சனி, 11 மார்ச், 2017

root word "il" and changes...brief view

இலுப்பை மற்றும் இனிமை
==========================

இலுப்பைக்கும் இனிமைக்கும் உள்ள தொடர்பினை அறிந்துகொள்வோம்.

இலுப்பைக் காய் பழுத்தவுடன் சர்க்கரை போலும் ஓர் இனிமை இதில் உள்ளது. யாம் சுவைத்துப் பார்த்தவை வியட்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாட்டில் விளைந்தவை. இதை மலாய் மொழியில் "சிக்கு" என்பார்கள்.

இலுப்பை என்ற சொல்லின் அடி, இல் என்பது. அது சிதைவு அடையாமல் சொல்லில் இன்னும் வாழ்கின்றது.

இனிமை என்ற சொல்லின் அடி இன் என்பது. இது, இன்> இனி> இனிமை என்று அமைந்தது. இன்மை (இல்லாமை) என்பதில் வரும் இன் - சந்தியில் தோன்றியதாகையால் அது வேறு என்க.


இல் என்பது இன் என்று மாறும். இவ்விரண்டில் இல் என்பதே மூலம். இல் என்பது பல்பொருள் கொண்ட ஓர் மூலச்சொல். இதன் எல்லாப் பரிமாணங்களின் உள்ளும் இங்கு யாம் புக முற்படவில்லை, பரிமாணம் ஆவது பரிந்து சிறப்பது. அதாவது தோன்றிப் போல இருப்பவற்றினின்று அழகுற்று வேறுபடுவது,, தோன்றிப் போன்மையின் வேறுபடல். மாணுதல் = சிறத்தல். மாண்> மாணு > மாணம். எனவே பரிமாணம். பரிதல் - வெளிப்படுதல். பரி > பரிதி. முன் வெளிப்பட்டதாகிய சூரியன். அதிலிருந்து வெளிப்பட்டன ஏனைக் கோள்கள். காற்றுப் பரிதல் ( வெளிப்படல்) என்னும் பேச்சு வழக்கை நோக்குக.. இத் தடப் பெயர்வு நிற்க



இல் = இன்.
இல் >இலுப்பை
இன் > இனிப்பு.

இல்> இலுப்பு> இலுப்பை.
இன் > இனுப்பு > இனிப்பு.
இலுப்பு> இனுப்பு > இனிப்பு.

இனிப்பு என்பதைப் பேச்சில் இனுப்பு என்று பலுக்குவோர் பலர் உளர். அது இனிப்புக்கு முந்திய வடிவம்.

தமிழில் இனுப்பு என்பதை இனுப்பு என்றே பேசினோரும் அதை இனிப்பு என்று பேசினோரும் என இருசாரார் இருக்க, இனிப்பு என்பதே எழுத்தில் முதலில் வந்து நிலைத்துவிட்டது;

மொழி ஆய்வு வேறு. மொழியை தற்கால நிலைப்படி மரபு காத்தல் என்பது வேறு. பேச்சுக்குப் பிந்தியது எழுத்து. விரி வரிக்க - விவரிக்கத் தேவை இல்லை.

Shall meet and greet again. Stay tuned.
This was written sometime back. Shall edit later.

கச்சடா என்ற பேச்சு வழக்குச் சொல்லை...

இப்போது கச்சடா என்ற பேச்சு வழக்குச் சொல்லைப் பார்க்கலாம்.

கசப்பு என்பது வெறுக்கத் தக்கதாக இருந்துவந்துள்ளது. அடா என்பதும்
அடர்வு, அடைந்துநிற்பது என்று பொருள்தரும்.  அடு> அடர்> அடர்வு.
அடு>அடா. ஆ என்பது ஓர் விகுதி. இது நிலா ( நில்+ஆ),  கலா ( கல்+
ஆ ), பலா ( பல் + ஆ: பல சுளைகளை உடையது ) எனப் பல சொற்களில் வரும்; மேலும் பெயர் அல்லாத சொற்களிலும் வரும்:  இல்> இலா; செல் > செல்லா எனக் காண்க. வளைவு குறிக்கும் வில்> விலா (வயிறு அடுத்த எலும்பு).  ஐ என்பதும் ஆ என்று திரியும்: தலை> தலா. இவை போதும். விளியிலும் வரும்: கண்ணன் > கண்ணா.

ஆக, வெறுக்கத்தக்கது அடர்வாய் இருக்கும்  நிலையே கச்சடா.

இங்கு கச என்பது புணர்ச்சியில் கச்ச என்று சகரம் இரட்டித்தது.

பசு(மை)+ அடி = பச்சடி போல. பசு என்பது பச்சு > பச்ச என இரட்டித்தது.

அறிந்து மகிழ்வீர்

A densely constituted detestabe stuff!

சூத்திரர் comparison with other words

continue reading from last post

ஒன்றைச் சூழ்ந்து (ஆலோசித்து) அறிந்து திறம் காட்டுவோரே
சூத்திரர் ஆவர். எனவே மூளைவேலையர் என்பது பொருள்.
இசை பாடுதல் சூத்திர வேலை. இதற்கு மூளையும் வேலை செய்யவேண்டும்.

சூழ்த்திறர் என்பதில் உள்ள ழகர ஒற்று மறைந்தது.

இதுபோன்று திரிந்த இன்னொரு சொல்லைக் கவனித்து, இதனுண்மை
நாமுணரலாம்.

வாத்தியங்கள் என்பவை திருமணம், விழாக்கள் முதலிய நிகழ்ச்சிகளில் இடம்பெறுவன.  இயம் என்றாலே இசைக்குழு என்று
பொருளுண்டு.  வாழ்த்தி இசைக்கும் குழு  வாழ்த்தியம். இதிலுள்ள‌
ழகர ஒற்று மறைந்து அது வாத்தியம் என்றானது.  வாழ்த்துதல் என்பதைச் சிற்றூர் மக்கள் வாத்துவது என்றே ழகர ஒற்று இல்லாமல்
பேசக் கேட்கலாம்.  மக்கள் கல்வி பெறப்பெற வாழ்த்து என்பதை
வாத்து என்று சொல்வது தவறு என்று போதிக்கப்படுவதால் திரிபுகள்
மறைந்துவிடும். ஆனால் முன்காலத்து ஆட்சிபெற்ற திரிபுகள் நம்
மொழியினின்று அகலா. ஆர்கெஸ்ட்ரா போன்ற ஆங்கிலச் சொல் அதனிடத்தை வந்து பிடித்துக்கொண்டால் அப்புறம் வாத்தியம் என்ற‌
சொல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் வாய்ப்பு ஏற்படும்,

சூத்திரம் சூத்திரர் முதலிய சொற்கள் பொருளிழிவு உற்றவை. நாற்றமென்ற சொல்போல இப்போது பொருள் இழிந்தது அல்லது சொற்பொருள் அழிந்தது. பிராமணர் அல்லாதவர் தாங்கள் எதையும் அறிந்து அமைப்பவர்கள் என்று ஒருகாலத்தில் ஒரு தற்காப்பு வாதத்தை முன் நிறுத்தியிருக்கலாம். உயர்வு அளிக்கப்படாதவிடத்து அது நிகழ்வது இயல்பு ஆகும். அதனால் அவர்கள் சூத்திரர் என்று தங்களைக் குறித்துக்கொள்ளவும் பிறரால் குறிக்கப்படவும் ஆனது.
பிற்காலத்து நிகழ்வுகளில் சாதி ஒன்றையே மக்கள் நினைவில் கொண்டதனால் சொற்பொருளை மறந்தனர்.சொல்லும் இழிநிலைக்குத்
தள்ளுண்டது என்பதறிக.