செவ்வாய், 14 ஜூன், 2022

அழித்தவை எல்லாம் மீண்டுவந்தன

 அழியாத நல்லின்பம்  அகிலத்தில் எனதென்றே அறிந்திட்ட ஒன்றென்றால் அதுவென்றன்  கைப்பேசியில்;

பழியொன்றும்  அதிலில்லை, படிக்கின்றேன் அதைமீண்டும், பார்தன்னில் சோர்வுற்றே இல்லாயின உள்வந்திட்டால்;

வழிச்செல்லும் போதாங்கு  வந்தோருள் வானுலகு சென்றோரும் உள்ளோருள் கலந்திங்கு வந்ததேபோல்;

விழியிலிவை பட்டாலும் வீணென்று காணற்கும் கூனென்று கொள்ளற்கும்ஒன்றில்லை இன்பமின்பம்.


எம் தொலைப்பேசியில் உள்ளவற்றை அழித்துவிட்டு மறுதிறவு செய்கிறபோது முன் களைந்தவை எல்லாம் மீண்டும் வந்துவிட்டன. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றபடி,  இதுவும் இன்பம்தான்; இன்பமே அன்றித் துன்பமில்லை. இருக்கட்டும்.


கூன் -   குறைவு.  நிறைவற்றநிலை.

ஒன்றில்லை - ஏதுமில்லை.

இந்தச் சிறுகவியில் அருஞ்சொற்கள் இல்லை. அடிக்கு எட்டுச்சீர்களாக, ஒவ்வொரு சீரும் மூன்று  அசைகளாக அமைந்துள்ளன.  மனத்துள் இந்த வடிவில் கவிதை தோன்றியதால் வடிவில் மாற்றம் செய்யாமல் அவ்வாறே வடித்துள்ளேம்.  கவிதை தன்மையொருமையில் கூறுவதாக வந்துள்ளது. விளக்கத்தில் தன்மைப்பன்மையில் கொடுத்துள்ளேம்.  மிக்க நன்றி.

{கைப்பேசி,  தொலைப்பேசி என்பவற்றில் வலிமிகும். இது நன்று. மெய் " ப்" இடப்பட்டுள்ளது. விடப்பட்ட இடங்களில் ப் இட்டு வாசிக்கவும்.)  பின்னூட்டம் இடுதல் மிக்க உதவி. எளிதில் நாங்கள் கண்டுபிடிக்கலாம். உங்களுக்கு வணக்கம்.

தொலைப்பேசி என்றால் தொலைவிலிருந்துகொண்டு பேசும் கருவி என்பது.

 தொலைப்பேசி என்ற தொகையில்  "இல், இருந்துகொண்டு" என்பன தொக்கது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.




மினிட்டும் செகண்டும் தமிழ் மூலங்களுடன் ஒப்புமை,

 மிகுந்த சிந்தனையில் ஈடுபடாமலே மிக்க எளிதாக, " மினிட்" என்ற ஆங்கிலச் சொல்லின் அமைபு பற்றி நாம் உரையாடலாம்.

தமிழில் நாம் நிமிடம் என்று சொல்கிறோம். இச்சொல் மற்ற இந்திய மொழிகளிலும் சொல்லக்கேட்கிறோம்.  ட என்பதற்குப் பதில் ஷ இருக்கலாம்.

மேலும் செல்லுமுன் இதைச் சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள்.

https://sivamaalaa.blogspot.com/2017/05/for-minute.html

இப்போது நிமிடம் :  இதில் அம் விடுபட்டால்  நிமிட்.

இதில் முதல் இரண்டு எழுத்துக்களை முறைமாற்றினால்:  நிமிட்> மினிட் என்று  மாறிவிடும்.

"வழக்கில் புல்லைச் செத்தி எடுத்தல் என்பதுண்டு.  செத்தி > செதுக்கி.

செகன்ட் என்பது  செத்துண்டு, செக்குண்டு ( செகு+உண்டு). ஒப்புமைசெய்யத் தக்க வடிவங்கள்.

வெட்டுண்ட கைகள் வேதனை கொண்டேனே

விதிவசத்தால் இந்த கெதியை அடைந்தேனே

இந்தப் பாடல் வரியில் உண்டு என்ற துணைவினை வருவதுபோலவே,  செக்குண்டு என்பது.

இலத்தீனில் "செக்குண்டா" என்பது வெட்டுண்டது என்னும் பொருளது. இது பெண்பால் வடிவச்சொல்; ஆண்பால் சொல்: செக்குண்டஸ் என்பது.

இவை மிக்க அணுக்கமுடையனவாயும் ஆய்வுக்குரியனவாயும் உள்ளவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 


திங்கள், 13 ஜூன், 2022

தாடி, தவ்வு, தாடகை

 தவ்வு என்பது இப்போது இப்போது ஓர் அரும்பதமாகவே தோன்றுகிறது. இதை தடு என்ற வினையிலிருந்து அறிந்து போற்றலாம். 

தடுத்தல்  வினை.

தடு > தடுப்பு  ( பு விகுதி),  தடை ( ஐ விகுதி), தடங்கல் ( தடு+ அம்+ கு+ அல்,  இரண்டு இடைநிலைகளும் ஒரு விகுதியும்).

வு என்பதும் ஒரு விகுதிதான்.  அறி -  அறிவு.

தடு > தடு+ வு>  தடுவு.

டு என்பது இடைக்குறையாக,  

தடு > தடுவு > த + வு > தவ்வு,   அல்லது  த(டு)வு> தவ்வு> தௌவு என்றும் எழுதினர்.

தாடி என்பதும் முகத்திற்கு ஒரு தடைதான். (குழந்தையை முத்தமிடத் தடை, வேறு தடைகளும் இருக்கலாம்).

தடு >  தாடு.  ( இது சுடு > சூடு என்பது போல).

தாடு +   இ >  தாடி. 


இனி இராமாயணத்தில் எப்படி தாடு என்பதிலிருந்து பிறந்த சொல் ஒரு பேயின் பெயராய் வருகிறது, காண்போம்.

தாடகை யாகம் இயற்றுவோரின் முயற்சிகட்கு ஒரு தடையாகவிருந்தாள்.

தாடு :  தடை.  தடுத்தல்.

தாடு + அகம் + ஐ.

அகம் என்பதை அக என்று குறைக்க,

தாடு + அக+ ஐ  > தாடகை ஆகிறது.

தவமியற்றும் இடத்தில் இருந்துகொண்டு ( "அக")  தடைசெய்யும் பேய்.

வான்மிகி ஒரு சங்கப்புலவருமாவார். இராமாயணத்தில் பல பெயர்கள் தமிழ் மூலம் உடையவை.