வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

தவமும் ஜெபமும்

  ஜெபமென்பதும் தவமென்பதும் அழகான தமிழ்ச்சொற்கள்.

இவற்றை இப்போது காண்போம்.


தொடக்கத்தில் சிலர் தவம் செய்யத்தொடங்கிய காலத்து, 

அதற்கு உடனே ஒரு பெயர் ஏற்பட்டுவிடவில்லை. 

இல்லறத்தார் அதைக் கண்டு,   அதில் ஈடுபட்டவர்கள்

(இந்தத் தவஞ்செய்வோர்) குடும்ப வாழ்க்கை மற்றும்

இன்னல்களிலிருந்து  தப்பி ஓடப் பார்க்கிறார்கள்

என்றுதான் நினைத்தனர். அதனால் ஒப்பாமையை

உணர்த்த  வீட்டு வாழ்வே சிறந்தது என்றனர்.  

இதன் எண்ணச் சுவடுகள் பிற்காலங்களிலும்

 இலக்கியங்களில் காணப்பெற்றன. அதிர்வுகளை

உண்டாக்கின. ஒரு புதுக்கொள்கை தோன்றியவுடனே 

அதற்குப் பெயர் ஏற்பட்டுவிடுவதில்லை. பெயர்கள் 

நாளடைவில்தான் ஏற்படுகின்றன. திரைப்படங்களைக் 

குறிக்க என்னென்ன பெயர்கள் வழங்கின? இதை 

இப்போது விவரிக்கவில்லை. நீங்களே சிந்தித்துக்

கொள்ளுங்கள். நேரம் கிட்டினால். எப்போதாவது 

எழுதுவேம்.


இன்னல்கள், சிக்கல்கள், உலகியல் தொந்தரவுகள் 

முதலியவற்றினின்றும் தப்பித்துக்கொள்வதே தவம். 

தவமென்றால் என்ன என்பதை மிக்கச் சிறப்பாக 

விளக்கிய வரையறவுகள் எல்லாம் வெகுநாட்களின்

பின்னர் அறிஞர் ஆய்ந்து எழுதியவை.  கேட்கவும்

படிக்கவும் அவை இனியவையாக இருக்கும் என்பதில்

ஐயமெதுவும் இல்லை.  ஆனால் முதன்முதலாய் இதைக்

கண்டவர்களுக்குத் தோன்றிய எண்ணம், இவர்கள்

தப்பி ஓடுகிறார்கள் என்பதே அன்றி வேறில்லை. ஆகவே

தப்புதல் என்ற சொல்லினின்று தவம் என்ற சொல் 

தோன்றியது.


(சில தப்பியோடியவர்களைப் பிடித்து உதைத்துக்

கட்டாயக் கல்யாணம் செய்துவைத்த நிகழ்வுகளும்

நடைபெற்றிருக்கலாம். இவற்றை யாம் தேடிச்

கண்டுபிடிக்கச் செல்லவில்லை. நாம் கற்பனைகளுக்

குள்ளும் செல்லாமல் விடுப்போம்.)


தப்புதல், இது இடைக்குறைந்து  தபுதல் ஆனது.பின்

தபுதல் >  தபு+ அம் > தபம் > தவம் ( பகர வகரத் திரிபு ).

என அமைந்தது.


தப்புதல் தாவுதல் எல்லாம் தொடர்புடைய சொற்கள்.

ஒருவன் தாவும்போது இடையில் உள்ள பல தடைகள்

இடையூறுகளை இடறாமல் தப்பித்துத்தான் விடுகிறான்.

இதைப் பின் விளக்குவோம்.


தாவு > தாவு + அம் > தவம் ( முதனிலை குறுகிய தொழிற்

பெயர் ).  சா வு > சவம் என்பதுபோலுமே இது. இவ்வாறு

கூறினும் ஏற்கலாம்:   சா(தல்) > சா + அம் > சாவம் (வகர

உடம்படுமெய்) > சவம் (முதனிலை குறைந்தது ).


இனிச் செத்துதலிலிருந்து செபம் வந்ததை அறிவோம்.

செத்துதலாவது ஒத்திருத்தல்.  புல்லைச் செத்தி 

அழகுபடுத்துகிறவன்,  அவற்றின் நீட்டம் 

ஒத்திருக்கும்படி வெட்டுகிறான். அப்போது திடல் 

அழகாகிறது.


இதன் அடிச்சொல் செ என்பதுதான்.  செத்துதல் என்பதில்

து என்பது வினையாக்க விகுதி.


புத்தகங்களை அச்சிடுவோர் அவற்றை அழகாக வெட்டிச்

செப்பம் செய்கிறார்கள்.  அவை ஒத்திருக்கும்படி கட்டி

வெட்டி ஒட்டி வேண்டியன செய்வதே செப்பம். ( படியொப்

புமை)  . ஒருவன் செபம் செய்யும்போது அவன் ஒத்த 

வாக்கியங்களைச் சொல்லி வழிபடுகிறான். அதாவது

இன்று சொன்னதையே  நாளையும் அதற்கடுத்த 

நாட்களிலும் ஓதுவான்.   அதுவும் செப்பம்தான்;  

அவன் வாயினின்று வருவன நல்ல செப்பம் செய்த 

வாக்கியங்கள்.


செப்பம் > செபம் .  செப்பம் செய்த வாக்கியங்களைத் 

திருப்பித் திருப்பிச் சொல்லி வழிபடுதல். செபம் பின் 

ஜெபம் ஆனது.  உயர்த்தி என்பது ஒஸ்தி ஆனது

போல. தமிழில் "வடவொலிகள்" இல்லாத பல சொற்கள்

ஏனைத் திராவிட அல்லது தமிழின மொழிகளில் 

அவ்வொலிகளை அடைந்தன. எடுத்துக்காட்டுகள் 

பின்னொருநாள் காண்போம். ஒன்று கூறினேம். தமிழிலே 

உயர்த்தி (  உயர்ச்சி )என்பது ஒஸ்தி ஆனது அன்றோ?


இன்னும் கொஞ்சம் சிந்தியுங்கள். செப்புதல்  என்பது 

ஒன்றைச் செப்பமுறச் சொல்லுதல்.  செ என்பது செம்மை 

குறிக்கும் அடிச்சொல்.  செப்பு என்பதில் பு என்பது 

வினையாக்க விகுதி. செப்பு இடைக்குறைந்தால் செபு 

ஆகும்.  செபு+ அம் = செபம். இப்போது செப்புவதையே 

நாளையும் பின்னும் செப்புவது என்று வரையறவு செய்க .  

அப்போது உண்மை புரியும்.


ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கினும் அது 

அதுவேதான்.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.

இப்போது இவ்விடுகை சிறிது செப்பம்

செய்யப்பெற்றுள்ளது. அது வாக்கிய

அமைப்பு, தட்டச்சுப் பிறழ்வு தொடர்பானது.

இடுகையின் உள்ளுறைவு மாற்றம்

செய்யப்படவில்லை.





 




புதன், 12 ஆகஸ்ட், 2020

கேடகம் - சேடகம் (கேடயம்)

  இங்கு நாம் வெளியிட்டுள்ள இடுகைகள்  பெரும்பாலும்

ஒவ்வொன்றாகச் சிந்தித்து எழுதப்பட்டவை. இது

சிந்தித்தல் என்ற சொல்லுக்கு இங்கு கூறியுள்ள 

பொருளுக்குப் பொருத்தமானவை. ஒவ்வோர் இடுகையும்

சிறிதாய் இருப்பதுபோலவே சிந்தனையும் சிறிது சிறிதாய்

வெளிப்பட்டவைதாம். இவற்றை ஒரு நூலாய் 

வெளியிடுவதாயின் முறையாக வரிசைப்படுத்தி 

இயைத்துத் தொகுத்து வெளியிடுதல் வேண்டும். இது

நிற்க, இப்போது கேடயம் என்ற சொல்லைப் பார்ப்போம்.


இச்சொல் ஓர் இடுகையில் விளக்கப்பட்டது. அதனையும்

வாசித்துக் கொள்ளுங்கள்: சொடுக்குக:

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_54.html


மேற்கண்ட இடுகைக்கு முன்னும் இது விளக்கப்பட்ட

துண்டு.  அஃது இவ்வலைப்பூவில் இப்போது இல்லை.


கேடயம், கேடகம் என்ற வடிவங்களில் இருக்கும் 

இச்சொல்,  உள்வரும்  அம்பினைக் கெடுத்தல் 

அல்லது தடுத்தல் என்ற பொருள் உள்ளதுதான்.

கோட்டை மதில்களின்மேல் சுற்றுச் சுவருடன்

அமைக்கப்பட்ட "கூடுகளுக்குள்" வீரர்கள் 

இருந்துகொள்வதால், அம்புகளிலிருந்து இவர்கள்

தங்களைக் காப்பற்றிக்கொள்வர். அகம்நோக்கி

வரும் அம்புகள் சுவரினால் கெடுக்கப்படும் , 

அதாவது  தடுப்புறும்.  அகம்வருவது கெடுக்கப்

பட்டது. இது ஒரு முறைமாற்றுப் புனைவு. இவ்வாறு

அமைந்த சொற்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டுக்கு

ஒன்று:   வாயில் என்ற சொல். இல்லத்தின் வாய்

என்பதைத்தான் வாயில் > வாசல் என்று புனைந்துள்

ளனர்.  அதாவது முறைமாற்றியுள்ளனர்.


இனிக் கேடகம் என்ற கேடயம், வேறு வடிவங்களையும்

அடைதல் உண்டு. ககரம் சகரமாகவும் (ககர வருக்கம்

ஏற்புடைய சகர வருக்கமாகவும் )  திரியுமாதலால்,

இவ்விதிக்கொப்ப இது சேடகம் என்றும் திரியும்.

இது கேதாரகெளளம்  என்பதில் சேதாரம் எனற்பாலது

கேதாரம்* என்று திரிந்தாற்போலுமே ஆகும். மேலும்

சேரலம் என்பது கேரளம் என்று இயல்வதும் காண்க.


. பழைய இடுகைகள் சில இவற்றை விளக்கியுள்ளன.அறிக


மெய்ப்பு: பின்னர்.



செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

உயர்ந்த உள்ளம் இவருக்கு.

 உலகுக்  குதவுவதே உண்மை அரசியலாம்

பலகற்  றுயர்ந்த பண்பும் அவரிடத்தே.

யாரும் புகழும் பாரிலுயர் பண்பாளர்.

மருத்துவர் இவரை மதித்துப் போற்றுவீர்!



https://www.ndtv.com/india-news/doctor-turned-politician-zr-thiamsanga-in-mizoram-helps-woman-deliver-baby-2277818?browserpush=true