செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

சந்திரன் தமிழ்ச்சொல்லா?



சந்திர னென்ற சொல்லில் திறன் > திரன் என்னும் பகவு உள்ளது. திரம் என்பது ஒரு விகுதி என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். சிலசொற்களில் விகுதி வெறும் சொல்லாக்கத்திற்கே பயன்படுகிறது. அதற்குச் சிறப்பான அல்லது எந்தப் பொருளும் இருப்பதில்லை. இதற்கான விளக்கத்தைச் சில முன் இடுகைகளில் பதிவிட்டுள்ளேம். (ஏம் - ஒருவினைமுற்று விகுதி). வேறு சில சொற்களில் விகுதிக்குப் பொருத்தமுள்ள பொருளிருப்பதாகக் காட்டமுடியும். இவற்றைச் சொல்லாய்வின் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.

சந்திரன் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லென்போர், அதற்கு வேறு வேரும் வேர்ப்பொருளும் கூறுவதுண்டு. நம் கொள்கைப்படி, சமஸ்கிருதம் இந்தோ ஆரியத்திலிருந்து நாம் பெற்றதன்று. இந்தோ ஆரியம் என்பதே ஒரு வெறும் புனைவுதான். அது இந்திய மக்களால் வளர்க்கப்பட்டுச் செழிப்பானதாக ஆக்கப்பட்டு இலக்கிய வளமும் உறுத்தப்பட்ட ஒருமொழி ஆகும். அதிலிருந்து மேலைநாட்டினர் பல சொற்களைக் கடன் கொண்டனர். கொண்டு தம் மொழிகளை வளப்படுத்திக் கொண்டனர். தமிழ்க் குடிகளுள் பாணர் என்போர் ஒரு தொழிற்பிரிவினராய் இருந்தனர். இராமகாதை என்பதே பிராமணர் அல்லாத ஒரு புலவரால்தான் பாடப்பட்டது. அவர்தான் வால்மிகி முனிவர்.

இராமர் கதையில் பிராமண சூழ்ச்சி என்று ஒன்றுமில்லை.

ஆர் இயம் என்றால் நிறைவான இசைக்குழு என்பதுதான் பொருள். இயம் - இயக்கப்படுவதான், ஓர் இசைஞர் குழு.

தவறாகப் பொருத்தி உரைக்கப்பட்டதால் இன்று ஆரிய என்ற சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உள்ள நிலை ஏற்பட்டுவிட்டது.

இனிச் சந்திரன் என்ற சொல்லைப் பார்ப்போம்.

சந்திரன் பூமிக்கு அருகில் உள்ள ஒரு கோள் ஆகும். இந்தப் பொருள் சந்திரன் என்ற சொல்லிலே காணலாம்.

அண்> சண் என்று திரிவது, அமணர்- சமணர் என்பதுபோல அகர சகரப் போலி. சண்+ திரன் > சந்திரன். ண்+தி என்பது ந்தி என்று திரியும். இதை முன் இடுகைகளில் காட்டியுள்ளேம். இது பாண்+ சாலி > பாஞ்சாலி என்று திரிந்தது போலுமே ஆகும். திரௌபதை என்ற அரசி பாணர் வகுப்பைச் சேர்ந்தவள். பாணர்களும் அரசாண்டு உள்ளனர். வள்ளுவன் அரசனாய் இருந்த பெரியோன் என்பது இற்றை ஆய்வுகளால் தெரியவந்துள்ளது.

திரௌபதை என்ற சொல்லும் பல்பிறப்பி ஆகும். இங்கு இது திரு - உயர்வான, அவ்வை< அவ் = அம்மை, பதி - நற்குணங்கள் பொதிந்தவள் என்று பொருள்தாரும். இதற்கே வேறு விதமாகவும் பொருள்காணக் கூடும். எதுவும் தவறு அன்று, பல்பகுப்பு வசதியுள்ள சொல்லால் இப்பெயர் ஆக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

சந்திரனுக்குத் திரும்புவோம். பூமிக்கு அருகில் உள்ளது சந்திரன் என்பது முன்னரே தமிழரும் ஏனை இந்தியரும் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. அது அண் ( அண்மை) மையில் உள்ள கிரகம் என்பது அறிவியற் கருத்து என்றாலும் அதையும் இந்தியர் அறிந்த அறிவுடையவர்களாய் இருந்தனர் என்பது இவ்வாய்வினால் தெரிகிறது.

சந்திரன் என்பது அன் விகுதியும் பெற்றுத் தொன்றுதொட்டுத் தமிழில் வழங்குவதால் அது ஏற்புடைய சொல்லே. அது தமிழென்றாலும் சமஸ்கிருதம் என்றாலும் ஒரு மாறுபாடும் இல்லை.

சம் கதம் > சம+ ஸ் + கிருதம் என்பது, சம ஒலி உடைய மொழி . ஒரு சீனனோ வேற்று மொழியினனோ செவிமடுத்தால் அவனுக்கு அதன் ஓசை தமிழ் போன்ற தாகவே இருக்கும். சுனில்குமார் சாட்டர்ஜி சமஸ்கிருத மொழி தென் மொழிகளின் ஒலியமைப்பு உடையது என்று கூறினார். இலக்கணம் எழுதிய பாணினி ஒரு பாணப் புலவன். பிராமணன் அல்லன்.பிரம்மத்தை உணர்ந்தவன் பிராமணன் என்பதால் பாணினியைப் பிராமணன் என்பதில் தவறு ஒன்றுமில்லை. சங்கதம் என்றாலும் சமஸ்கிருதம் என்றுதான் பொருள்.

இவ்வாய்வின் மூலம், சந்திரன் பூமிக்கு அருகில் இருக்கும் கோள் என்பதை இந்தியர் அறிந்தவர்கள் என்பது புலப்படுகிறது.

தண் திரள் என்பதும், தண் திர> சண் திர> சந்திர என்றாகி, சந்திரன் ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்



ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

இலாபம் சொல் தமிழ் ஆவது

 இலாபம் என்ற சொல்லில்  இல்,  ஆதல் என்ற இரண்டு பகவுகள் உள்ளன.

இல் என்பது இன்மை. இன்மை புகுந்துவிட்டால் புதிய வரவு இல்லை என்று பொருள்.

அடுத்து ஆதல் என்ற சொல் வருகிறது. இச்சொல்லுக்கு திரிபுகள் ஏற்பட்டுள்ளன.  ஆ + அம் >  ஆவம்.  ஆ (என்பது ஆக்கம் )  என்னும் வினையடி. ஆவம் என்பது வகர பகரத் திரிபால்  ஆபம் என்றாகிறது.

வரவின்மை  ஆக்கம்  ஆவதுதான் ( மாறுவதுதான் )  மேல் 

 ஆக்கம் ஆகிய இலாபம்.

இல்லாமை ஆக்கம் ஆனால்  அது இலாபம்.

இல் என்பதற்கு இடம் என்றும் பொருள் உள்ளது.  இடத்தில் ஆவது என்பது வருமென இருக்கும் இடத்தில்  ஆக்கம் பெறுவது என்றும் கூறின் அதுவும் சரியாகும். 

profectus என்ற இலத்தீன் முன்னேற்றம் என்ற பொருள் உள்ளது.   தமிழ் இலாபத்தில்  ஆவது என்பது  முன்னேற்றமே ஆகும்.

தமிழர்  பண்பாட்டில் உள்ள கருத்துப்படி  ஒரு கெடுதல் ஏற்படின் அதை நலம் நலம் என்ற சொற்களால் மறைத்துக் குறிக்கவேண்டும்.  நல்கூர்ந்தார் என்ற சொல்லுக்கு நனமை அடைந்தோர் என்பது சொற்பொருள் ஆனாலும்,  வறுமை என்பதுதான் புரிந்துகொள்ளவேண்டிய பொருள் ஆகும். வறுமையிலும் செம்மை என்பதே மந்திரம் ஆகும். வறுமையில் ஒழுக்கம் காக்கவேண்டும், அதுவே முதன்மை யாகும் என்றறிக. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதே வள்ளுவனார் குறள். அதுதான் விழுப்பம் தருதலால்.

இல்லாதவிடத்து ஆக்கமே இலாபம் என்றும்  கூறலாம்.

ஒருவனுக்குத் தொழில் தொடங்கிய காலத்திலிருந்தே  அல்லது பரம்பரை பரம்பரையாக முதலை விட அதிகமாக வருமானம் வந்துகொண்டே இருந்தது என்று வைத்துக்கொள்வோம். அப்படி வருவது சிறப்புத்தான் என்றாலும் இதை அவன் மாமூலாகக் கருதுவான். அவனிடம் யாரும்போய் சிறப்புடன் செய்கிறீர்கள் என்றால், " புதியது ஒன்றுமில்லை, என்றும் உள்ளதுதான், எனினும் இறைவனின் கருணை" என்பான். அவனிருக்கும் வரவு உயரத்திலிருந்து இன்னும் மேல்போகவேண்டும். அப்போது மனம் மகிழும்.  எப்போதும் வருவதற்கு எப்போதும்போல் செலவுகள் பட்டியல் இருக்கும். வாங்கித் தின்போர் பட்டியலும் நிரந்தரம் ஆனதாகவே இருக்கும்.  ஆகவே இலாபம் என்று கருதுவது ஓர் ஒப்பு நிலையிலிருந்து மேலாக வரும் வருமானம். புதிதாக ஒன்றும் இல்லையானால் அதுவும் ஒரு இல்லாமைதான். புதியது செய்யப் புதுவருமானம் வேண்டும். இதை இலாபம் என்ற சொல்லில் உணரவேண்டும்.  Similarity to existing or earlier conditions is nothing new.  A normal margin has already been established.  The margin must move to show something new. இல் என்ற சொல்லில் இதை உட்கிடை என்க.


 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 

For Memory


 in memory of Wanaja who loved and respected all humankind



Wanaja M next to the young lady