திங்கள், 2 மே, 2022

நெகிழியைப் பாடுவேனோ?

 உழைக்கும் --

கைகளைப்  பாடும்  வாயால்  ----- நெகிழிப்

பைகளைப்  பாடுவேனோ?

வாழ்வினைப் பாடும் வாயால் -----  மண்பெறும்

தாழ்வினைப்   பாடுவேனோ?


தாவிடும் பாங்கறியா  ---  நிலைத்துத்

தவிப்புடன்  பரவும்கொடி

ஓவிய மரஞ்செடிகள்  ----  படும்துயர்

கூவி உரைதரவோ?


ஓரிடம் பழுதுபட்டுவிட்டால் தாவி இன்னோரிடம் செல்லுதற்கு மரஞ்செடிகட்கு திறம் இல்லை. விதை கொட்டைகள் மூலமே பின்வருவனவற்றை ( இனி முளைக்க இருப்பன )  நகர்த்த முடியும்..  பாவம் இவை.  இவற்றையும் பாதுகாக்க வேண்டும்.

நிலைத்து - முளைத்த  இடத்திலே இருந்துகொண்டு.

ஓவிய -   ஒரு சித்திரம்  போல.

கூவி -  யாவரும் அறிய ஒலி எழுப்பி.

உரை -  எடுத்துச் சொல்லி.

இவை தாவுவதற்கு அரியவை ,  ஆகையினால் தாவரம் எனப்பட்டன. வேறு விளக்கமும் உண்டு.  தாவுதல் என்றால் இடம்பெயர்தல்.

தாவு + அரு + அம் >  தாவரம்.   ( தாவிச் செல்ல [ இடம் பெயர]  முடியாதன )

தாழ் + வரு + அம்  >  தாழ்வரம் > தாவரம் :  உயரமாக முளைக்க இயலாதவை.

இச்சொல் இருபிறப்பி.




நெகிழிப்பை.  PLASTIC BAG



விசுவநாதன் என்ற தமிழ்ப்பெயர்.

 இன்று "விசுவநாதன்"  என்ற  பெயரில் அமைந்துள்ள தமிழ் மூலங்களை அறிந்துகொள்ளுவோம்.

தமிழல்லாத சொற்களைப் பற்றிக் கூறுவதாயின்,  அத்தொகுப்பில் பல தமிழாதலைக் காணலாம்.  தமிழே இல்லாத மொழிகள் உலகில் அரியன என்று அறிஞர் சிலர்   கூறுவது உண்மையாகும். ஆங்கிலத்தில் உள்ள அட்வான்ஸ் என்ற சொல்லில் உள்ள "அட்"    என்பது "அடு"  ( அடுத்துவரல் ) என்பதன் திரிபாகும்.   ரேர் ( அரிது )  என்பது அகரமாகிய தலையிழந்த சொல்.  ஆங்கிலத்தில் காணப்படும் தமிழ்ச்சொற்களில் பல தமிழாயிருத்தலால்  தமிழும் ஓர் இந்தோ ஐரோப்பியத்துக்கு மூலமொழியாதல் கூடும் என்பது முன்னர்  ( இருபதாம் நூற்றாண்டில்)  சுட்டிக் காட்டப்பெற்றுக் கட்டுரைகளிலும் வெளிவந்துள்ளன.  அவற்றில் சில உங்களை எட்டியிருத்தல் கூடும்.

நன்னூல்  என்னும் தமிழ் இலக்கணம் தமிழிலிருந்து இந்தோ ஐரோப்பிய மொழிகட்குப்  மொழிபெயர்க்கப்பட்டபின்,  அம்மொழிகளில் மொழிநூல் கலை வளர்ச்சியடையத் தொடங்கிற்று. இந்தியாவிலிருந்து ஐரோப்பியர் அறிந்துகொண்டவை பல.  சீனாவிலிருந்து அவர்கள் வெடிமருந்துகளை அறிந்துகொண்டது போலவே இதுவும்.  அகரவரிசைகள்  நிகண்டுகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை.  இது நிற்க: 

விசுவநாதன் -  இச்சொல்லில் உள்ள விசு என்ற சொல்லுக்கும் வீசுதல் என்ற வினைச்சொல்லுக்கும் உள்ள தொடர்பு முன்பு விளக்கப்பட்டுள்ளது.  அதை இங்குக் காணலாம்:  ஒன்றை வீசுவீரானால் உம் கையிலிருந்து இடைவிரிவில் அது பயணித்துச் சென்று கீழே விழுகிறது. இது விரிசெல்கை.

விழித்தல் என்பதும் இமை விரித்தல்தான்.    விர்>விரி> விழி.

இலத்தீன் பகர்ப்பு:  விர் > விழி > விஸ்  (viz )  visual.  viz>   video ( I see).

https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_16.html 

விசு என்பது தமிழ் அடிச்சொல். 

அது விரிதற் கருத்தை அடிப்படையாகக் கொண்ட சொல்  ஆகும்.

இதையும் வாசித்தறிக:

https://sivamaalaa.blogspot.com/2014/08/blog-post_63.html

வாயித்தல்   ( வாயாற் சொல்லுதல் )  என்பதன் திரிபுதான்  வாசித்தல்.  ய- ச போலி.  ய -ச திரிபு பிறமொழிகளிலும் காணப்படுவதாகும். (  Not language  specific   )

ஒரு சொல் தமிழா அன்றா என்பதை ஸ், ஷ் என்று வரும் ஒலிகளை வைத்து முடிவு செய்யப்படாது.  உயர்> உயர்த்தல் > உயர்த்தி > ஒஸ்தி ( திரிபு)   அதனால் அது தமிழன்று எனப்படாது.

விர் > விரி [  விரிவு  ]

விர் >  விய்   ( வியனுலகு).

விய் >  (  வியு)  >  விசு >  விசும்பு.  (   காயம்  [  ஆகாயம் ] )

விசுவம்  .  > விசும்பு (எங்கும்  விரிந்து அமைந்ததாகிய உலகம்.)

இதனை "விரிநீர் வியனுலகு"  என்று சொல்லமைப்பையும் தெளிவுறுத்திக் கூறினார்  வள்ளுவனார்.

(தமிழை ஒட்டிய பூசாரிமொழிதான்  சமத்கிருதம். அது தமிழின் பிம்பமாய் எழுந்து சில அயல்சொற்களையும் உள்ளடக்கி விரிவடைந்தது)

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

(மீள்பார்வை செய்யுமுன் இடைக்காலத்தில்

எழுத்துபிறழ்ச்சிகளை சரிப்படுத்தி வாசித்துக்கொள்க.

நேரமிருந்தால் பின்னூட்டம் செய்து உதவுக )


ஞாயிறு, 1 மே, 2022

திங்கட்கிழமை வாழ்த்து

 திங்கட்கிழமை  ஒவ்வொன்றுமே 

தித்திக்கும் புதுத்தொடக்கம்!

புத்தாற்றின்  புதியபுனல்

செடியிற்பூத்த  இன்றைப் பூவே.

படியமையாத  புதிய பாதை.

வானுலாவும் தாரை ஒவ் வொன்றும்

தேனுமிழ்ந்து கண்சீமிட்டும்.

வல்லவன் இறைவன் துணையொடு

நல்லதெலாம் நடைபெறும், மகிழ்க.


புனல் - தண்ணீர்

படியமையாத -   முன் உள்ளதுபோல் அமையாத

படி -  முன்பே படிந்திருப்பது.  (படு > படி,  படர்)

தாரை - நட்சத்திரம்


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்