செவ்வாய், 3 செப்டம்பர், 2019

கடினத்தில் எளிமை

கடுமையை. உடையதாய் இருந்த மரத்திலிருந்து உருவான தாள்  சிறப்பாய் அமைந்துவிட்டது.

அதுதான் கடுதாசி.

கடுமையைக் குறிப்பது  கடு என்னும் முதனிலை..

தா என்பது உண்மையில் தாள் என்ற சொல்லின் கடைக்குறை.

தாள்  என்பது நெற்பயிர்களில் உள்ள தாள்.. அதுபோலும் பிற தாள்களையும் குறிக்கும்.  எடுத்துக்காட்டு:   வெங்காயத் தாள்.  பூண்டுத் தாள். பிற்காலத்தில்
காகிதத் தாளையும் குறித்தது.  "பேபிரஸ்"  என்னும்  இலை குறித்த சொல்லே பின் பேப்பர் என்ற ஆங்க்கிலச்சொல்லுக்கும் அடியாய் அமைந்தது,

எனவே  கடுதாசிக்குள்  தாவரத் தாள் புகுந்ததில் வியத்தற்கு ஒன்றுமில்லை.

கடு + தாள் + சி.>  கடு + தா(ள்) + சி.

ளகர ஒற்று மறைந்து சொல் தடை ஒலி ஏதுமின்றி ஒழுகுவதுபோல் அமைந்தது  ஒரு திரிந்துசிறத்தலே  ஆகும்.

சி என்பது விகுதி.   இதைச் சிறப்புக்கு அடையாளமாகக் கொள்ளுதலில் தவறில்லை.  சொல் அமைத்த ஒருவரோ  புழங்கிய   ஊர்மக்களோ  இவ்வாறு
ஒலித்தடையை விலக்கிக் குறித்த பொருளின் உயர்வை உணர்த்தி  யிருக்கலாம்..  கடுதாளி என்பதே கடுதாசி எனல் ஒருபுறம் இருக்க.


 திருத்தம் பின்,  (தட்டச்சு)

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

விருந்தாளியும் விருந்தாடியும்.

விருந்தாளி  என்ற சொல்  விருந்தாடி என்றும் உலக வழக்கில் வரும்.  உலக வழக்கு எனல் செய்யுள் வழக்கு அல்லாதது.

இங்கு  யாம் சுட்டிக்காட்ட விரும்பியது  ளகர டகரத் திரிபுகள்.

ஒன்றை ஆளுதல் அதை  நிறுவி நடத்துதலே ஆகும். எனவே  விருந்தாளுதல்  விருந்து ஏற்பாடு செய்து  அதில் பிறர்  பங்கு பெறச்  செய்தல்.  பங்கு பற்றியோர் விருந்தாளிகள்  ஆவர்.

ஆள்  என்பதை  இவ்வாறு உரைக்காமல் நபர் என்று கொள்ளுதலும்  கூடும்.

எவ்வாறாயினும் ஆளி  என்பது  ஆடி என்று திரிகிறது.

இவற்றைக் கவனியுங்கள்.

மள்  >   மாள். ( வினைச்சொல் )  பொருள்:  இறந்துபோ,  உயிர் குறைபடல் ஆகு,
மள்  >   (  மடு  ) >  மடி.   இறந்துபோ,
இன்னொரு காட்டு:  விள் >  விடி.
மள்  >  ( மளி  )  மளிகை   :    உயிரற்ற  விலைப்பொருட்கள்.
மள்குதல்  -  குறைதல்   மள் > மழு>   மழுங்குதல்.
மள் >  மர்
மள்  >   மர்  >  மரி  >   ,மரித்தல்  :  இறத்தல்.
மள் >  மர் >  மரணித்தல்.
மர்  >  மரி  >   மரணம்.
மர் >  மார் >  மாரகம்.

பின்னொருகால் விளக்குவோம்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஸ்மரண என்ற நினைவுநிலை.

மனிதன் நினைவு நிலைத்திருக்கும்போதே இறைவனை நினைந்துருகித் தன் ஆன்மாவுக்குப் பற்றுக்கோட்டினைப் பெற்றுக்கோடல் அறிவுடைமை ஆகும். அவன் நினைவிழந்து நீங்கும் நேரத்தில் இஃது வாய்ப்பதில்லை.

ஆகவே நினைவுநிலை என்னும் ஸ்மரணம்  மிக்க முன்மை வாய்ந்ததாகிறது.

இப்போது இச்சொல்லை  அறிந்தின்புறுவோம்.

சுருக்கமாக:

மற அறு அணம்

அதாவது மறத்தலை அறுத்த நிலை.

அணம் என்பது  நிலை குறிக்கும் விகுதி.

அறு  அணம் என்பன  அறணம்  ஆகிறது.

மற அறணம்  >  மறணம்   ( மறறணம் >  மறணம் :  ஈரெழுத்துக் கெட்டன  )

வகர உடம்படுமெய் தமிழில் இரு முழுச்சொற்கள் புணர்வில் வரும்.  பிற மொழிப்புனைவில் மற்றும்  தமிழ்ச் சொல்லமைப்பிலும் வராதும் போம். பழைய இடுகைகள் காண்க.  மறணம் என்பதை   ஸ்மரணம்  ஆக்க அழகிய சொல் கிட்டிற்று.

இனி இப்புனைவில்  பகுதி + பகுதி + விகுதி என்று சொல்லானது பழமை நெறியினாலே அமைவுண்டு  அது  பிறப்பிக்கப்பட்ட பின்புதான் முறைப்படி
தேவையற்ற ஒலிகள் விலக்குண்டன என்பதும்  அறிக. தலையெழுத்தே பிற்சேர்க்கை ஆயிற்று.  இஃது  இரு பகுதிப் புனைவு,

இதுவே நினைவு நிலையைச் சுட்டும் சொல்.