ஞாயிறு, 20 ஜனவரி, 2019

கூஜா சொல்லமைப்பு

டகரம் அயற்றிரிபாய் ஜகரமாகு மென்பதை முன்னர் உணர்த்தியுள்ளோம்.

இது தமிழ் சங்கதத் தாவல்களில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் வரும்.

படி ( படித்தல் )   :   பஜி.

பாண்டுரங்க நாமம்
பஜி மனமே.  (பாடல்.)

இது படி அல்லது பாடு என்று பொருள்தரும்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

கடை: கடைதல்.

கடை + அம் >   கடம்  > கஜம்.  (  கடைந்ததுபோலும் முகம்),   வழக்குப்பொருள்: யானை.

பிற மொழிகளில் இதுபோலும் திரிபு உண்டு.   எடுத்துக்காட்டு:

எஜ்  (  பொருள்:  நான் )  குர்திய மொழி.
எஜம் (  அவஸ்தான் )
அடம்  ( பழைய பாரசீக மொழி).   இது அகர எகரத் திரிபு,

ஆங்கிலத்தில் ஏ  ஆ இரண்டும் இடத்திற்கேற்ப மயங்கும்,

ஏப்  ( எழுத்துக்கூட்டலில் ஆப் ).

ஆ - ஏ தொடர்பு பல மொழிகளில் உண்டு.

மேஜர்  (  மெய்ஜ் அர்)    குரிதியம்
மேற்றத்  அல்லது மேட்டத்.       உருசிய மொழி.

ஹாட்யாய்  =  ஹாஜ்யாய்    தாய்லாந்து மொழி  ட் > ஜ்

இங்கு ஜ என்பது ட என்று  திரிந்தது. டவுக்கு அண்மிய ஒலிச்சொற்களும் மேலே காட்டப்பட்டன.

முன் காலத்தில் (  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்கு முன் வரை )  சிற்றூர் மக்கள் தொன்னைகளில் கஞ்சி உண்டனர்.  இவை ஓலைகளால் திறமையாகக் கைப்பின்னலாகச் செய்யப்பட்டவை.  தண்ணீர் கீழ் ஒழுகிவிடாமல் அழகாகப் பின்னப்பட்டிருக்கும்.  இவற்றைப் பொருட்காட்சி சாலைகளில் கிட்டினால் பாருங்கள்.  நமக்கு இப்படி ஏதும் பின்னத் தெரியவில்லை. காட்டுவாசிகட்கு நன்றாகத் தெரிகிறது.  பழங்காலத்தில் கூஜாக்களும் இப்படித்தான் ஓலைகளால் உருவமைக்கப்பட்டன.  கூடுபோல் பின்னினர்.  பின்னர் மண்ணாலும் பளிங்கினாலும் வெள்ளியினாலும் பொன்னாலும் செய்யப்பட்டன.  காலம் இடம் இவற்றைத் தீர்மானித்தன.

கூடு ( வினைச்சொல்)  கூடுதல். ஒன்றுசேர்த்துப் பின்னுதல்.

கூடு >  கூஜ் > கூஜா.  அல்லது கூடா  ( கூடு+ ஆ)  > கூஜா.

ஆ தொழிற்பெயர் விகுதி.   கூஜா என்பது அயலிலும் வழங்கும் சொல்.

திருத்தம் பின்
திருத்தம் பின் என்றால் எழுத்துப்பிழைத் திருத்தம்,  தன் திருத்த மென்பொருள் கோளாற்றினல்  பின்னர் வந்து சேரும் பிழைகள்,  வெளியார் தலையீட்டினால் புகுத்தப்படும் அனுமதி இல்லாத திருத்தம் என்பவைதாம்.   கருத்தில் திருத்தம் செய்யவேண்டிய நிலையைக் குறிக்கமாட்டாது.

குறிப்பு:

கோளாறு + இன் + ஆல் = கோளாற்றினால்.  கோளாறு எனில் அறிஞர் சரியென்று கொண்டதை (  கோள் ) (  அறு >) ஆறு -  அறுத்து முரண்படுத்துவது என்பது பொருள் .

மறுபார்வை:   21.11.2019ல் செய்யப்பட்டது.




சனி, 19 ஜனவரி, 2019

எமன் அமைப்பில் ( ஜனநாயகம்) மக்களாட்சிமை இல்லை!

ஒரு நாட்டில் எதிர்கட்சிகள் கூடி மக்களாட்சித் தன்மை அழிந்துவருகிறது என்று ஓலமிட்டனர்.

நாட்டில் ஒரே எமன்  இருந்தால்  அது சரியில்லை.  ஒரே எமன் எல்லாவற்றையும் முடிவு செய்வது போல இருப்பதால் மக்களாட்சி முறைக்கு அது எதிர்த்தன்மை உடையது என்று எதிர்க்கட்சிகள் முழங்கின.

எதற்கும் ஒரு மாற்று மருந்து இருக்கவேண்டுமே!

சரி, ஒரு குழுவை அமைத்து நாட்டை நடத்துவோம்.  ஒரே எமன் போய் ஒரு நாட்டை ஆளுவது போல் இல்லாமல்  எமக்குழு ஒன்று  ஆட்சியில் இருப்பதுபோல் இருந்தால் எந்த உயிரை எப்போது வாங்குவது என்று எளிதாகவே  முடிவு செய்து விடலாம்.  எல்லா உயிர்களும் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும்.

செய்தியாளர்களுக்கு இது மாறுபாடாகத் தோன்றியது.  ஒரே எமன் நடமாடுவதையே இப்போது  செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை. ஒரு குழு நடமாடினால்  எம நடமாட்டம் பல மடங்காக அல்லவோ கூடிப்போகும்?

இப்படி அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

குழு எமன்`களா  அல்லது ஒற்றை எமனா என்று பரிந்துரை செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்கள்.

எமன் அமைப்பில் மக்களாட்சித் தன்மை இல்லைதான்.  என்ன செய்வது என்பதுதான் புரியவில்லை.  பல எமன்`கள் முறைக்கு  எப்படி வாக்களிப்பது என்று மக்களுக்கும் மருட்சியாகவே இருந்தது.

வெள்ளி, 18 ஜனவரி, 2019

சக்தி சத்தி என்பவை

இன்று   சக்தி  என்ற சொல்லின் அமைப்பை அறிந்துகொள்வோம்.

இச்சொல் தமிழில் பண்டைக் காலம் தொட்டு வழங்கி வந்தாலும்  சக்தி என்ற சொல்வடிவம்  சங்க இலக்கியங்களில் காணக் கிட்டுவதில்லை. பழந்தமிழில் சக்தி என்பது சத்தி என்றும் பக்தி என்பது பத்தி என்றும் முக்தி என்பது முத்தி என்றுமே வழங்கின.

பக்தி என்பது முன் பற்றி > பத்தி என்பதுதான்.

பற்று :  தெய்வப்பற்று.  பற்றி :  பற்றுடன் இருத்தல்.  இது பத்தி என்று திரிந்து
வழக்குப்பெற்ற போது பற்றி என்பது வழக்கிறந்தது.

பத்து  ( பற்று)  எனவே வழங்கியிருக்கலாம்  ஆனால் பத்து என்பது ஒருவிதச்
 சொறியையும் குறித்த காரணத்தால் வேறுபடுத்தப் பத்தி என்று திரியவேண்டியதாயிற்று.

முக்தி என்பது முற்று > முத்து > முத்தி > முக்தி என்பதே.
இது முது > முத்து >  முத்தி >  முக்தி  எனினுமாம்.

முத்தி என்பது  சிறுபிள்ளைகட்குப் பெரியோர் கொடுக்கும் முத்தத்தையும் குறித்ததால் முக்தி என்பது பின்னாளில் திரிந்து  இறைப்பற்று முதிர்வில் அடையும் வெற்றிநிலையைக் குறித்தது.

ஆனால் சக்தி என்பது சற்று வேறு விதமாக அமைந்தது.  எப்படி என்று பார்ப்போம்.

சக்தி என்பதன் முந்து வடிவு சத்தி என்பது.

முருகப் பெருமானுக்குச் சத்திவேல் என்றும் பெயருண்டு.

சத்தி என்பது முந்துவடிவில்  சத்து என்பது,

சத்து என்பதோ முன்வடிவில்  தத்து என்பதாம்.

தத்து என்பது தன்னுடையது என்று பொருள்படும்.

தன் து  >  தத் து > சத்து >  சத்தி >  சக்தி  ஆகும்.

தான் >  தன் :    தன் து.   அதாவது தன்னது, தன்னிலிருந்து வெளிப்படுவது.

து என்பது உடையதாதல் என்பதை உணர்த்துவது,

குழாம் > குழாத்து:   குழாமினுடையது.
உடை > உடைத்து :  உடையது.
முதல் >  முதற்று  முதலாக உடையது.   முதல் து என்பதே இது.

ஆகவே  தத் து என்பது தன்னில் இருப்பது;  ஒரு பொருளில் அல்லது உயிரியில் இருந்து வெளிப்படுவது.   உயிரி -  பிராணி.

தன் >  த  என்பது கடைக்குறை.

த + து =  தத்து > சத்து .

தகரம் சகராமாய்த் திரியும்.

தனி > சனி  (  தனித்தன்மை வாய்ந்த கிரகம்)
தம் >  சம்.    தம் என்பது பன்மை;  தம் என்பது இரண்டு அல்லது  அதற்கு மேற்பட்ட தன்-கள் சேர்ந்தது   ஆகும்.
தங்கு  >  சங்கு    (  ஓர் உயிரி தங்கி இருக்கும் கூடு)
இவ்வாறு பல உள.

தத்து சத்து என்பவற்றில் இடை வந்த தகர ஒற்று புணர்ச்சியினால் வந்தது.

அம்மனில் இருந்து வெளிப்படும் ஆற்றல் சத்தி  அல்லது சக்தி.
அதாவது அம்மன் தன்னிலிருந்து வெளிப்படுவது தன்னதாய்க் காட்டுவதும் ஆகும்.

இவ்வாறு  உணர்ந்துகொள்க.