  ஆசு+ ஆன்.  ஆன் என்பது ஆண்பால் விகுதி.

இனி ஆரியன் என்ற சொல்லும் ஆசிரியன் என்ற சொல்லுடன் வைத்து  ஆயத்தக்கது.  ஆசிரியன் என்பதில் சியை எடுத்துவிட்டால் இடைக்குறையாகி ஆரியன் என்று ஆகிவிடும். இதன் பொருள் ஆசிரியன் என்பதே. இது ஆரியன் என்ற சொல்லின் வேறானது. இடைக்குறைச்சொல்.

மேலும் வாசிக்க:

ஆரியன்: 

http://sivamaalaa.blogspot.com/2015/05/devaneyap-pavanar-and-word-aryan.html



சமஸ்கிருதமும் ஆரியரும்


சமஸ்கிருதம் என்றும் பலவேளைகளில் வடமொழி என்றும் சொல்லப்படும் இந்தியமொழி மேலை நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களால் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்ட தென்று வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறுவர்.

இம்மொழி இப்படிக் கொண்டுவரப் பட்டதற்கான சான்றுகள் யாவை? 

சமஸ்கிருதத்தில் பல்லாயிரக் கணக்கான மேலைச் சொற்கள் உள்ளன என்பதே அவர்கள் கையில் உள்ள சான்று. இவை மேலைச் சொற்கள் என்பதை எப்படி அறிந்தனர்? இக்குறிப்பிட்ட சொற்களின் அக்கரை இக்கரை ஒலிப்பிலும் ஒற்றுமை காணப்படுகிறது என்பதே காரணம் ஆகும்.

இந்த ஒலியொற்றுமை ஒன்றையே ஆதாரமாக வைத்து, சமஸ்கிருதம் கொண்டுவரப்பட்ட மொழி என்றனர்.  அதனால் அது இந்தோ ஐரோப்பிய மொழி என்றனர்.  வேறு ஆதாரங்கள் எவையும் இல்லை.

இதைக் கொண்டுவந்தவர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு இந்த ஆய்வாளர்கள் சொல்வது: இந்தியச் சமய இலக்கியங்களில் அசுரர்கள் தேவர்களுக்கு இடையில் போர் அல்லது யுத்தங்கள் நடைபெற்றன.  தேவர்கள் என்ற சொல் வந்தேறியவர்களைக் குறிக்கிறது. இவர்கள் தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்டபடியால் அது அறிவாளிகள் என்று பொருள்பட்டாலும் அது இனத்தைக் குறித்தது.  வந்தவர்கள் ஆரியர். அவர்கள் பிராமணர்கள் மற்றும் சிலர் என்றனர். இவை இந்த ஆய்வாளர்தம் கருத்துகளே. இவற்றுக்கெல்லாம் இவர்களின் எண்ணம் தவிர வேறு ஆதாரம் இல்லை.

1     ஒலியொற்றுமைச் சொற்கள்; 
2    ஆர்யா தேவா முதலிய சொற்கள்.

இப்படிச் சில சொற்களையும் புனைகதைகளையும் வைத்துச் சமஸ்கிருதம் என்ற மொழி அயல்மொழியாக்கப்பட்டுப் பூசாரி வேலைபார்த்தவர்களெல்லாம் ஆரியர்கள் ஆக்கப்பட்டனர்.

ஆரியன் என்ற சொல் தமிழ்ச்சொல். அறிவு என்ற சொல்லினோடு தொடர்புடைய சொல். தேவா என்ற சொல் தீ என்பதனோடு தொடர்புடைய சொல்.

மூன்றில் ஒருபங்கு வெளிநாட்டு மொழிகளிலும் காணப்படும் சொற்களாய் இருத்தலினால் சமஸ்கிருதம் வெளிநாட்டு மொழியானால் அதேபோல் மூன்றில் இன்னொரு பங்கு திராவிடச் சொற்களாய் இருத்தல் கொண்டு  அம்மொழியை என்னவென்பது? இன்னொரு (மூன்றாம்) பங்கு மூலம் அறியப்படாதவையாய் இருத்தலினால்  அதை என்னவென்பது?

வெளிநாட்டினர் பலர் வந்திருக்கலாம். வந்தவர்கள் வெளி நாட்டினர்தாம்; ஆரியர் அல்லர்.

சமஸ்கிருத்ததின் ஒலியமைப்பு திராவிடமொழிகளின் ஒலியமைப்பு என்பதை சுனில்குமார் சாட்டர்ஜீ என்ற  மொழிநூலார் நிறுவியுள்ளார். அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதை (சமஸ்கிருதத்தை)க் கேட்கையில் தமிழ் தெலுங்கு கன்னடம் இன்னபிற போன்றே உள்ளது.  பிராமணரிலும் பலர் கருவலாக இருக்கின்றனர். பல தாய்மொழிகளைப் பேசுகின்றனர்.  கவனிக்க வேண்டியது யாதெனின் , வெளிநாட்டினர் வந்து கலந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஆரியர் அல்லர். சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழியும் அன்று.   

தமிழ்மன்னர்களின் அரண்மனைகளிலும் யவனர் முதலானோர் வேலை பார்த்தனரே.  வணிகம் முன்னிட்டு வெளிநாட்டினர் வந்து போயினரே.
பலர் வந்து கலந்துள்ளனர்.  ஆனால் அவர்கள் ஆரியர் அல்லர்.   ஆர் :  ஆர்தல். இய, விகுதி.  ஆர்தல் = நிறைதல்.

Aryan (noun) என்பது  இனத்தைக் குறிக்காது. அசுரர் என்பதும் இனத்தைக் குறிக்காது.  கிரீஸ்  என்னும் கிரேக்க  நாட்டு வரலாற்றை வரைவதிலும் தொன்மங்கள் பங்காற்றியுள்ளன என்றாலும் இந்திய வரவாற்றை அப்படி வரைய முற்பட்டுக் குழப்பிவிட்டனர்.

இப்போதைய நிலையிலும் ஆரியம் என்ற சொல் பல்பொருள் ஒருசொல்.
அது வாத்தியம் ( வாழ்த்தியம்) வாசித்தவர்களையும்கூடக்  குறிக்கும்.