ஞாயிறு, 14 அக்டோபர், 2018

இலக்குவன் கோடிழுத்த தகையோன்.

நம் தொன்மங்களில் வரும் அழகிய பல பெயர்களில் சிலவற்றைத் தமிழின் மூலமாகப் பொருள் கூறிய இடுகைகளை முன்பு வாசித்திருப்பீர்கள்.

இர்  >  இர் +ஆம் + அன் =  இராமன்.  ( தமிழின்படி பொருள்: கருநிறமுடையோன்.  உலகில் மிகப் பெரியது விண்.  அந்த விண்ணின் நிறம் கருமை.  அங்கு சூரியன் (< சூடியன் ) ஒளிவீசுவதால் அது (கருமை) அவ்வளவாகத் தோன்றுவதில்லை. இரவில் பார்த்தாலே ஓரளவு புரியும்.  அந்தக் கருமையை நிலவு நட்சத்திரங்கள் முதலியவை கொஞ்சம் கலைத்துவிடக்கூடும்.  இராமர் விண்ணின் நிறத்தவர். கண்ணனும்தான். )

இர் > இரா > இரா+வண்ணன் > இராவணன் ( ஓர் ஒற்றுக் குறைந்த இடைக்குறை).  எல்லாம் என்பது எலாம் என்று கவிதையில் வருகையில் அழகாக உள்ளதன்றோ?

அனுமன்:   மனிதனுக்கு அண்மையானவன்.   அண் = அன் =அனு.   மன் - மனிதன் என்பதன் அடிச்சொல்.
கைகேயி -  கை நீட்ட முடியுடையவள். (முன் இடுகைகள் காண்க).

பீமன் = பீடுடைய மன்னன்.  பீடு+ மன் = பீடுமன் > பீஷ்மன்.

தமிழ்ச்சொற்களைக் கவினுறுத்த ஜ, ஷ, ஹ  இன்ன பிற தோன்றி இன்புறுத்தும்.  வேறு சில சொற்களும் விளக்கியுள்ளோம்.  அவற்றைப் பழைய இடுகைகளில் காண்பீராக.

இன்று இலக்குவன் அல்லது லட்சுமணன் என்ற பெயரைப் பார்ப்போம். இதுவும் இராமகாதையில் உள்ள பெயரே.  காதை = கதை.

சீதையைக் கட்டுப்படுத்தத் தரையில் ஒரு கோடு வரைந்து இதைத் தாண்டிச் செல்லாதே என்று கட்டளை இட்டவன் இலட்சுமணன்.  "இலட்சு" என்பது இலக்கு என்பதும் ஒருபொருள் குறிக்கும் திரிபுகள்.

ஒ.நோ: பட்சி >< பக்கி ;  நக்கத்திரம் > நட்சத்திரம்.  பக்கம் > பட்சம்

கோடும் இலக்கும் தொடர்புடைய கருத்துகள். கோடிழுத்த இடமே இலக்கு ஆகும்.

இழு> இலு என்றாகும். இன்னொரு எடுத்துக்காட்டு:  பழம் > பலம்.   மாம்பலம் என்ற ஊர்ப்பெயர் காண்க.  பழ ஆகாரமே பல ஆகாரமாகி, பலகாரம் என்று தோன்றி பழத்துடன் பிற ஆகாரங்களையும் குறித்ததாகத் தமிழறிஞர் கூறியுள்ளனர். 

அலங்காரம் என்பது அழகு அல்லது அழகுபடுத்துதல் என்பதே.   அடிச்சொல்: அழ.  அழ என்பதன் திரிபு  அல.   அலங்காரம் என்பதை அலம்+காரம் என்று சிலர் பிரிப்பர்.  உண்மையில் இது :  அல+ கு + ஆர் + அம் ஆகும்.   அழகுக்கு நிறைவு அல்லது அழகுசேர் நிறைவு என்பதாகும்.  ஆர்:  நிறைதல்.  அம் விகுதி.
கு என்பது சேர்விடம் குறிக்கும் ஓர் இடைநிலை. இது வேற்றுமை உருபாய் பிறவிடத்து வரும்.  அல+ கு என்பது அலங்கு என்று மெலிந்து நின்றது,  அலக்கு என்று வலிக்கவில்லை . அதாவது வல்லெழுத்து மிகவில்லை.  அலங்கு ஆர் அம் - அலங்காரம் :  அழகின் நிறைவு எனினுமாம்.  இதை இங்கு சொல்லக் காரணம்:  இழு> இலு போலத் திரிந்தது அழ>அல என்பது;  பழ > பல என்பதுமது.

இனி இலக்குவனுக்குத் திரும்புவோம்.  இலு> இலக்கு > இலக்குவன், இலக்குமணன் என்பது இன்னொரு வடிவம்.  அதைப் பின் விளக்குவோம்.

இலக்குவன் என்பது காரணப்பெயர். இயற்பெயரன்று.  தசரதன் என்பதும் காரணப்பெயரே. இயற்பெயர்களைக் காண்டல் அரிதே.  கோடிழுத்ததால் இப்பெயர் வந்தது என்பதறிக.   வால்மிகி தமிழறிந்தவர் என்பது தெளிவு. மற்றும் சங்கப்புலவருமாவார்.


இலு + கு = இலக்கு.  கோடிழுத்த இடம்.


























அடிக்குறிப்புகள்:

இந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு விடைதெரியுமா?

வாசித்தல்: இச்சொல் எப்படி அமைந்தது?

வாசித்தல் என்ற சொல் எப்படி அமைந்தது?

சனி, 13 அக்டோபர், 2018

அகலியை ( அகலிகை )

அகலியையின்  வரலாறு நம்மைச் சிந்திக்க வைப்பதாகிறது,

இதைப்பற்றிச்  சில எழுதியுள்ளோம்.

கீழ்க்கண்ட இடுகையையும் படித்து இன்புறுவீராக.

https://bishyamala.wordpress.com/2018/10/13/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

வெள்ளி, 12 அக்டோபர், 2018

தம் சம்; தம் தா:> சந்தா.

சந்தா என்ற சொல் நம் பழைய நூல்களில் இருந்து கண்டால் இங்கு பின்னூட்டம் செய்யுங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுவாக்கில் இச்சொல் வழக்கிலுண்மை உணரப்பட்டது போலும். பதினெட்டாம் நூற்றாண்டுக்குமுன் இச்சொல் வழங்கிய நூல்கள் கிடைக்கவில்லை,

சம் என்பது சேர்தல் குறிக்கும் சொல்.

தான் தன் தாம் தம் என்ற தமிழ்ச் சொற்களை நினைவு கூரவேண்டும்.

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள மனிதர்கள் தாம் தம் என்பவற்றைச் தற்சுட்டாகப் பயன்படுத்துவர்.  இரண்டு தான் ஒரு தாம்; இரண்டு தன் ஒரு தம். என்று சற்று நெகிழ்பாணியில் குறிக்கலாம்.

தம் என்பது பின் சொற்களைப் பிறப்பிக்க -  சம் என்று திரிந்தது,  பின் அது எச்1 என்1 காய்ச்சல்போல் அயலிடங்களையும் தாவிக் கால் பதித்தது.

ஆகவே தம் என்பது சேர்ந்திருத்தல் சேர்ந்த காலத்து உரிமையாய் இருத்தல் என்று பொருள்தரும்.  எடுத்துக்காட்டு:  தம் கொள்கைகள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒன்றாயிருக்கையில் உருவான கொள்கைகள் என்பது பொருள்.

ஒரு இயக்கித்திலோ கூட்டுறவு அமைப்பிலோ சேர்ந்துவிட்டால்  மாதம் தோறும் பணம் கேட்பர். இது உறுப்பினர் கட்டணம்.எனப்படும்.  தம் என்பது சம் என்று திரிந்தது,  தா வென்பது கொடு என்பது.  சம் தா -=  சேர்ந்ததும் தா என்பதே ஆகும். தம்மில் ஒருவர் ஆனதற்குத் தா என்பதும் சரிதான்.

தம் > சம் > சம் தா > சந்தா,

த என்பது பல சொற்களில் ச என்று மாறியுள்ளது:  எ-டு:  தங்கு > சங்கு,  மொழி இடையிலும் வரும்:  அத்தன் > அச்சன். மைத்துனன் > மைச்சுனன் > மச்சான்,

வைத்து -  வச்சு. ஐகாரம் அகரமாகவும் தகரங்கள் சகரங்களாயும் மாறின.

தம்மில் சேர்ந்தால் தா >  சம் தா > சந்தா.

தம் என்பதில் இருந்த தற்சுட்டுப் பொருண்மை  சம் என்பதில் மறைவெய்தியது சம்முக்கு நன்றாயிற்று. இம்மறைவினால் சம் முன்னிணைந்த பதங்கள் மூவிடங்களிலும் வழங்கும் விடுதலையை அடைந்தன. இஃது இவ்வாறாயினும் தமையன் தனையன் ( தனயன்) முதலிய சொற்கள் முதனிலைத் திரிபின்றியே காலவோட்டத்தில் தம் தற்சுட்டுப் பொருண்மையை இழப்பனவாயின. திரிபின்றி வழக்கில் விளைந்த பொருண்மை இதுவாகும். ஆனால் அவையும் ஐகாரக் குறுக்கத்திற்கு உட்படவேண்டியதாயின.

அடிக்குறிப்பு:

வாய்தா என்ற சொல்லும் சந்தா என்பதைப்போல் தா என்று முடிகிறது. இது அமைந்தது எப்படி?

வாய் என்பது வருவாய் அல்லது வருமானம்.  இது பணமாகவோ நெல்லாகவோ பிறவாகவோ இருக்கலாம்.   தா என்பது கட்டணமாகச் செலுத்தவேண்டியதைக் குறிக்கிறது.  இதை வாக்கியமாக்கினால் வருவாயில் ஒரு குறித்த பகுதியைத் தா என்று வந்து பொருளாகும்.  தமிழ்ப்பேராசிரியன் என்போனையும் தடுமாறச் செய்யும் இச்சொல் உணர்ந்தோர் சிலரே.  பிறமொழியாளர் இச்சொல்லை மேற்கொண்டிருப்பர்.  அதனால் அது பிறமொழிச் சொல் என்போன் "விளங்காத வெள்ளரி"  ஆவான்.  இதை உருவாக்கியவன் ஒரு சிற்றூர் ஆசிரியனாய் இருக்கவேண்டும்.  அவனுக்கு நல்ல மூளை இருந்தது தெரிகிறது.

வசந்தா என்பது பெண்பெயர்.  இது உன் மனத்தை என் வசம் தா என்று அணிவகையில் இரட்டுறலாகப் பொருள் தரலாம் எனினும் அது வசந்தம் - வசந்தி என்ற சொல்லின் விளிவடிவமே ஆகும்.  அது செலுத்தவேண்டிய கட்டணத்தைக் குறிக்கவில்லை.

அடிக்குறிப்பு:  15.10.2018ல்  சேர்க்கப்பட்டது.