ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

க ண்ணாடியிற் கண்டெடுத்த கவி

 முகம்தவிர வெளியுருவைக் காட்டும் ஆனால்

மிகுமுருவும் அதிற்காட்டிச்  சார்பும்காட்டும்! 

மனிதன் கண்ட பொருள்களிலே மாப்பொருள் என்றால்

தனிமேன்மை கொண்டதுகண் ணாடி என்போம்

மகிழ்கொள்ளக் கவிபாடத் தமிழே   போல

முகிழ்த்துவரும் கருத்துகளை  முன்சொரி கின்ற

உலகமொழி  ஒன்றிரண்டு  உண்டே  என்பேன்

எலாம்தந்த  இப்படமும் களிப்பீர் கண்டே.




படத்தில் தோன்றுபவர்:  அ.மா. மணி

கவிதை தந்தவர்:  சிவமாலா.

படத்துடன் கவிதை சுவைத்துமகிழ்வீர்/

பண்பட்ட அறிவாளர் ஆவது எப்படி

செய்தியை  அறிந்துகொளப்  பறந்த சென்று

அறிந்தபின்பு  ஒருவாறு  அடங்கி நின்று 

மறுநாளில் எழுச்சிதரும்  செய்தி  இல்லை

என்பதனை  அறிந்ததபின்  எழுச்சி  குன்றி

ஒன்றுமிலை என்றபடி குன்றி நிற்போம்!

ஆர்வத்தை அடக்கிடவே  கற்றுக்கொண்டால்

உலகத்தில் நின்றாகும மனிதர்தம்மில்

பலகற்றுக் கொள்வாரை    நாமும் காண்போம்.

சீராகச் செலவேண்டும் வாழ்க்கை  ஓடம்!


ஆர்வமென்ற ஒன்றினையே கூட்டிக் கொள்ள,

கூட்டினது மிகுந்துவிடிற் குறைத்துக் கொள்ள, 

வேண்டியவா றமைந்திடவே ஈண்டு கொண்டால்

என்றுமின்றும் நன்றுகிட்டும் வாழ்வில்  சீரே.


சீரான வாழ்வினையே  காண்போம் நாமும்

செம்மையென்ப தொன்றுளதே வாழ்வுநன்றே.


ஆர்வத்தை மட்டுறுத்தக் கற்றுக்  கொள்வீர்

தீவிரங்கள் தாமேயாய்  உதிரந்து போமே.

நீரேஎன்   றென்றும்   இங்கிருக்க மாட்டீர்

இவ்வுலகம் பழமண்ணே மறந்தி டாமல்

செவ்வைதனை வாழ்வுதனில் ஒட்டி நிற்பீர்.


அறிக மகிழ்க.

மீள்பார்வை:  பின்.


சனி, 23 ஏப்ரல், 2022

காபிக்குத் தமிழ்ப்பெயர்.

 இன்னும்  ஒருவாழ்வு  இருந்தாலும்  நல்லதுதான்,

மன்னும்  புவியில்போல் பாலிட்ட -----  இன் தேறல்

நல்ல  குளம்பரி  என்போம்  அயலிலதை

வல்லாரோ  காபிஎன் பார்.