சனி, 10 மே, 2025

தொந்தரவு முடிந்து நிம்மதி - சொல்லமைப்பு

 தொந்தரவு என்பது ஒரு திரிபுச் சொல். சிலவேளைகளில் எது உங்களைத் தொந்தரவு செய்கிறது என்று வெளிப்படையாகத் தெரிவதில்லை. முன் சென்மத்தில் அல்லது பிறவியில் நடைபெற்று முடிந்த தீவினைப் பயன்கள் மீண்டு வந்து தொந்தரவு செய்வதாக இருக்கலாம். எதனால் தொந்தரவு என்று கடுமையாகச் சிந்திப்பதானால் ஏதும் பயன் விளைந்துவிடாது.  காரணம் கருத்தில் கோளாறு என்பதன்று, எதனாலென்றாலும் வருவது வந்துகொண்டுதான் இருக்கும். இனி அடுத்த சென்மத்தில் இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ள முனையலாமே தவிர பண்டைப் பயன்களை மாற்றி அமைக்கும் திறன் குறைவுதான். காலத்தைப் பின்னோக்கித் தள்ள இயல்வதில்லை. நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து எதுவும் விளைவதில்லை. நீங்கள் எதை நம்பினாலும் நம்பாவிட்டாலும்  நடப்பவை நடக்கும்.


தொல் என்றால் பழையவை. தரவு என்றால் தருதல், அதனால் மீண்டும் வருதல், அல்லது அலையடித்தல்.  தொ+ தரவு >  தொந்தரவு.

நிம்மதி என்பது,  நில் > நி,  நின்று போவது. மன்னுதல் என்பது நிலைகொள்ளுதல்.  மன்னுவதால் நின்று போனவை மீண்டும் தொடங்காமல் இருத்தல்.  திரும்பாமை என்பதற்கு தி என்று போட்டால்  நிம்மதி என்ற சொல் வந்துவிடும். இந்தச் சொல்லும் வாக்கியங்களி லிருந்து குறுகி அமைந்த சொல். நின்று போனவை மன்னுதலும் மறுபடி திரும்பாமையுமும் ஆகும்.

வாக்கியங்களிலிருந்து குறுக்கி அமைக்கப்பட்ட சொல் நிம்மதி,  நில் என்பதில் லகர ஒற்று மறைந்து நி என்று நின்றால் அது கடைக்குறை என்று இலக்கணம் சொல்லும். இதனுடன் மன்னுதல், திரும்பாமை முதலியன வந்து  நிம்மதி என்ற சொல் ஆகிறது.

சொற்கள் பல மனிதன் உருவாக்கியவை. அந்த அறிவினை மனிதனுக்குக் கடவுள் கொடுத்துவிட்ட காரணத்தால் கடவுள் பின்னணியில் இருந்துள்ளார்.  அவனன்றி அணுவும் அசையாது என்பதால் அவ்வாறு எடுத்துக்கொள்வதற்குக் காரணம் உள்ளது. நீர் எதை நம்புவதாலும் நம்பாமையினாலும் எதுவும் உலகில் மாறிவிடாது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

உங்கள் அன்பான கவனத்திற்கு


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்குப் பகிர்வுரிமை  அளிக்கப்படுகிறது.



வியாழன், 8 மே, 2025

அனுக்கிரகம் என்பதென்ன? தமிழா? தெரிந்துகொள்ளுங்கள்.

 பற்றனின் அல்லது பக்தனின் ( பத்தனின்)  அன்புக்காக அணுகிவந்து அகத்தில் இருப்பவன் தான்  இறைவன்.  அவன் இவ்வாறு அன்பு காட்டி அருள் கூட்டிய கதைகள் நாட்டில் பல வுண்டு என்பது நீங்கள் அறிந்தது.\

இதிலுள்ள தமிழ்ச் சொற்களின் ஓட்டத்திலே நாம் சென்று ஒட்டி உணர்ந்துகொள்ளுவோம்.

அன்புக்கு:

இந்தச் சொல்லில் ( அன்பு)   பு என்பது விகுதி.  விகுதி வேண்டாம் என்று விட்டுவிட்டால்,  அன்+( ப்) உ+ க்கு,  இவை சேர்க்க:  அனுக்கு என்றாகும்.

இரு என்பதை இணைக்க:

அனுக்கிரு  என்று வந்துவிடும்.

எங்கே கடவுள் வந்து இருப்பான் என்றால் அகத்தில் இருப்பான்.  ஆகவே

அனுக்கு + இரு+ அகம் >  அனுக்கிரகம் என்று வந்துவிடும்.  இரு என்பதன் இறுதி உகரம் நீங்கிற்று.

அனுக்கிரகம் என்பது சமஸ்கிருதம் என்னலாம்.  அதுவும் இந்திய மொழிதான்,  தமிழர்களாலும் வளர்க்கப்பட்ட மொழிதான்.  இராச இராசன் முதலிய பேரரசர்கள் தென் கிழக்காசியா முழுவதும் அதைப் பரப்பினார்கள். தமிழர்கள் அதில் ஒட்டும் உறவும் இல்லை என்றால் ஏன அவ்வளவு சிரமம் மேற்கொள்ளவேண்டும்? வேறு வேலை இல்லாமலா?

சமஸ்கிருதம் என்பது சம கதம் அல்லது சங்கதம் என்றும் பெயர் பெறுவதுண்டு.  கதம் என்றால் ஒலி :  கத்து> கது > கதம்/  ஒலி.  தமிழுக்குச் சமமான ஒலியமைப்பை உடைய  மொழி சமஸ்கிருதம் ஆகும்.  இதை வெள்ளைக்காரன் வேறு பொருள் சொல்லி மடக்கினான். வங்காள அறிஞர் எஸ் கே சட்டர்ஜீ யின் மொழி ஆய்வினையும் படித்து அறிந்துகொள்ளுங்கள். தென்மொழிகளின் ஒலியமைப்பை உடையது சமஸ்கிருதம்.

அன்புக்காக அகத்தில் வந்து இருப்பவன் தான் இறைவன் என்பதை இந்தச் சொல்  ( அனுக்கிரகம்) என்பது  தெளிவாகக் காட்டுகிறது.

சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பியம் என்றால் சொல் ஏன் இப்ப்டி அமைகிறது?

அன்பு  என்ற இனிமையான சொல்,   அண், அன் என இருமடியாகத் திரியும்.  அணுக்கம்,  அணு முதலிய சொற்கள் அண் என்னும் அடியில் தோன்றின.  அன்பு, அனுக்கிரகம் முதலியவை அன் என்னும் அடியில் வருவன ஆகும்.  இன்னும் பல உள்ளன. நான் இரண்டு எடுத்துக்காட்டுவதான் இரண்டுதாம் உள் என்று எண்ணிவிடலாகாது.. அனுசரணை என்பது அன் அடியில் தோன்றிற்று என் அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

YOUR ATTENTION PLEASE

If you enter compose mode please do not make changes.

You may  share this post with others through any social media. Copyright is waived for this post.. 

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.




புதன், 7 மே, 2025

விக்கிரமா

 இன்று விக்கிரம என்ற சங்கதச் சொல்லை அறிந்துகொள்வோம். 

சங்கதம் என்பது  சமஸ்கிருதம் என்பதற்கு மற்றொரு பெயர். இம்மொழிக்குப்   பல பெயர்கள் உள்ளன. சந்தாசா என்றோர்  "அழைப்பும்" உண்டு. இது சந்த அசைவு என்ற தொடரின் மருவுதலே.

இனி  விக்கிரம என்ற என்பதைக் கவனிப்போம்.

இது வில் + கு+ இரு +அ+அமை +அ என்பவற்றின்  சேர்க்கையும் திரிபும்தாம். வில்லுக்குப் பெரியோனாய் அமை ந்தவன்  என்பது பொருளாம். வில் கு > விற்கு என்று தமிழிலும் விக்கு என்று அயலிலும் வரும். இரு என்றால் பெரிய என்பது. இரு என்பது எண்ணிக்கை என்றும் கொள்ளல் தகும். இருமடங்கு என்னில் அதுவும் பெருமைக்  குறிப்பே.

வில்லிற் பெரியோன் எனில் வீரன் என்பதன் பொருட்டு.  பெண்ணுக்கும் அமையும்.

விக்கிரம என்ற சொல் தமிழ் மூலத்தது. இது மனிதப் பெயர்களிலும் பயின்று வழங்கும் .

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பிறருடன் பகிர்க.