வியாழன், 8 டிசம்பர், 2022

நச்சினார்க்கினியர் என்ற பெயர்.

 நத்தி உடன் வந்தவர் என்ற வாக்கியத்தில், நத்துதல் என்ற சொல்லுக்குப் பொருள் தமிழ் மொழி பேசுவோர்க்கு தெரியும் என்று உறுதியாகச் சொல்லலாம். தெரியாமல் இருப்பின்,  அல்லது கொஞ்சம் விளக்கம் வேண்டின், கீழ்வரும் இடுகைகளைப் படிக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post.html

https://sivamaalaa.blogspot.com/2021/03/blog-post_29.html

https://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_29.html  (நத்தை ).

இவற்றுள்  பல சொற்கள் விளக்கப்பட்டுள்ளன.

நச்சு-தல் என்னும் வினையும் காணப்படுகிறது.  யாரும் விரும்பினவனையே நத்திச் செல்வர்.  நச்சுதல் என்பதற்கும் விரும்புதல் என்ற பொருள் உள்ளது. ஒன்று மற்றொன்றன் திரிபு என்னலாம்.  நசைஇ என்ற அளபெழுந்த சொல்லும் உள்ளது.

எனவே,  நத்திச் சென்றவர்க்கும் விரும்பிச் சென்றவர்க்கும் ( நச்சுதல்- நச்சினவர்) இனியவர் என்பதே நச்சினார்க்கினியர் என்ற பெயர்க்குப் பொருள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்/


UNFORGETTABLE SIGHTS OF MOM AND GRANNY.




BEAUTIFUL New citizen to the world,  Leah  with her caring mother. Leah is carefully watching her mother." Why am I not given a pair of spects like yourself?"

எனக்கும்தான் கண்ணாடி போட்டுக்கொள்ள ஆசை.
நீ மட்டும் போட்டுக்கொண்டாய்.  நானும் ஒரு குடிமகள் தான்.





A similar careful scrutiny took place many years ago.  This time Roshini seems to have been mesmerized by the beauty of her granny.
Reading a fairy tale in her face before even going to kindergarten.


கண்ணில் தோன்றும் காட்சி எல்லாம் என் பாட்டியின் அழகுதான் என்கிறார் பேத்தி ரோஷினி. ஏரிக்கரையில் தோன்றிய தேவதையா? மாரிகாலத்தில் மழைத்துளி மின்னும் கன்னங்கள் உன்னவை பாட்டி.
இப்போதே உன்னைப் படித்துவிட்டேன். சிறுவர் பள்ளிக்கு ஒன்றும் செல்லவேண்டாம்.

 

பவணந்தி என்ற பெயர். (நன்னூல் ஆசிரியர் ) 13th c AD approx

 பவணந்தி என்பது ஒரு கொடி.  இக்கொடி மற்ற கொடிகளைப் போல்  படரும் கொடியே.  ஓர் முனிவர் பெயருமாம்.

பர  என்பது முதற்சொல்.  அடுத்து நின்றது  வண் என்ற இன்னொரு சொல். இவற்றைச் சேர்க்க, பரவண் ஆனது.

அந்தி என்பது அழகு என்றும் பொருள்தரும்.  அம் :  அழகு.  தி என்பது விகுதி.

பரவண் என்பது பவண் என்று இடைக்குறைந்து  அந்தி என்ற சொல்லுடன் இணைவுற்றது.

இந்த இடைக்குறைச் சொற்களையும் அறிக:

பருவம் >  பவ்வம்.

கடலும் பரந்தது ஆகலின்,  பவ்வம் ஆனது.  பருவமும் ஆம்.

பரவு அம் > பவு அம் > பவ்வம். 

அந்தியிற்பரவும் அழகு எனினுமாம்.

பிறவழிகளிலும் ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.