செவ்வாய், 10 அக்டோபர், 2017

அந்தி

இன்று அந்தி என்ற தமிழ்ச் சொல்லை ஆராய்வோம்.

இது வேறு மொழிகளிலும் சென்று வழங்கிவரும். நம் வீட்டுப் பையன், எதிரிலுள்ள நாலைந்து வீடுகளில் நுழைந்து, அங்குள்ளோரின் தேவைகளையும் கவனித்துவிட்டு இரவில் வீட்டுக்கு வருகிறான் என்றால் அவன் குமுக சேவை செய்கிறான் என்று அர்த்தம்.  வாழ்க தேசிய சேவையும் உலக சேவையும். தற்குறியாக இருப்பதே தவறு. கல்கத்தா அம்மையார் போல உலக சேவை செய்வதோ பாராட்டுக்கு உரியது. சொற்களும் அப்படியே.

அந்தி சாயுற நேரம்
வந்தாரைத் தேடி ஓரம்

என்று ஒரு நகைச்சுவைப் பாட்டை எழுதினார்  கவி கா.மு. ஷ்ரிப் என்ற பாடலாசிரியர். (?) பகலவன் சாய்கிற நேரம்தாம் அந்தி.  சாயுங்காலம் என்றும் சாய்ங்காலம் என்றும் சொன்னாலும்  அதே.

பகலின் முடிவுதான் அந்தி.
இ -  இங்கு.  இன்று.
அ – அங்கு  அன்று.
அன்று =  அன் + து

இன்று வந்துவிட்டால், நேற்றுக்கு முன் உள்ளது அன்று.

அன்று என்பது இன்றும் நேற்றும் முன் உள்ளதும் முடிந்த நிலை.

அன்று > அன்றுதல்.  (முடிதல்).
அன் + து =  1.  அன்று  2. அன்*து (அந்து).
அந்து > அந்தி.  (அந்து+ இ).
~து. ~இ  :  இவை விகுதிகள்.

தி என்பது பல சொற்களில் முடிவாக நிற்பதால் அதை ஒரு தனி விகுதியாகவும் சொல்லி முடிக்கலாம்.  தி என்று முடியும் போதெல்லாம் து+இ என்று சொல்லிக்கொண்டு நீட்டிக்கொண்டிருப்பதும் தேவையில்லை.  நேரம், இடம் , தாள் மிஞ்சும்.

எடுத்துக்காட்டு:
பெய்தல்  மூத்திரம் பெய்தல்; மழைபெய்தல்; நீராகக் கழிதல்.
பெய்+தி = பெய்தி > பேதி.  (கழிச்சல்).
உய்தி;  செய்தி.  கைதி.(கையகப்பட்டவன்).

இவை நிற்க.
அந்தி என்பது நாள் அல்லது பகலின் முடிவு,
அந்தம் – முடிவு.  (பொது).
ஆதி அந்தம்.   ஆதி:  ஆக்கப்பட்ட நாள்;  அந்தம் = முடிவு, 

எழுதிப்பின் புகும்,  புகுத்தப்படும் பிசகுகள் பின் திருத்தப்படும்.

மறுபார்வை செய்த நாள்:   15.6. 19

தெலுங்கும் வடுகும்


தெலுங்கும் வடுகும்
தென் என்பது அடிச்சொல். இது தெல் என்றும் தோன்றுதல் உடையது. 
தென் + கு = தெற்கு.
இங்கு கு என்பது விகுதி.
தெல் + கு =  தெற்கு,
தெல் > தெலுகு. 
இம் மொழிப்பெயரில் கு என்பது விகுதியே.  உகரச்
சாரியை பெற்றது.
தெல் + உ + கு=  தெலுகு.
இச்சொல் ஒரு ஙகர ஒற்று மிக்கும் அமையும்.
தெலுகு > தெலுங்கு.
இதன் பொருள்: தென்மொழி என்பது.
அறிஞர் சிலர் தேன் என்ற சொல்லே குறுகி, தென் என நின்று,  கு விகுதி ஏற்று தெனுகு என்றாகி, தெலுகு, தெலுங்கு என்று திரிந்தது என்பர்.
வடக்கு என்ற சொல்லில்  வட என்பது பகுதி.
வட > வடக்கு.
வட > வாடை.  (வடக்குக் காற்று).
இது நாற்றம் குறிப்பது பிற்கால வழக்கில்.
வடு > வடுகு.  (வடக்கு மொழி).
வடு > வட. 
வட என்பது எச்ச உருவிலிருப்பதால், வடு என்பதே
பகுதியாகும்.
வடு என்ற சொல் எப்படித் தோன்றியது?

நட்டம்......



பல சொற்களை விளக்கவேண்டுமென்று எண்ணினாலும் எண்ணுவதெல்லாம் நடைபெற்றுவிடுவதில்லை. சில இப்போது  அகன்று பின் ஒரு நாள் தோன்றும்.  அப்போது அவற்றைப் பிடித்து இங்கு இடலாம்.
இப்போது நட்டம் என்ற சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.

இது ஒரு பேச்சுமொழிச் சொல்.   நட்டம் என்று இருந்து பின் நஷ்டம் என்று மெருகு பூசப்பட்ட சொல். சிலர் இதை நஸ்டம் என்று உச்சரிப்பதைக் கேட்டிருக்கிறேன்

எந்த முயற்சியும் நடுவில் நின்று போய்விட்டால் அது நட்டம் ஆகிறது.
நடு > நட்டம்.  (  நடு + அம்).

பத்துகல் தொலைவு செல்லப் புறப்பட்ட ஒருவன், ஐந்து கல் தொலைவிலே அதைத் தொடரமுடியாமல் போனால் , நடந்த ஐந்து கல் நட்டம் அன்றோ? மீண்டும் ஐந்து நடந்து தொடங்கிய இடத்துக்குப் போகவேண்டுமே!

பத்துக் கல்தொலைவு சென்று எதைச் சாதிக்கவேண்டுமென்று நினைத்தானோ  அதையும் கைவிடவேண்டி ஆனதே!

இனி இருபக்கமும் நகரமுடியாமல் போன நிலையாயின் அதுவும் பெரிய நட்டமே!

வாழைப்பழம் ஏற்றிக்கொண்டு இன்னும் ஐந்து கல் சந்தைக்குப் போகாமல், வீடு திரும்ப்பிப் பழங்களும் பயனற்றுப் போம்படியோ அல்லது  ஐந்துகல்லிலே நடுவில் நின்றுவிட்டாலோ.......!

இத்தகு நிலைகளில் உருவானதே     நட்டம் “ என்னும் சொல்.
இக்காலத்து நட்டங்கள் வேறுமாதிரியானவை.  ஆனால் சொல்லோ பழையது.  பழமையை நோக்கியே உணர்க.

நடு >   நட்டம்......
  


ஞாயிறு, 8 அக்டோபர், 2017

தளபதி,

தளபதி என்ற சொல்லமைப்பு:

இங்குக் காண்க:  (சொடுக்கவும்)

http://sivamaalaa.blogspot.com/2016/11/blog-post_27.html

அடிச்சொல்: தள் என்பது.

தள் > தள்ளு என்று வினைச்சொல் வடிவமாகும்.

கால் என்பது உண்மையில் உடல் (முண்டத்திலிருந்து ) வெளித்தள்ளிய
பகுதி.

தள் > தாள் (முதனிலை நீண்டு பெயரானது )
தாள் + அம் > தளம் ( இது விகுதி பெற்றுக் குறுகியது ).  base,  foot-like set up.
சாவு > சவம் என்பது போல,

தள் + அம் = தளம்  எனினும் அமையும்,

தள் என்ற அடிச்சொல் வெளிப்படுதல் என்பது குறிக்கும்.

தள்> தள்ளை.  ( பிள்ளையை வெளிப்படுத்துபவள்,  அதாவது தாய்).


அரண்மனைக்கு வெளியில் தக்க இடத்தில் அமைக்கப்படுவது ஒரு தளம்,
ஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் இருக்கலாம். இவற்றுள் பதிந்து இவற்றை நடத்துபவன் தளபதி. பதிதல் > உள்ளமைதல்.  பதிதல் > வதிதல் > வசித்தல். திரிபுகள்.
ப>வ;  தி>சி.

மறுபார்வையிட்ட தேதி:  27.3.2018  7.42 காலை

ஐயப்ப பூசை.



ஐயப்பனைத் தொழுதல்.

வேண்டியதோர் நன்மைக்கே எந்த நாளும்
விழுந்துவணங்  கிடுவீரே ஐயன் தாளில்;
ஆண்டிமுதல் அரசன்வரை ஆர்க்கும் நெஞ்சை
அள்ளித் தருவோன் என்னில் ஐயன் தானே!
தீண்டுவதும் அனைத்தும் பொன்  காண்டல் உண்மை;
தேடுவதும் ஓடிவரும்  திகைந்த நாளில்;
மீண்டுவரு பிறவிகளை மெல்லப் போக்க
மேன்மைதரு மேலுலகும் வாய்க்கும் இன்றே.

தாளில் -  கால்களில்;
காண்டல் -  காணுதல். 
பொன் காண்டல்: பொன்னாகக் காணுதல்.
ஆர்க்கும் - யார்க்கும்.
திகைந்த -  உறுதிசெய்த; 

சிந்தித்தல் சொல் அமைப்பு.



ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றும். அது எப்படி என்பதை இப்போது விளக்குவோம்.

ஒருவனைக் கையினால் தாக்குவதாயிருந்தால் தாக்குவோன் அடுத்துச் செல்லவேண்டும்.   கை எட்டும் அளவுக்குப் பக்கத்தில் செல்லவேண்டும். கை எட்டாமால் எப்படித் தாக்குவது? ஆகவே  அடுத்தல் என்பதிலிருந்து அடித்தல் என்ற சொல் அமைந்தது.

அடு >  அடி.   அடுத்தல் > அடித்தல்.

இப்போது ஒரு வினைச்சொல்லிலிருந்து  இன்னொரு வினைச்சொல் அமையுமென்பதைக் கண்டுகொண்டீர்கள்.

இதை மறுப்பதானால் அவன் மொழி முழுவதும் ஆராய்ந்த அறிவு இருப்பவனாய் விளங்கவேண்டும்.

இப்போது  நாம் எடுத்துக்கொண்ட சொல்லுக்கு வருவோம்.  

சிந்துதல் என்பது மிகச் சிற்றளவில் ஊற்றுதல்.  அதுவும் தானே வேண்டுமென்று ஊற்றாமல் நீர் விழுதல். 
குடத்தைத் தூக்கிவரும்போதே ஆட்டிக்கொண்டு வந்ததால் நீர் சிந்திக் குறைந்துவிட்டது என்பது வாக்கியம்.   நீர் கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து குறைந்தது என்பது பொருள்.

மூக்குச் சிந்துதல் --  சிற்றளவில் மூக்கிலிருந்து சளி வருகையில் அதை அப்புறப்படுத்துதல்.

எப்படி ஒருமிக்க ஊற்றவில்லையோ அதே போல  எண்ணங்கள் சிறிதுசிறிதாகத் தோன்றி உருப்பெறுதலே சிந்தித்தல்.  சிந்தனை நடைபெற்றதற்கான அடையாளம் அவை வெளிப்படுகையில்தான் பிறர் அறியமுடியும்.

சிந்துதல் என்பதன் அடிச்சொல் சில் > சின்.   சில்லறை.  சின்னவன் என்னும் சொற்களை நினைவுகூருங்கள்.

சில் > சின் > சிந்து.   சின்+து. (முந்து, பிந்து, மந்திரம் முதலிய சொற்களைக் கவனிக்கவேண்டும்.

பின் > பின் து > பிந்து.
முன் > முன் து > முந்து.
மன்+திரம் > மந்திரம்.

நிலைமொழி ஈற்றில்  0னகர ஒற்று நிற்க, வருமொழி முதலில் தகர வருக்கம் வரின் றகரமாய் மாறும் என்ற இலக்கணம் முழுச்சொற்கள் வாக்கியத்தில் புணர்வதற்கான முடிபு ஆகும்.  அது இங்கு ஒவ்வாது என்பது எடுத்துக்காட்டப் பட்டது.  இதற்கு ஒரு காரணமும் கூறலாம். து என்பது ஒரு முழுச்சொல்லன்று. ஒரு விகுதியே.  ஆகவே அது "வருமொழி" ஆகாது.

 எனவே முன்று பின்று மன்றிரம் என்று வரவில்லை.

மூன்று என்ற எண்ணுப்பெயர் போன்றவை விதிவிலக்கு)

சில் சின் என்பன சிறுமை குறிக்கும் அடிச்சொற்கள்.

சிந்தித்து முடிவு செய் என்றால், இப்போது கொஞ்சம், அப்புறம் கொஞ்சம், நாளைக்குக் கொஞ்சம் என்று மூளையின் முன் திரையில் இட்டு ஓட்டி இறுதியில் முடிவுகாண்க என்பது பொருள்.

சிந்து என்ற நதிப்பெயரும் அங்கு சிறிய நூலால் ஆன துணி நெசவு செய்யப்பட்டதால் அல்லது விற்கப்பட்டதால் நதி அப்பெயர் பெற்றதென்று வரலாற்றாசிரியர் கூறுவர். இதை முன் ஓர் இடுகையில் கூறியுள்ளோம். கிட்டினால் அதையும் வாசித்தறிக.

சில் > சின்.
சின் > சின்+து.  (சிந்து).
சின் > சின்+து > சிந்து +இ  > சிந்தி.

ஒப்பீடு: 

அடு > அடி ( வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினை தோன்றுதல்)
சிந்து > சிந்தி ( இதுவும் அங்ஙனமே  வினையிலிருந்து வினை....)
இறுதியில் வந்த இகரம் வினையாக்க விகுதி.

சிந்தி + அன்+ ஐ = சிந்தனை.  அன் என்பது சொல்லமைவு இடைநிலை. ஐ என்பது விகுதி. ( மிகுதி).
சிந்தித்தல் என்பதை விளக்க இது போதுமானது.  நன்றி.

மன்+தி = மந்தி.  மன் என்பது மனிதனைக் குறிக்கும் அடிச்சொல். அது தி விகுதிபெற்று ஒருவகைக் குரங்கு குறித்தது,  மன்> மான் > மான்+தன் > மாந்தன். தி என்பத் து+இ, தன் என்பது து+அன் எனினுமாம். சொல்லாக்கப் புணர்ச்சி விதிகள் வேறு,  இலக்கண விதிகள் வேறு.  அவை ஒன்றுபடும் இடனும் வேறுபடும் இடனும் உண்டு காண்க.
  

வெள்ளி, 6 அக்டோபர், 2017

நகம்

நகம் என்ற தமிழ்ச்சொல் இப்போது பல மொழிகளிலும்
பரவிச் சேவை  செய்துகொண்டுள்ளது என்பதை இங்கே
விளக்கியுள்ளோம்:

இதனை ஆய்வுணர்வுடன் படித்து மகிழ்க.

நகம் என்பது தமிழ் நாட்டின் பேச்சுவழக்குச் சொல். இது
தமிழில் இன்றும் வழக்கிலுள்ளது.

கீழ்க்கண்ட தொடர்பினைச் சொடுக்கவும்:

https://sivamaalaa.blogspot.sg/2015/07/tamil-word-for-nail-cutter.html

https://sivamaalaa.blogspot.sg/2015/07/tamil-word-for-nail-cutter.html.