திங்கள், 12 நவம்பர், 2018

Lion entered a house வீட்டினுள் சிங்கம்

Read this amazing story in:

https://www.indiatoday.in/india/story/lioness-enters-house-gujarat-what-she-does-next-will-make-you-smile-1386949-2018-11-12

வீட்டினுள் சிங்கம்

இன்று நல்ல மழை; இனிய குளிர்.

நிலம்குளிரப் பெய்மழையால்
  நெஞ்சும்  குளிர்ந்ததே-----  இங்கு
நேற்றுவரை மேய்ந்த குருவி
  எங்கு  மறைந்ததோ.

கலங்கள்கொண்டு வெளியில்இட்டால்
  நிறைந்து  வழிந்திடும் -----வீட்டுக்
குழாய்கள் நீரைத் தந்த தாலே
 கண்டு களிக்கிறோம்,

பனிபடர்ந்த  நாட்டில்போல
 இனிய குளிரிதே ---- குளிர்
ஊட்டு கருவி ஓட்டமின்றி
 உறங்க முயல்கிறோம்,

எண்ணம்ஓடித்  தண்மைதன்னில்
கரைந்து போனதோ --- கவி
பண்ண வேண்டும் என்னில் ஈண்டு
வரிகள் வேணுமே!

உறக்க தேவி பதுக்க வந்து
என்னை  அழைக்கிறாள்----நேரம்
இருக்கும் நாளைக் காலைவந்து
கவிதை விளைக்கிறேன்,

பதுக்க -   மெல்ல.

ஞாயிறு, 11 நவம்பர், 2018

தீபாவளியும் தொழிலாளர்களும்

சுற்றுப்புறம் தூய்மைசெய்  தொழிலாளர் எமதுநண்பர்
பற்றுமிக அவர்பால்வை; பாவமவர்  காலைமாலை
உற்றபணி செய்துயர்வார்; ஊர்சிறக்க உழைத்திடுவர்.
மற்றெவரோ நல்லகாற்று மூச்சிழுக்க வழங்குபவர்?

தீவளிக்குப் பலகாரம் தேர்ந்தெடுத்துக் கொணர்ந்துண்டாய்
ஆவனயா வும்செய்தாய்  அலங்காரம் பலவிளைத்தாய்
நாவுயர்த்தும் ஆண்டவனோ நம்தொழிலா ளர்துணைவன்;
கூவியழைத் தவர்க்கெல்லாம் நாவினிக்க விருந்தளிப்பாய்,

செய்தபல ஊணனைத்தும் சீருடனே அவர்முன்வை;
வைததுண்டோ அவர்களைநீ  வாயில்கை முட்டிக்கொள்;
நெய்ச்சோற்றை  நீகொடுப்பாய்; நேரிதாகப் பாலும்கொடு
வையமெல்லாம் வாழ்வுபெறும் பைநிறையும் கைநிறைம்மே.


நிறைமே - நிறையுமே. 
தீவளி -  தீபாவளி.  ( பா - இடைக்குறை).
வட இந்தியாவில் தீவாளி என்று வரும்.

பிழைத்திருத்தம் பின்.